ஹாங்காங் ரயில் நிலையத்தில் தாய்ப்பால் கொடுத்து ‘அம்மாக்கள்’ நூதன போராட்டம்
ஹாங்காங்: ஹாங்காங்கில் உள்ள ரயில் நிலையத்தில் கிட்டத்தட்ட 100 இளம்தாய்மார்கள் பிளாட்பாரத்தில் அமர்ந்து கூட்டாக தங்களது குழந்தைகளுக்கு தாய்ப்பால் கொடுத்து, பொது இடங்களில் தாய்ப்பால் கொடுப்பதற்கு உள்ள கட்டுப்பாடுகளுக்கு எதிர்ப்பு தெரிவித்து வித்தியாசமாக போராட்டம் நடத்தியுள்ளனர்.
பொது இடங்களில் குழந்தைகளுக்கு பால் தருவது என்பது தாய்மார்களுக்கு எப்போதும் சிரமமான விஷயமாகவே உள்ளது. எனவே, இது தொடர்பாக உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என சீனப் பெண்கள் இணைந்து அந்நாட்டு அரசுக்கு வேண்டுகோள் விடுத்துள்ளனர்.
இந்த பிளாஷ் மாப் நிகழ்ச்சிக்கு "மமாமில்க் பேபி அலயன்ஸ்" என்ற தாய்ப்பால் ஆதரவு அமைப்பு ஏற்பாடு செய்திருந்தது. தாய் வாய் ரயில் நிலையத்தில் இந்த நிகழ்ச்சி நடந்தது.

சிரமங்கள்
இதுகுறித்து அந்த அமைப்பைச் சேர்ந்தவர்கள் கூறுகையில், "பொது இடங்களில் தாய்மார்கள் தங்களது குழந்தைகளுக்குத் தாய்ப்பால் கொடுக்க பல சிரமங்களை சந்திக்க நேரிடுகிறது. அவர்கள் பாரபட்சமாக நடத்தப்படுகிறார்கள். கட்டுப்பாடுகள் விதிக்கப்படுகின்றன. இதைத் தடுக்க அரசு சட்டம் கொண்டு வர வேண்டும்.

தனி இடம் இல்லை...
குறிப்பாக ஷாப்பிங் மால்களில் இளம் தாய்மார்கள் தங்களது குழந்தைகளுக்கு பாலூட்ட வேண்டுமென்றால் அதை கழிப்பறைக்குப் போய் செய்யுமாறு கட்டாயப்படுத்தப்படுகிறார்கள். மேலும் பெரும்பாலான மால்களில் தாய்ப்பால் கொடுக்க வசதியாக தனி இடம் இல்லை.

பிளாஷ் மாப்...
இதனால் பொது இடங்களில் குழந்தைகளுக்குத் தாய்ப்பால் கொடுக்க முடியாமல் தாய்மார்கள் பெரும் சிரமத்திற்கு ஆளாகின்றனர். அவமானத்தையே அவர்கள் சந்திக்கின்றனர். இதை எதிர்த்துத்தான் இந்த பிளாஷ் மாப் நிகழ்ச்சி" என்கின்றனர்.

4 வருடங்களாக...
கடந்த நான்கு வருடமாக இந்த நிகழ்ச்சியை நடத்தி வருகிறது இந்த அமைப்பு. இருப்பினும் இன்னும் அவர்களின் கோரிக்கை முழுமையாக நிறைவேற்றப்படாமல் உள்ளது.

விழிப்புணர்வு...
ஹாங்காங்கில் 2.3 சதவீத குழந்தைகளுக்குத்தான் குறிப்பிட்ட வயது வரை தாய்ப்பால் கொடுக்கப்படுகிறது. பெரும்பாலானோர் குறைந்த காலத்திலேயே தாய்ப்பால் கொடுப்பதை நிறுத்தி விடுகின்றனர். இருப்பினும் இதுதொடர்பாக தற்பது பல்வேறு விழிப்புணர்வு நிகழ்ச்சிகள் நடத்தப்பட்டதைத் தொடர்ந்து இந்த எண்ணிக்கை அதிகரித்து வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.
-
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
“விஜய் இன்னொரு கருணாநிதி என நிரூபித்து வருகிறார்”.. அட்டாக் மோடில் வானதி சீனிவாசன்












Click it and Unblock the Notifications