துபாய் ஷாப்பிங் மாலில் நடைபெற்ற ரத்ததான முகாம்
Subscribe to Oneindia Tamil
துபாய்: துபாய் அல் அய்ன் சாலையில் அமைந்துள்ள துபாய் அவுட்லெட் மாலில் 21.11.2013 அன்று காலை 11 மணி முதல் மதியம் 3.30 மணி வரை ரத்ததான முகாம் நடைபெற்றது.

இம்முகாம் துபாய் லத்திஃபா மருத்துவமனையுடன் இணைந்து இரண்டாவது ஆண்டாக நடைபெற்றது. உயிர் காக்கும் இச்சேவையில் பங்கேற்ற அத்தனை தன்னார்வ தொண்டர்களுக்கும் துபாய் அவுட்லெட் மால் நிர்வாகம் நன்றி தெரிவித்துக் கொண்டது.
மருத்துவமனைக்குச் சென்று ரத்ததானம் செய்வதை விட இதுபோன்ற ஷாப்பிங் மாலுக்கு வரும் போது ரத்தத்தை சேகரிக்கும் முயற்சி இலகுவானது. வாடிக்கையாளர்களுக்கும், பொது மக்களுக்கும் இது மிகவும் உபயோகமானது என பலர் கருத்து தெரிவித்தனர்.

நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகளை மக்கள் தொடர்பு மேலாளர் மர்யம் இன்சன் மற்றும் பலர் செய்திருந்தனர்.












Click it and Unblock the Notifications