என்னங்க இப்படி பயப்படுறாரு! இந்திய ஊடகங்களை பார்த்துமே ஜஸ்டின் ட்ரூடோ செய்த செயல்.. பரவும் வீடியோ
ஒட்டாவா: காலிஸ்தான் பயங்கரவாத ஹர்தீப் சிங் நிஜ்ஜார் கனடாவில் கொல்லப்பட்டதில் பின்னணியில் இந்தியா உள்ளதாக கனடா பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ கூறியது இருநாடுகள் இடையேயான உறவை பாதித்துள்ளது. இந்நிலையில் ஐநாவில் இந்தியா ஊடகங்களை பார்த்த ஜஸ்டின் ட்ரூடோ செய்த செயல் தொடர்பான வீடியோ தற்போது இணையதளங்களில் வேகமாக பரவி வருகிறது.
இந்தியாவில் சீக்கியர்களுக்கு தனிநாடு கோரி பல போராட்டங்கள் நடந்தன. இந்த போராட்டங்கள் அனைத்தும் முறியடிக்கப்பட்டன. இதையடுத்து போராட்டத்தை முன்னெடுத்த காலிஸ்தான் தீவிரவாத அமைப்பு இந்தியாவில் கட்டுப்படுத்தப்பட்டுள்ளது.

இருப்பினும் இந்த அமைப்பை சேர்ந்தவர்கள் வெளிநாடுகளில் இருந்து கொண்டு இந்தியாவுக்கு எதிரான திட்டங்களை அரங்கேற்றி வருகின்றனர். குறிப்பாக இந்தியாவில் குழப்பத்தை ஏற்படுத்த நினைக்கின்றனர். வெளிநாட்டில் உள்ள இந்திய தூதரகங்களை முற்றுகையிடுவது, நாட்டு நலனுக்கு எதிரான சதித்திட்டங்களை தீட்டுதல் உள்ளிட்ட விஷயங்களில் ஈடுபட்டு வருகின்றனர்.
இதற்கிடையே தான் கனடாவில் இந்திய தூதரகம் முன்பு காலிஸ்தான் தீவிரவாதிகள் கடந்த மார்ச் மாதம் போராட்டம் நடத்தினர். அதன்பிறகு காலிஸ்தான் புலிகள் படையின் தலைவரும், காலிஸ்தான் பயங்கரவாதியுமான ஹர்தீப் சிங் நிஜ்ஜார் கடந்த ஜூனில் சுட்டுக்கொல்லப்பட்டப்பட்டார். இந்த கொலையில் இந்தியாவுக்கு தொடர்பு இருக்கலாம். இந்தியாவின் ஏஜென்சிகள் இதனை செய்திருக்கலாம் என கனடா பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ தெரிவித்துள்ளார்.
இதனை இந்தியா முழுவதுமாக மறுத்தது. ஆனால் கனடா தனது குற்றச்சாட்டில் உறுதியாக இருப்பதோடு இந்திய தூதரை வெளியேற்றியது. அதேபோல் இந்தியாவும் கனடா தூதரை வெளியே்றியது. மேலும் இந்தியாவில் உள்ள கனடர்கள் பாதுகாப்பாக இருக்க கனடா அறிவுறுத்தியது. அதேபோல் இந்தியாவும் கனடா வாழ் இந்தியர்கள் பாதுகாப்பாக இருக்க அறிவுறுத்தியது.
தற்போது இந்தி விவகாரங்களில் அமெரிக்க உள்ளிட்ட வெளிநாடுகளும் தலையிட தொடங்கி உள்ளனர். இதற்கிடையே தான் கனடா வாழ் மக்களுக்கு விசா வழங்க இந்தியா இடைக்கால தடை விதித்துள்ளது. இதனால் கனடா-இந்தியா இடையேயான உறவு என்பது பெரும் பிரச்சனையாக மாறியுள்ளது. அதோடு ஆதாரமற்ற குற்றச்சாட்டுகளை கூறும் கனடாவுக்கு பதிலடி கொடுக்க இந்தியா முழுவீச்சில் தயாராக இருப்பதாக கூறப்படுகிறது.
இந்நிலையில் தான் ஐநாவுக்கு கனடா பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ சென்றார். அப்போது இந்திய ஊடகங்கள் அவரிடம் கேள்வி கேட்க முயன்றனர். இதை கவனித்த ஜஸ்டின் ட்ரூடோ விலகி சென்றார். இந்திய ஊடகங்கள் ஏதேனும் கேள்வி கேட்கும்போது அவர் அளிக்கும் பதில் மீண்டும் சர்ச்சையை ஏற்படுத்தலாம் என நினைத்து ஜஸ்டின் ட்ரூடோ ஊடகங்களை தவிர்த்துவிட்டு சென்றார். இதுதொடர்பான வீடியோ தற்போது இணையதளங்களில் வெளியாகி வேகமாக பரவி வருகிறது.
-
இப்போ முடியாது.. தேர்தல் முடிந்ததும் செட்டில் பண்றேன்.. கறாராக பேசிய லீமா ரோஸ்.. விக்கித்த எடப்பாடி -
நாய்க்கு கூட நன்றி இருக்கும்.. எடப்பாடி பழனிசாமி குறித்து சசிகலா விமர்சனம் -
கடைசி சான்ஸ்.. மிஸ் பண்ணிடாதீங்க.. பிறப்புச் சான்றிதழில் வருது மேஜர் முடிவு.. ஆவணங்களை ரெடி பண்ணுங்க -
அஜிதா ஆடிய மைண்ட் கேம்.. தவெக-வை தவிக்கவிட்டு திமுக பக்கம் தாவ இதுதான் காரணமா? தூத்துக்குடி மாஸ் -
பேசி முடித்ததுமே சரிந்த பாமக நிறுவனர் ராமதாஸ்.. கேள்விப்பட்டதும் உடனே போன் போட்ட முதல்வர் ஸ்டாலின்! -
”5 கேப்டன் இருந்தும் என் பக்கத்துல இருக்கான் மச்சா” மும்பை அணியை செய்யும் சிஎஸ்கே! தெறிக்கும் மீம்ஸ் -
LIK vs TN 2026 box office: மூன்று நாள் முடிவில் பிரதீப் ரங்கநாதன் Vs நட்டி யாருக்கு வெற்றி? வசூல் நிலவரம் -
யாருங்க இந்த ஐடியாலாம் தருவது? தவெக விஜய் கொடுத்த வாக்குறுதியில்.. இருக்கும் பெரிய ஓட்டை! -
'ஜனநாயகன்' பட லீக்கில் என்ன நடந்தது.. தமிழக காவல்துறை முழு விளக்கம் -
சாத்தூரில் நயினார் வாங்கிய காத்து.. பாஜக தேசிய தலைவரையே கூட்டி வந்தும் கூட்டம் இல்லை -
ஆட்டம் ஆரம்பம்.. முதல் அடி தங்கம், வெள்ளி விலை.. இந்தியாவில் விடியும் முன்பே ஷாக்! -
ஹார்முஸில் வழிந்தோடும் ‘ரத்தம்’? பீதியில் உலக நாடுகள்.. கண்ணி வெடிகள் வேற குவிந்து கிடக்குதே












Click it and Unblock the Notifications