அவசரம்.. விழுப்புரம் மாவட்ட மக்கள் கவனத்திற்கு!
துபாய்: விழுப்புரம் மாவட்டம் கள்ளக்குறிச்சி தாலுக்கா அசகளத்தூரைச் சார்ந்த தேவேந்திரன் வேலன் என்பவர் மரணமடைந்து வெகுநாளாக அவரது பிரேதம் அமீரகத்தில் இருக்கிறது.
அசகளத்தூரில் இலக்கம் எண் 85 ல் வசித்து வரும் அவரின் தந்தை பெயர் வேலன் தாயார் ராசம்மாள் மனைவி பெயர் இந்திராகாந்தி.
எவ்வளவோ முயன்றும் அவரது குடும்பத்தை தொடர்பு கொள்ள இயலவில்லை.. தொலைபேசி , அலைபேசி எந்த விவரமும் தெரியவில்லை.
அவர் மரணமடைந்த விவரமும் வீட்டார்க்குத் தெரியுமா என்றும் தெரியவில்லை..
இந்த ஊர் அல்லது அருகாமையில் வசிப்போர் இதனை அவர்கள் வீட்டுக்குத் தெரியப்படுத்தி இந்தியத் தூதரகம் 966 1 4884144 என்ற எண்ணுக்கு அழைத்தால் அவரின் உடல் ஊருக்கு அனுப்பபப்படும் அனைத்து உதவிகளையும் செய்து தருவார்கள்.
இந்தச் செய்தியை படிக்கும் விழுப்புரம் மாவட்டத்தினர் எப்படியாவது அவரது வீட்டுக்குத் தெரியப்படுத்தி உதவுமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.












Click it and Unblock the Notifications