கடைசியாக போனி கபூரை ஆரத்தழுவிய ஸ்ரீதேவியின் அந்த நிமிடங்கள்
கணவருடன் ஸ்ரீதேவியின் கடைசி நிமிடங்கள்
Recommended Video
துபாய்: கணவர் போனி கபூரை கடைசியாக ஸ்ரீதேவி ஆரத்தழுவிய வீடியோ காட்சிகள் சமூக வலைதளங்களில் வேகமாக பரவி வருகின்றன.
துபாயில் நடிகரும், உறவினருமான மோஹித் மார்வாவின் திருமண நிகழ்ச்சியில் ஸ்ரீதேவி, தனது கணவர் போனி கபூர், மகள் குஷி ஆகியோருடன் கலந்து கொண்டார்.
திருமண நிகழ்ச்சி முடிவடைந்த பின்னர் இன்னபிற சடங்குகள், வரவேற்பு நிகழ்ச்சிக்காக ஸ்ரீதேவியும் குஷியும் துபாயில் இருந்தனர். ஆனால் போனி கபூர் மட்டும் மும்பை வந்துவிட்டார்.
எங்கு போனாலும் கணவர் இல்லாமல் வெளியே போகாத ஸ்ரீதேவியின் மனவருந்தியது. அதேபோல் போனி கபூரும் உணர்ந்ததால் அவருக்கு இன்ப அதிர்ச்சி கொடுக்க நினைத்தார்.
நேற்று ஒரு நிகழ்ச்சியில் மயில் தோகை விரித்தது போல் நடனமாடி கொண்டிருந்த ஸ்ரீதேவியை பின்னால் இருந்து வந்த போனி கபூர் கட்டி அணைத்தார். கணவரின் வருகையால் மிகவும் மகிழ்ந்த ஸ்ரீதேவி அவரை ஆரத்தழுவினார்.
இந்த வீடியோ தற்போது வெளியாகி வருகிறது. ஸ்ரீதேவியுடன் கடைசியாக இருக்க வேண்டும் என்றே போனி கபூர் சென்றுள்ளது போல் விதி விளையாடியதாக ரசிகர்கள் வேதனை தெரிவிக்கின்றனர்.