ஹாங்காங் ரயில் நிலையத்தில் தாய்ப்பால் கொடுத்து ‘அம்மாக்கள்’ நூதன போராட்டம்
ஹாங்காங்: ஹாங்காங்கில் உள்ள ரயில் நிலையத்தில் கிட்டத்தட்ட 100 இளம்தாய்மார்கள் பிளாட்பாரத்தில் அமர்ந்து கூட்டாக தங்களது குழந்தைகளுக்கு தாய்ப்பால் கொடுத்து, பொது இடங்களில் தாய்ப்பால் கொடுப்பதற்கு உள்ள கட்டுப்பாடுகளுக்கு எதிர்ப்பு தெரிவித்து வித்தியாசமாக போராட்டம் நடத்தியுள்ளனர்.
பொது இடங்களில் குழந்தைகளுக்கு பால் தருவது என்பது தாய்மார்களுக்கு எப்போதும் சிரமமான விஷயமாகவே உள்ளது. எனவே, இது தொடர்பாக உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என சீனப் பெண்கள் இணைந்து அந்நாட்டு அரசுக்கு வேண்டுகோள் விடுத்துள்ளனர்.
இந்த பிளாஷ் மாப் நிகழ்ச்சிக்கு "மமாமில்க் பேபி அலயன்ஸ்" என்ற தாய்ப்பால் ஆதரவு அமைப்பு ஏற்பாடு செய்திருந்தது. தாய் வாய் ரயில் நிலையத்தில் இந்த நிகழ்ச்சி நடந்தது.

சிரமங்கள்
இதுகுறித்து அந்த அமைப்பைச் சேர்ந்தவர்கள் கூறுகையில், "பொது இடங்களில் தாய்மார்கள் தங்களது குழந்தைகளுக்குத் தாய்ப்பால் கொடுக்க பல சிரமங்களை சந்திக்க நேரிடுகிறது. அவர்கள் பாரபட்சமாக நடத்தப்படுகிறார்கள். கட்டுப்பாடுகள் விதிக்கப்படுகின்றன. இதைத் தடுக்க அரசு சட்டம் கொண்டு வர வேண்டும்.

தனி இடம் இல்லை...
குறிப்பாக ஷாப்பிங் மால்களில் இளம் தாய்மார்கள் தங்களது குழந்தைகளுக்கு பாலூட்ட வேண்டுமென்றால் அதை கழிப்பறைக்குப் போய் செய்யுமாறு கட்டாயப்படுத்தப்படுகிறார்கள். மேலும் பெரும்பாலான மால்களில் தாய்ப்பால் கொடுக்க வசதியாக தனி இடம் இல்லை.

பிளாஷ் மாப்...
இதனால் பொது இடங்களில் குழந்தைகளுக்குத் தாய்ப்பால் கொடுக்க முடியாமல் தாய்மார்கள் பெரும் சிரமத்திற்கு ஆளாகின்றனர். அவமானத்தையே அவர்கள் சந்திக்கின்றனர். இதை எதிர்த்துத்தான் இந்த பிளாஷ் மாப் நிகழ்ச்சி" என்கின்றனர்.

4 வருடங்களாக...
கடந்த நான்கு வருடமாக இந்த நிகழ்ச்சியை நடத்தி வருகிறது இந்த அமைப்பு. இருப்பினும் இன்னும் அவர்களின் கோரிக்கை முழுமையாக நிறைவேற்றப்படாமல் உள்ளது.

விழிப்புணர்வு...
ஹாங்காங்கில் 2.3 சதவீத குழந்தைகளுக்குத்தான் குறிப்பிட்ட வயது வரை தாய்ப்பால் கொடுக்கப்படுகிறது. பெரும்பாலானோர் குறைந்த காலத்திலேயே தாய்ப்பால் கொடுப்பதை நிறுத்தி விடுகின்றனர். இருப்பினும் இதுதொடர்பாக தற்பது பல்வேறு விழிப்புணர்வு நிகழ்ச்சிகள் நடத்தப்பட்டதைத் தொடர்ந்து இந்த எண்ணிக்கை அதிகரித்து வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.
-
விஜய் வெற்றி செல்லாது? திருச்சி கிழக்கு எம்எல்ஏவாக என்னையே அறிவிக்கணும்.. ஹைகோர்ட்டில் இனிகோ மனு -
மகளிர் உரிமைத் தொகை ரூ.2,500! புதிய விதிமுறைகள் தயார்? ஜூன் மாதப் பட்டியலில் யாருக்கெல்லாம் வாய்ப்பு -
SP Velumani: உங்க சங்காத்தமே வேண்டாம்.. சிங்கப்பூர் சென்ற SP வேலுமணி.. எடப்பாடிக்கு பைனல் மெசேஜ் -
சாய்பாபா காலனி பிரச்சனை ஓவர்.. சிங்காநல்லூருக்கும் விடிவு காலம்.. தவெக ஆட்சியில் பிறந்த நம்பிக்கை -
மனித மூளையை உலுக்கக்கூடிய ஒரு விஷயம்.. ஏஐ குறித்து சத்ய நாதெல்லா பதிவு.. கமல் பதில் -
ஸ்டாலின் பகிரங்க மன்னிப்பு கேட்க வேண்டும்.. அமைச்சர் ஆதவ் அர்ஜுனா நோட்டீஸ் -
தமிழ்நாடுக்கு போட்டியாக கிளம்பிய குஜராத்.. விஜய்-க்கு நேரடி சவால்! -
நீலாங்கரை வீட்டிற்குள் நுழைந்த மாஸ் பிரபலம்! அண்ணன் விஜய்யை கண்டதுமே கட்டிப்பிடித்து உருகிய சிம்பு -
குத்துவிளக்கு ஏற்ற சொன்னா இப்படியா செய்வது? Narcissistic Behaviour ப்ரோ! விஜய்யை வறுத்த அதிமுக -
நடிகர் வாகை சந்திரசேகருக்கு கிடைத்த கௌரவம்.. பல வருட உழைப்புக்கு அங்கீகாரம்! குவியும் பாராட்டு -
எலக்ட்ரானிக் சிட்டி டூ ஓசூர் ரோடு இனி 5 நிமிட ரேஸ்! பெங்களூரு நம்ம மெட்ரோவின் அந்த ப்ளூ லைன் கணக்கு -
சூர்யவன்ஷியிடம் வம்பிழுத்த இலங்கை வீரர்கள்.. டீ-சர்ட்டை பிடித்து தள்ளி.. மைதானத்தில் பரபரப்பு!












Click it and Unblock the Notifications