டாய்லெட் சரியில்ல.. பிளைட்ட திருப்புங்க: மீண்டும் சோதனையில் சிக்கிய ட்ரீம்லைனர்

நேற்று மாலை மாஸ்கோவிலிருந்து டோக்கியோவிற்குப் புறப்பட்டது ஜப்பான் ஏர்லைன்ஸ் நிறுவனத்தின் போயிங் 787 ட்ரீம்லைனர் விமானம். இதில் சுமார் 141 பயணிகள் பயணம் செய்தனர்.
விமானம் புறப்பட்ட சிறிது நேரத்திற்கெல்லாம் விமானத்தின் கழிப்பறை வேலை செய்யவில்லை என பயணிகளிடமிருந்து புகார் எழுந்தது. அதனைத் தொடர்ந்து கழிப்பறையை சோதனையிட்ட ஊழியர்கள் மின்னணுக் கோளாறினால் இந்தத் தடங்கல் ஏற்பட்டிருப்பதைக் கண்டறிந்தனர்.
நெடுந்தூரப் பயணங்களில் கழிப்பறை செயல்படாமல் இருப்பது பயணிகளுக்கு அசௌகரியத்தை உண்டாக்கும் என முடிவு செய்த விமான நிறுவனம் , விமானத்தை மீண்டும் மாஸ்கோவிற்கே திருப்புமாறு உத்தரவிட்டது. எனவே, புறப்பட்ட ஐந்து மணி நேரத்தில் மீண்டும் தரையிறங்கியது விமானம்.
கடந்த 2009 ஆம் ஆண்டு வர்த்தக உலகில் அறிமுகப்படுத்தப்பட்டதிலிருந்தே ட்ரீம்லைனர் விமானங்கள் தொடர்ந்து ஏதேனும் தொழில்நுட்பக் கோளாறுகளைச் சந்தித்துக் கொண்டிருக்கிறது என்பது குறிப்பிடத்தக்கது.












Click it and Unblock the Notifications