யு.கே.வில் பெண் ஊழியர்களுக்கு பாலியல் தொல்லை: இந்திய ஹோட்டல் அதிபருக்கு 22 ஆண்டு சிறை

Subscribe to Oneindia Tamil

லண்டன்: இங்கிலாந்தில் பெண் ஊழியர்களுக்கு பாலியல் தொல்லை கொடுத்த குற்றத்திற்காக இந்தியாவைச் சேர்ந்த உணவக உரிமையாளருக்கு 22 மாத சிறை தண்டனை கிடைத்துள்ளது.

இந்தியாவைச் சேர்ந்தவர் பிரசாந்த் செங்கர்(40). அவர் இங்கிலாந்தின் வார்விக்ஷயர் பகுதியில் ஸ்பைசி அஃபயர் என்ற பெயரில் உணவகம் ஒன்றை நடத்தி வருகிறார். அவர் உணவகத்திற்கு வேலை தேடி வந்த இரண்டு பெண்களுக்கு பாலியல் தொல்லை அளித்துள்ளார். அவர்களின் மார்பகங்களை தொட்டுள்ளார்.

British-Indian Hotelier Jailed for Sexual Assaults

மேலும் தனது உணவகத்தில் வேலை செய்யும் 4 பெண் ஊழியர்கள் பணி முடிந்து வீட்டிற்கு கிளம்புகையில் அவர்களை முத்தமிட முயன்றதுடன், தகாத முறையில் நடக்க முயன்றுள்ளார். அவர் சில்மிஷம் செய்யும் முன்பு அந்த பெண்களிடம் நீங்கள் திருமணமாகாதவர்களா என்று கேட்டுள்ளார்.

இந்த சம்பவம் குறித்து அந்த பெண்கள் அளித்த புகாரின்பேரில் வழக்குப்பதிவு செய்த போலீசார் பிரசாந்தை கைது செய்தனர். பிரசாந்த் தன் மீதான குற்றச்சாட்டுகளை மறுத்தார். இந்நிலையில் இந்த வழக்கை விசாரித்த நீதிமன்றம் திருமணமான பிரசாந்திற்கு 22 மாத சிறை தண்டனை விதித்து தீர்ப்பளித்துள்ளது.

மேலும் அவர் பெயரை பாலியல் தொல்லை அளிப்பவர்களின் பட்டியலில் சேர்த்து அதை அந்த பட்டியலில் 10 ஆண்டுகள் வைக்குமாறும் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+