இந்தியாவுடன் கடும் மோதல் போக்குக்கு நடுவே.. மறக்காமல் ஜஸ்டின் ட்ரூடோ செய்த விஷயம்.. ஆஹா!
ஒட்டாவா: ஹர்தீப் சிங் நிஜ்ஜார் விவகாரத்தால் இந்தியா - கனடா இடையே முன்னெப்போதும் இல்லாத அளவுக்கு விரிசல் ஏற்பட்டுள்ளது. இந்தியா மீது தொடர்ந்து ஜஸ்டின் ட்ரூடோ குற்றச்சாட்டுகளை முன்வைத்து வரும் சூழலில், நவராத்ரி பண்டிகையை முன்னிட்டு இந்துக்களுக்கு வாழ்த்துக்களையும் தெரிவித்துள்ளார்.
கேடிஎப் எனும் காலிஸ்தான் புலிப்படை தலைவர் ஹர்தீப் சிங் நிஜ்ஜார் தான் கனடாவில் குடியுரிமை பெற்று அங்கு வசித்து வந்தார். ஹர்தீப் சிங் நிஜ்ஜார் கடந்த ஜூன் 18-ம்தேதி கனடாவில் உள்ள சீக்கிய குருத்வாராவுக்கு அருகே சுட்டுக் கொல்லப்பட்டார். இந்தியாவில் தேடப்படும் தீவிரவாதியாக அறிவிக்கப்பட்டு இருந்த நிஜ்ஜாரை அவரை கொலை செய்தது யார்? என்பது இன்னும் தெரியவில்லை. இதில் உண்மையை கண்டறிய முடியாமல் கனடா திணறி வருகிறது.

எனினும், இந்தியா மீது கனடா பிரதமர் குற்றம் சாட்டி வருகிறார். இதற்கு இந்தியா கடும் எதிர்ப்பு தெரிவித்தது. இந்தியா மீது ஆதாரமற்ற குற்றச்சாட்டுகளை கனடா முன்வைக்கிறது என சாடியது. ஆனாலும் நிஜ்ஜார் கொலையில் இந்திய அரசுக்கு தொடர்பு இருப்பதாகவும் இது தொடர்பான நம்பகமான தகவல்கள் கிடைத்ததாகவும் கடந்த மாதம் கனடா நாடாளுமன்றத்தில் அந்நாட்டு பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ குற்றம் சாட்டினார்.
அது மட்டும் இன்றி இந்திய தூதரையும் வெளியேற உத்தரவிட்டு இருந்தார். கனடாவின் இந்த செயல் இந்தியாவுக்கு அதிர்ச்சி கொடுத்தது. இதையடுத்து, கனடாவிற்கு பதிலடியாக இந்தியாவில் உள்ள கனடா அதிகாரி வெளியேற மத்தியஅரசு உத்தரவிட்டது. இதனால் இந்தியாவுக்கும் கனடாவுக்கும் இடையே முன்னெப்போதும் இல்லாத அளவுக்கு உறவில் விரிசல் ஏற்பட்டது.
தற்போது கனடாவிலிருந்து பயணம் செய்பவர்களுக்கு விசா வழங்குவதை தற்காலிகமாக நிறுத்தி வைப்பதாக இந்தியா அறிவித்தது. இதனால், இந்தியா - கனடா இடையேயான உறவு முன்னெப்போதும் இல்லாத அளவுக்கு பாதிக்கப்பட்டுள்ளது. இந்த நிலையில், நவராத்ரி பண்டிகைக்கு ஜஸ்டின் ட்ரூடோ வாழ்த்து தெரிவித்துள்ளார். ஜஸ்டின் ட்ரூடோ தனது எக்ஸ் சமூக வலைத்தளத்தில் கூறியிருப்பதாவது:-
இந்திய சமூகத்தினருக்கும் நவராத்ரி திருவிழா கொண்டாடும் அனைவருக்கும் எனது நவராத்ரி வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்கிறேன். இந்து மத நம்பிக்கையில் புனிதமான ஒரு பண்டிகையாக நவராத்ரி கருதப்படுகிறது" என்று தெரிவித்துள்ளார். கனடாவில் இந்திய வம்சாவளியினர் கணிசமான அளவு வசித்து வருவதால் இந்தியாவில் கொண்டாடப்படும் தீபாவளி உள்ளிட்ட பண்டிகைகளின் போது கனடா நாட்டு அரசியல் தலைவர்கள் வாழ்த்து தெரிவித்து வருவது வாடிக்கையாக உள்ளது.
-
பெட்ரோல், டீசல் பற்றாக்குறை என பரவும் வதந்தி.. யாரும் நம்பாதீங்க! விளக்கமளித்த மத்திய அரசு -
ஹார்முஸ் நீரிணையை கடந்து.. இந்தியாவுக்கு வந்த 2 எல்பிஜி கப்பல்கள்! ஆனால் பிரச்சனை இன்னும் முடியல! -
"LPG கனெக்ஷன் மொத்தமாக நிறுத்தப்படும்.." மத்திய அரசு மிக முக்கிய எச்சரிக்கை! என்ன மேட்டர்? -
அமெரிக்கா அனுமதி கொடுத்தும்.. தயக்கம் காட்டும் இந்தியா! ஈரான் எண்ணெய் வாங்குவதில் பெரிய சிக்கல்! -
ஈரானை அரவணைக்கும் இந்தியா.. மீண்டும் தொடங்கும் கச்சா எண்ணெய் வர்த்தகம்? மத்திய அரசு பிளான் -
இந்தியாவை உலுக்கும் "ஜாம்பி" போதை மருந்து.. 2 மணி நேரமா இன்ச் கூட அசையல.. திகிலூட்டும் வீடியோ! -
1 மணி நேரம் நின்றாலும் ஒரு சொட்டு பெட்ரோல் இல்லை! ஹைதராபாத்தில் நிலைமை இதுதான்.. கள நிலவரம் இதுதான்! -
எல்பிஜி விஷயத்தில் இந்தியா சொதப்பல்! இனி வரும் நாட்கள் ரொம்ப கஷ்டம்! வார்னிங் வந்துடுச்சு -
ஈரானுடன் ரகசிய டீல்.. சைலன்ட்டாக அம்பானி சம்பவம்.. 2019க்கு பின் இந்தியா வரும் 50 லட்சம் பேரல் ஆயில் -
போருக்கு நடுவே துபாய் செய்த காரியம்.. நெகிழ்ந்து போன இந்தியர்கள்.. இதை யாரும் எதிர்பார்க்கல -
இந்தியாவுக்கு வழிவிட்ட ஈரான்.. கேஸ் தட்டுப்பாடு சரியாகுமா? இல்லத்தரசிகளே இதை கவனியுங்க! -
"இந்தியா எங்கள் நண்பன்! ஹார்முஸை தாராளமாக கடக்கலாம்.." அனுமதி தந்த ஈரான்! உற்று பார்க்கும் அமெரிக்கா












Click it and Unblock the Notifications