லண்டன் பேரணியில் பாகிஸ்தான் மக்கள் கட்சி தலைவர் பிலாவல் பூட்டோ மீது தாக்குதல்!

Subscribe to Oneindia Tamil

லண்டன்: லண்டனில் பாகிஸ்தான் மக்கள் கட்சி சார்பில் நடந்த பேரணியில் பாகிஸ்தான் மக்கள் கட்சியின் தலைவர் பிலாவல் பூட்டோ மீது பிளாஸ்டிக் பாட்டில்கள் மற்றும் ஷூக்கள் வீசி தாக்குதல் நடத்தப்பட்டது.

பிலாவல் பூட்டோ காஷ்மீர் பிரச்னையில், காஷ்மீரை மீட்பேன் என பேசியதால் சர்ச்சை உருவானது. சர்ச்சைக்குரிய கருத்துகளால் அவருக்கு பெருமளவில் எதிர்ப்புகள் உருவாகி வருகின்றன.

Bilawal Bhutto attacked at London march

இந்நிலையில் லண்டனில் நடந்த பேரணியில் பாகிஸ்தான் பிரதமர் நவாஸ் ஷெரீப் மற்றும் பிலாவல் தந்தை ஆசிப் அலி சர்தாரி ஆகியோர் மீது எதிர்ப்பு தெரிவித்து பதாகைகள் ஏந்தி ஆர்ப்பாட்டம் செய்தனர். அப்போராட்டத்தின் போதுதான் பூட்டோ, அடையாளம் தெரியாதவர்களால் தாக்கப்பட்டுள்ளார்.

பாகிஸ்தான் கிரிக்கெட் முன்னாள் கேப்டனும் தெரிக்-இ-இன்சாப் கட்சியின் தலைவருமான இம்ரான் கட்சியின் ஆதரவாளர்கள் தான் இச்சம்பவத்தில் ஈடுபட்டுள்ளதாக லண்டன் போலீசார் தெரிவித்துள்ளனர்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+