20 ஆண்டுகளுக்குப் பின் கலிபோர்னியாவை உலுக்கிய பயங்கர நிலநடுக்கம்
ரிட்ஜெர்சட்: 20 ஆண்டுகளுக்குப் பின் கலிபோர்னியாவை பயங்கர நிலநடுக்கம் உலுக்கியுள்ளது. அடுத்தடுத்து நில அதிர்வுகள் ஏற்பட்டு வருவதால் பெரும் பாதிப்பு ஏற்பட்டுள்ளது.
அமெரிக்காவின் லாஸ் ஏஞ்சல்ஸ் நகரில் இருந்து 150 மைல் தொலைவில் உள்ள ரிட்ஜெர்செட் என்ற இடத்தை மையமாக கொண்டு நிலநடுக்கம் ஏற்பட்டது. கடந்த 20 ஆண்டுகளில் கலிபோர்னியாவை தாக்கிய மிகவும் சக்திவாய்ந்த நிலநடுக்கம் இது.

நிலநடுக்கத்துக்குப் பின்னர் 1,700 முறை நில அதிர்வுகள் ஏற்பட்டன. இது ரிக்டரில் 5.4 ஆக பதிவாகி இருந்தது.
இந்த நிலநடுக்கத்துக்கு பிந்தைய அதிர்வானது சியர்லெஸ் பள்ளத்தாக்கு பகுதி அருகே மையமாக கொண்டு ஏற்பட்டது.
திரைப்படங்களில் பார்ப்பதைப் போல ஒரு பயங்கரமான நிலநடுக்கமாக உணர்ந்தோம் என்கின்றனர் ரிட்ஜெர்செட்வாசிகள். ஒவ்வொரு முறை நில அதிர்வு ஏற்படும் போதும் ஒட்டுமொத்தமாக கட்டிடங்கள் குலுங்கிக் கொண்டே இருந்தன என்றும் பீதியுடன் தெரிவித்தனர்.

நிலநடுக்கம் ஏற்பட்ட பல இடங்களில் வாயு கசிவு ஏற்பட்டுள்ளது. சில இடங்களில் தீ பிடித்துள்ளன. பல இடங்களில் சாலைகள் பிளவுபட்டுள்ளன. லாஸ் வேகாஸ் முதல் ஆரஞ்ச் கவுண்ட்டி வரையும் கலிபோர்னிய நகரம் முழுவதுமே பெரும் சேதத்தை எதிர்கொண்டிருக்கிறது.












Click it and Unblock the Notifications