Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

கனடாவில் சீக்கிய தலைவர் கொலை.. இந்தியா மீது தவறு இல்லை! வழிக்கு வந்த கனடா!

Subscribe to Oneindia Tamil

ஒட்டாவா: கனடாவின் முன்னாள் பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ ஆட்சிக்காலத்தில், இந்தியா மீது சரமாரியான புகார் எழுப்பப்பட்டது. குறிப்பாக சீக்கிய தலைவர் கொலை வழக்கில், இந்தியா சம்பந்தப்பட்டிருப்பதாக குற்றம்சாட்டப்பட்டிருந்தது. ஆனால், தற்போது புதிய பிரதமர் மார்க் கார்னி தலைமையிலான அரசு இந்த குற்றச்சாட்டை மறுத்துள்ளது.

கனடாவில் நிகழும் வன்முறைச் சம்பவங்களுக்கும், இந்தியாவுக்கும் எந்த தொடர்பும் இல்லை என கனடா நாட்டின் மத்திய அரசு தற்போது கருதுகிறது. இப்படி சொல்லப்பட்டதன் மூலம், இரு நாடுகளுக்கும் இடையேயான உறவு மீண்டும் இயல்பு நிலைக்கு திரும்பும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

Canada Clears India of Violent Crime

பழைய பஞ்சாயத்து

இந்திய வம்சாவளியான சீக்கிய தலைவர் ஹர்தீப் சிங் நிஜ்ஜார், கடந்த 2023ம் ஆண்டு ஜூன் மாதம் பிரிட்டிஷ் கொலம்பியாவின் லோயர் மெயின்லாந்தில் உள்ள ஒரு குருத்வாராவுக்கு வெளியே சுட்டுக் கொல்லப்பட்டார். இந்த கொலைக்கு பிறகு கனடாவில் வன்முறை வெடித்தது. வன்முறைக்கும், கொலைக்கும் பின்னால் இந்தியா இருக்கிறது என்று முந்தைய அரசு வெளிப்படையாக குற்றம்சாட்டியிருந்தது. அப்போதைய பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ, கனடா மண்ணில் ஒரு கனடா குடியுரிமை பெற்றவரை இந்திய அரசு ஏஜெண்டுகள் கொன்றதற்கான நம்பகமான ஆதாரம் இருப்பதாகக் கூறினார்.

இந்தியா கவலை

இது மிக தீவிரமான குற்றச்சாட்டாக பார்க்கப்பட்டது. இந்த குற்றச்சாட்டை இந்தியா தொடர்ந்து மறுத்து வந்திருந்தது. இது இரு நாடுகளிலிருந்தும் தூதர்களை வெளியேற்றியது. கனடா சீக்கிய தீவிரவாதிகளுக்கு அடைக்கலம் கொடுப்பதாக இந்தியா கவலை தெரிவிக்க, கனடாவோ, இந்தியா எல்லையை மீறியது என வெளிப்படையாக சாடியது.

140 கோடி மக்கள்

ஆனால் தற்போது இந்த நிலைப்பாட்டை கனடா அரசு மாற்றிக்கொண்டிருக்கிறது. இதற்கு இரண்டு காரணங்கள் சொல்லப்படுகிறது. ஒன்று அமெரிக்காவின் வரி அழுத்தம். இது கனடாவை கடுமையாக பாதித்திருக்கிறது. எனவே வர்த்தகத்திற்கு வேறு நாட்டை தேடி வருகிறது. இரண்டாவது காரணம், கனடா வர்த்தகம் செய்ய ஏற்ற நாடு இந்தியாதான். இங்கு 140 கோடி மக்கள் இருக்கிறார்கள். எனவே இந்த மக்கள் தொகையை கனடா மார்க்கெட்டாக பார்க்கிறது.

வழிக்கு வந்த கனடா

இதன் காரணமாகவே இந்தியாவுடனான மோதல் போக்கை கனடா தவிர்த்து வருகிறது. விரைவில் கனடா பிரதமர், 9 நாட்கள் பயணமாக இந்தியா, ஜப்பான் உள்ளிட்ட நாடுகளுக்கு பயணம் மேற்கொள்ள இருக்கிறார். எனவே இந்த பயணத்திற்கு முன்பாக, இந்தியா-கனடா உறவை இயல்பு நிலைக்கு கொண்டு வர வேண்டும் என்று விரும்புகிறார். எனவேதான் முந்தைய சம்பவத்தை அரசு கண்டுக்கொள்ளாமல் இருக்கிறது.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+