என்.எஸ்.ஜி. விவகாரம்: பிரேசில், நியூசிலாந்து உள்ளிட்ட 5 நாடுகள் இந்தியாவுக்கு எதிர்ப்பு
தாஷ்கண்ட்: அணுசக்தி மூலப் பொருள் விநியோக நாடுகளின் கூட்டமைப்பான என்.எஸ்.ஜி.யில் இந்தியா உறுப்பினராவதற்கு பிரேசில், நியூசிலாந்து உள்ளிட்ட 5 நாடுகள் எதிர்ப்பு தெரிவித்துள்ளன.
48 நாடுகளை உறுப்பினர்களாக கொண்ட என்.எஸ்.ஜி.யில் இந்தியா உறுப்பினராவதற்கு தீவிரமாக முயற்சித்து வருகிறது. அமெரிக்கா அதிபர் ஒபாமாவின் பதவி காலத்துக்குள் உறுப்பினராகிவிட வேண்டும் என்பது பிரதமர் மோடியின் எண்ணம்.

அந்நாட்டின் அடுத்த அதிபர் தேர்தலில் போட்டியிடும் ஹிலாரி கிளிண்டன், டொனால்டு ட்ரம்ப் ஆகியோர் இந்த விவகாரத்தில் என்ன நிலைப்பாடு மேற்கொள்வார்கள் எனத் தெரியாது. ஆகையால்தான் இந்தியா படுதீவிரமாக முயற்சித்து வருகிறது.
இந்த குழுவில் உள்ள பெரும்பான்மையான நாடுகள் இந்தியாவுக்கு ஆதரவு தெரிவித்துள்ள நிலையில்
சீனா மிகக் கடுமையான எதிர்ப்பை தெரிவித்து வருகிறது. இந்தியாவை உறுப்பினராக்கினால் பாகிஸ்தானையும் சேர்க்க வேண்டும் என்று அந்நாடு வலியுறுத்தி வருகிறது. அணு ஆயுதப் பரவல் தடை ஒப்பந்தத்தில் கையெழுத்திடாத நாடுகள் என்எஸ்ஜியில் சேரக் கூடாது என்றும் சீனா கூறி வருவது குறிப்பிடத்தக்கது.
இந்தியாவோ, அணு ஆயுத பரவல் தடைச் சட்டத்தில் கையெழுத்திடாமலேயே உறுப்பினராக உள்ள பிரான்ஸ் நாட்டை மேற்கோள் காட்டி தன்னை உறுப்பினராக சேர்த்துக் கொள்ளவேண்டும் என்று கூறுகிறது. இந்த நிலையில், தென்கொரிய தலைநகர் சியோலில் என்.எஸ்.ஜி உறுப்பு நாடுகளின் ஆலோசனை கூட்டம் நடைபெற்றது.
இந்த கூட்டத்தில் இந்தியாவை என்.எஸ்.ஜியில் இணைத்துக்கொள்வது பற்றி விவாதிக்கப்பட்டது. அப்போது இந்தியாவை என்.எஸ்.ஜியில் சேர்த்துக்கொள்ள மெக்ஸிகோ உள்ளிட்ட நாடுகள் ஆதரவு தெரிவித்தன. அதேவேளையில், இந்தியாவை இணைப்பதற்கு சீனா, பாகிஸ்தான் மட்டுமல்லாது மேலும் 5 நாடுகள் கடுமையாக எதிர்ப்பு தெரிவித்தன.
பிரேசில் ,ஆஸ்திரியா, அயர்லாந்து, துருக்கி, நியூசிலாந்து ஆகிய நாடுகள் அணு ஆயுத பரவல் ஒப்பந்தத்தில் இந்தியா கையெழுத்திடவில்லை என்பதை மேற்கோள் காட்டி எதிர்ப்பு தெரிவித்துள்ளன. அதே வேளையில், பாகிஸ்தானை என்.எஸ்.ஜியில் உறுப்பு நாடாக இணைத்துக்கொள்வது பற்றி விவாதிக்கப்படவில்லை. முன்னதாக அணுசக்தி மூலப் பொருள் விநியோக நாடுகளின் கூட்டமைப்பான என்.எஸ்.ஜி.யில் இந்தியா உறுப்பினராவதற்கு சீனா அதிபர் ஜீ ஜின்பிங்கை நேரில் சந்தித்து பிரதமர் மோடி ஆதரவு கோரியிருந்தார்.
-
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
“விஜய் இன்னொரு கருணாநிதி என நிரூபித்து வருகிறார்”.. அட்டாக் மோடில் வானதி சீனிவாசன்












Click it and Unblock the Notifications