ரியோ ஒலிம்பிக்கில் சைக்கிள் போட்டி நடைபெறும் பகுதியில் பயங்கர வெடி சத்தம் !
ரியோ டி ஜெனிரியோ: ஒலிம்பிக் போட்டிகள் நடைபெறும் ரியோ நகரில் திடீரென பயங்கர சத்தம் கேட்டதால் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.
பிரேசில் நாட்டின் ரியோ டி ஜெனீரோ நகரில் உள்ள மரகானா மைதானத்தில் ஒலிம்பிக் தொடக்க விழா இன்று அதிகாலை பிரமாண்டமான முறையில் தொடங்கியது. இந்த போட்டிகளில் 206 நாடுகளை சேர்ந்த 11 ஆயிரத்திற்கும் மேற்பட்ட வீரர்- வீராங்கனைகள் பங்கேற்றுள்ளனர். போட்டிகளை காண பல்வேறு நாட்டினர் பிரேசிலில் முகாமிட்டுள்ளனர்.

இந்நிலையில், ஒலிம்பிக்கில் சைக்கிளிங் போட்டி நடைபெறும் பகுதியில் வெடிகுண்டு சத்தம் கேட்டுள்ளது. இதனால் அங்குள்ள பொதுமக்கள் அதிர்ச்சி அடைந்துள்ளனர். இதையடுத்து வெடிகுண்டு கண்டறியும் நிபுணர்கள் சம்பவ இடத்திற்கு விரைந்துள்ளனர். இதனால் யாருக்கும் காயம் ஏற்பட்டதாக தகவல் எதுவும் வெளியாகவில்லை. தொடர்ந்து போலீசாரும், பாதுகாப்பு படையினரும் அங்கு விரைந்து சென்று சோதனை நடத்தி வருகின்றனர்.
இதனிடையே, வெடிகுண்டு சத்தம் கேட்டுள்ள நிலையில் அங்குள்ள இந்தியர்கள் அனைவரும் பத்திரமாக உள்ளதாக தனது டுவிட்டர் பக்கத்தில் வெளியுறவுத் துறை அமைச்சர் சுஷ்மா சுவராஜ் தெரிவித்துள்ளார். மேலும், பிரேசில் நாட்டிற்கான இந்திய தூதர் தொடர்பில் உள்ளதாக சுஷ்மா கூறியுள்ளார்.












Click it and Unblock the Notifications