சுற்றுலா பயணிகளுக்காக.. நிஜ போயிங் விமானத்தையே கடலில் மூழ்க வைத்த பஹ்ரைன் அரசு!
பஹ்ரைன் நாட்டில் உலகின் மிகப்பெரிய நீர்மூழ்கி கேளிக்கை பூங்கா வரும் ஆகஸ்ட் மாதல் முதல் திறக்கப்பட உள்ளது.
மனாமா: பஹ்ரைன் நாட்டில் உருவாக்கப்பட்ட உலகின் மிகப்பெரிய நீர்மூழ்கி கேளிக்கை பூங்காவிற்காக, ஒரு பெரிய போயிங் விமானம் கடலில் மூழ்கடிக்கப்பட்டுள்ளது.
சவுதி அரேபியாவுக்கும் கதாருக்கும் இடையே தனித்தீவாக அமைந்துள்ள நாடு பஹ்ரைன். எண்ணை கடலும், சுற்றுலாவும் தான் இந்நாட்டின் முக்கிய வருவாய்.
எனவே பஹ்ரைனில் சுற்றுலாவை மேம்படுத்த அந்நாட்டு அரசு பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. அந்த வகையில், தனியார் பங்களிப்புடன் உலகின் மிகப்பெரிய நீர்மூழ்கி கேளிக்கை பூங்கா ஒன்று அங்கு உருவாக்கப்பட்டுள்ளது.

கடலுக்கு அடியில் பூங்கா:
இந்த பூங்கா கடலுக்கு அடியில் ஏழு செயற்கை தீவுகளுக்கு இடையே, தையர் அல் முஹாராக் பகுதியில், சுமார் ஒரு லட்சம் சதுர மீட்டர் பரப்பில் அமைக்கப்பட்டுள்ளது. டைவிங் செய்யும் நீச்சல் வீரர்களுக்காகவே பிரத்யேகமாக இந்த பூங்கா உருவாக்கப்பட்டுள்ளது.

கலைநயமிக்க சிறப்பு அம்சங்கள்:
சுற்றுலா பயணிகளை கவர்வதற்காக கடலுக்கு அடியில் நிறைய சிறப்பு அம்சங்கள் உருவாக்கப்பட்டுள்ளது. அந்த வகையில், செயற்கை பவளப் பாறைகள், முத்து கிடங்குகள், கலைநயம்மிக்க சிறப்பங்கள் உள்ளிட்டவை இந்த பூங்காவில் இருக்கும்.

போயிங் விமானம்:
இதற்கு எல்லாம் மேலாக 70 மீட்டர் நீளமான மிகப்பெரிய விமான ஒற்றை இந்த பூங்காவுக்காக கடலில் மூழ்கடித்துள்ளது சம்மந்தப்பட்ட நிறுவனம். செயல்பாட்டில் இல்லாத போயிங் 747 வகை விமானமான இதில் டைவர்கள் போய் வரலாம். மேலும், அதில் பவளப் பாறைகளை வளர்க்கவும் பூங்கா நிர்வாகம் திட்டமிட்டுள்ளது.

சுற்றுச்சூழலுக்கு ஆபத்து:
இந்த பூங்கா வரும் ஆகஸ்ட் மாதம் முதல் திறக்கப்பட உள்ளது. இந்த பூங்காவால் சுற்றுச்சூழலுக்கு ஆபத்து எதுவும் வராது என பஹ்ரைன் அரசு தெரிவித்துள்ளது. இருப்பினும், இந்த பூங்கா கடலில் சுற்றுச்சூழலுக்கு நிச்சயம் தீங்கு விளைவிக்கும் என அச்சம் தெரிவிக்கின்றனர் சுற்றுச்சூழல் ஆர்வலர்கள்.
-
பாஜகவுக்கு ஆதரவு தரும் திமுக? டெல்லியை அதிர வைக்க போகும் மாற்றம்.. ரெடியாகும் மாஸ்டர் பிளான் -
வெளிநாடு போயிருக்கதே 'ரீல்ஸ்' பார்த்துதான் தெரியுது.. அமைச்சர் கீர்த்தனாவை கலாய்த்த மேயர் பிரியா! -
வெளிப்படையாக வார்னிங் கொடுத்த விஜய்.. சிங்கப்பெண் நிகழ்ச்சியில் நடந்த முக்கிய விஷயம்! -
விஜய் - மோடி சந்திப்புக்கு பின்பு நடந்த முக்கிய மாற்றம்! தரமான செயல்..! #தமிழ்த்தாய்வாழ்த்து -
HDFC வங்கியால் கடன் வாங்கிய அனைவருக்கும் ஷாக்.. உங்க EMI அதிகரிக்க போகிறது? -
கடைசியில் ட்விஸ்ட்.. பாஜக சொன்ன பாயிண்டு! காங்கிரஸ் வேட்பாளர் மீனாட்சி நடராஜன் வேட்புமனு நிராகரிப்பு -
வெளிநாட்டு வாழ் இந்தியர்களுக்கு NRI ஜாக்பாட்! கையில் டாலர் இருந்தா போதும், RBI கொடுத்த மெகா சலுகை! -
தலைவரை நீக்குங்க.. விஜய் வென்றதும் வாட்ஸ் ஆப்பில் பறந்த மெசேஜ்! ரெடியாகும் தங்க நகை.. என்ன நடக்குது? -
41 வயது பெண் கூட்டு பலாத்காரம்.. வலைதள வீடியோவால் சிக்கிய 10 பேர் கும்பல்.. கர்நாடகாவில் கொடூரம் -
எலான் மஸ்க்-ன் 'SpaceX' ஐபிஓ.. இந்திய முதலீட்டாளர்களுக்கு காத்திருக்கும் அரிய வாய்ப்பு! -
"அந்த" 14 கையெழுத்தால் வந்த சிக்கல்.. மம்தா வீட்டில் சிஐடி அதிரடி சோதனை.. மேற்கு வங்கத்தில் பதற்றம் -
தமிழ்நாட்டில் 6 ஐஏஎஸ் அதிகாரிகள் இடமாற்றம்.. தமிழக அரசு அதிரடி உத்தரவு!












Click it and Unblock the Notifications