பொலிவியாவில் பயங்கரம்.. கொரோனா சமூகப் பரவலின் கோரம்.. வீடுகள், தெருக்களில் கிடந்த 400 சடலங்கள்!
சாந்தா குரூஸ்: பொலிவியா நாட்டின் தெருக்களிலும், வீடுகளில் இருந்தும் கடந்த 5 நாட்களில் 400க்கும் மேற்பட்ட சடலங்களை போலீசார் மீட்டுள்ளனர். இவர்களில் 85 சதவீதம் பேர் கொரோனாவால் உயிரிழந்தவர்கள் என்ற அதிர்ச்சி தகவல் வெளியாகியுள்ளது.
உலக நாடுகளை கொரோனா வைரஸ் பெரிய அளவில் பாதித்துள்ளது. நாளுக்கு நாள் மரணங்கள் அதிகரித்து வருகிறது. இதுவரைக்கும் 6.15 லட்சம் பேர் உயிரிழந்து உள்ளனர். பொலிவியா நாட்டிலும் இதுவரை 60,991 பேருக்கு கொரோனா தொற்று ஏற்பட்டுள்ளது. 18,875 பேர் குணமடைந்துள்ளனர். 2,218 பேர் உயிரிழந்து உள்ளனர்.

வீடுகளில் சடலங்கள்
இந்த நிலையில் அந்த நாட்டில் கணக்கில் வராமல் பெரிய அளவில் கொரோனா உயிரிழப்பு ஏற்பட்டு இருப்பது அதிர்ச்சியை ஏற்படுத்தி வந்துள்ளது. இந்த நோயால் பாதிக்கப்பட்ட நோயாளிகள் தெருக்களிலும், வீடுகளிலும் உயிரிழந்து கிடந்துள்ளனர். இந்த சடலங்களை போலீசார் தற்போது மீட்டுள்ளனர்.

சாந்தா குரூஸில் அதிகம்
பொலிவியா நாட்டின் கோச்சபம்பா நகரில் இருந்து 191 சடலங்களையும், லா பாஸ் என்ற இடத்தில் இருந்து 141 சடலங்களையும் ஜூலை 15-20 ஆம் தேதிகளுக்கு இடைப்பட்ட நாட்களில் மீட்டுள்ளனர். நாட்டின் மிகப்பெரிய நகரமான சாந்தா குரூஸில் இருந்து 68 சடலங்களை மீட்டுள்ளனர். இந்த நகரில் இருந்துதான் அதிகளவில் கொரோனா உயிரிழப்பு நடந்து இருப்பதாக அந்த நாட்டில் இருந்து வெளியேறும் தகவல்கள் கூறுகின்றன.

போலீஸ் அதிகாரி பேட்டி
மீட்கப்பட்ட 400 சடலங்களில் 85 சதவீதம் கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டவை. மீதம் வேறு நோயால் இறந்து இருக்கலாம் என்று சாந்தா குரூஸ் போலீஸ் அதிகாரி இவான் ராஜாஸ் தெரிவித்துள்ளார்.
அந்த நாட்டின் கோச்சபம்பா மற்றும் லா பாஸ் ஆகிய இரண்டு நகரங்களும் அதிகளில் தொற்றுக்கு பாதிக்கப்பட்டு வருவதாக அந்த நாட்டின் தொற்று நோய் அலுவலகம் தெரிவித்துள்ளது.

தடயவியல் நிபுணர் பேட்டி
தடயவியல் நிறுவனத்தின் இயக்குனர் அன்ட்ரூஸ் புளோர்ஸ் அளித்து இருக்கும் பேட்டியில், ''ஏப்ரல் 1ஆம் தேதியில் இருந்து ஜூலை 19ஆம் தேதி வரை மருத்துவமனையின் வெளியில் இருந்து 3,000 சடலங்கள் மீட்கப்பட்டுள்ளன. இவர்கள் அனைவரும் கொரோனாவுக்கு பலியானவர்கள் அல்லது சந்தேகிக்கப்படுபவர்கள்'' என்று கூறியுள்ளார்.

கிராமமே தீ வைப்பு
சீனாவிலும் இதேபோன்று துவக்கத்தில் சடலங்கள் மீட்கப்பட்டதாக தகவல்களும் வீடியோக்களும் வெளியாகி இருந்த நிலையில், பொலிவியா சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. சீனாவில் ஒரு கிராமமே தீ வைத்து எரிக்கப்பட்டது என்று உறுதிபடுத்தப்படாத தகவல்கள் பரவி வந்தன. இதற்கு ஏற்றாற்போல் சீனாவும் முதலில் கொரோனாவுக்கு உயிரிழந்தவர்களின் எண்ணிக்கையை குறைத்து, பின்னர் அதிகரித்து காட்டியது என்பது குறிப்பிடத்தக்கது.
-
தமிழ் புத்தாண்டு பலன்: கன்னி ராசிக்கு 100 மார்க்.. ரேஞ்சே மாறப்போகுது.. பொற்காலம் ஆரம்பம் -
கோவை வடக்கு, மயிலாப்பூர்.. பாஜக போட்டியிடும் 27 தொகுதிகள் எவை? எடப்பாடி பழனிசாமி வெளியிட்ட அறிவிப்பு -
பிள்ளையை கிள்ளி விட்ட இஸ்ரேல்.. தொட்டிலை ஆட்டும் அமெரிக்கா! வெறி கொண்டு அடிக்கும் ஈரான்.. குண்டு மழை -
உளவுத்துறை சொன்னது என்ன? 155 சீட் பின்னணியில் அமித்ஷா தந்த கிரீன் சிக்னல்! எடப்பாடி முகம் பிரகாசம் -
3 அமைச்சர்களை எதிர்க்கும் தமாக! அதிமுக – பாஜக வழங்கிய தொகுதியை கவனிச்சீங்களா.. 5 தொகுதியும் கடினம் -
கரண்ட் பில் இலவசம்? இனி கட்ட வேண்டாமா? மத்திய அரசு ₹78,000 மானியம்! உங்க வீட்டிற்கு எப்படி வாங்குவது -
பிடுங்கப்படும் டிரம்பின் பவர்! அதிபர் பதவியிலேயே இருந்தாலும் அதிகாரம் இருக்காது.. நிலைமை மோசம்! -
நல்ல காலம் பொறக்குது.. தங்கம், வெள்ளியை முடிஞ்ச அளவு வாங்குங்க! ‘கோல்டுமேன்’ அடுக்கும் காரணங்கள்! -
மருமகள் உள்ளே, சீனியர் வெளியே? 55 கால சாம்ராஜ்ஜியத்திற்கு செக்! காட்பாடி திருப்பத்தின் பின்னணி என்ன -
இரட்டை இலையை விட்டுவிட்டு.. தாமரைக்கு தாவும் கூட்டணி கட்சிகள்! எங்கேயோ இடிக்குதே! -
ஈரானை சுத்துப்போடும் ‘பாராசூட் அட்டாக்’ டீம்.. டிரம்ப் பெரிய பிளான்.. போர் இப்போதைக்கு முடியாது? -
10 சவரன் கையில், 8 சவரன் பில்லில்! பழைய நகையை மாற்றினால் நடக்கும் ரகசியம்.. ஏமாறாமல் இருக்க இதோ வழி












Click it and Unblock the Notifications