என்னங்க இப்படி பயப்படுறாரு! இந்திய ஊடகங்களை பார்த்துமே ஜஸ்டின் ட்ரூடோ செய்த செயல்.. பரவும் வீடியோ
ஒட்டாவா: காலிஸ்தான் பயங்கரவாத ஹர்தீப் சிங் நிஜ்ஜார் கனடாவில் கொல்லப்பட்டதில் பின்னணியில் இந்தியா உள்ளதாக கனடா பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ கூறியது இருநாடுகள் இடையேயான உறவை பாதித்துள்ளது. இந்நிலையில் ஐநாவில் இந்தியா ஊடகங்களை பார்த்த ஜஸ்டின் ட்ரூடோ செய்த செயல் தொடர்பான வீடியோ தற்போது இணையதளங்களில் வேகமாக பரவி வருகிறது.
இந்தியாவில் சீக்கியர்களுக்கு தனிநாடு கோரி பல போராட்டங்கள் நடந்தன. இந்த போராட்டங்கள் அனைத்தும் முறியடிக்கப்பட்டன. இதையடுத்து போராட்டத்தை முன்னெடுத்த காலிஸ்தான் தீவிரவாத அமைப்பு இந்தியாவில் கட்டுப்படுத்தப்பட்டுள்ளது.

இருப்பினும் இந்த அமைப்பை சேர்ந்தவர்கள் வெளிநாடுகளில் இருந்து கொண்டு இந்தியாவுக்கு எதிரான திட்டங்களை அரங்கேற்றி வருகின்றனர். குறிப்பாக இந்தியாவில் குழப்பத்தை ஏற்படுத்த நினைக்கின்றனர். வெளிநாட்டில் உள்ள இந்திய தூதரகங்களை முற்றுகையிடுவது, நாட்டு நலனுக்கு எதிரான சதித்திட்டங்களை தீட்டுதல் உள்ளிட்ட விஷயங்களில் ஈடுபட்டு வருகின்றனர்.
இதற்கிடையே தான் கனடாவில் இந்திய தூதரகம் முன்பு காலிஸ்தான் தீவிரவாதிகள் கடந்த மார்ச் மாதம் போராட்டம் நடத்தினர். அதன்பிறகு காலிஸ்தான் புலிகள் படையின் தலைவரும், காலிஸ்தான் பயங்கரவாதியுமான ஹர்தீப் சிங் நிஜ்ஜார் கடந்த ஜூனில் சுட்டுக்கொல்லப்பட்டப்பட்டார். இந்த கொலையில் இந்தியாவுக்கு தொடர்பு இருக்கலாம். இந்தியாவின் ஏஜென்சிகள் இதனை செய்திருக்கலாம் என கனடா பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ தெரிவித்துள்ளார்.
இதனை இந்தியா முழுவதுமாக மறுத்தது. ஆனால் கனடா தனது குற்றச்சாட்டில் உறுதியாக இருப்பதோடு இந்திய தூதரை வெளியேற்றியது. அதேபோல் இந்தியாவும் கனடா தூதரை வெளியே்றியது. மேலும் இந்தியாவில் உள்ள கனடர்கள் பாதுகாப்பாக இருக்க கனடா அறிவுறுத்தியது. அதேபோல் இந்தியாவும் கனடா வாழ் இந்தியர்கள் பாதுகாப்பாக இருக்க அறிவுறுத்தியது.
தற்போது இந்தி விவகாரங்களில் அமெரிக்க உள்ளிட்ட வெளிநாடுகளும் தலையிட தொடங்கி உள்ளனர். இதற்கிடையே தான் கனடா வாழ் மக்களுக்கு விசா வழங்க இந்தியா இடைக்கால தடை விதித்துள்ளது. இதனால் கனடா-இந்தியா இடையேயான உறவு என்பது பெரும் பிரச்சனையாக மாறியுள்ளது. அதோடு ஆதாரமற்ற குற்றச்சாட்டுகளை கூறும் கனடாவுக்கு பதிலடி கொடுக்க இந்தியா முழுவீச்சில் தயாராக இருப்பதாக கூறப்படுகிறது.
இந்நிலையில் தான் ஐநாவுக்கு கனடா பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ சென்றார். அப்போது இந்திய ஊடகங்கள் அவரிடம் கேள்வி கேட்க முயன்றனர். இதை கவனித்த ஜஸ்டின் ட்ரூடோ விலகி சென்றார். இந்திய ஊடகங்கள் ஏதேனும் கேள்வி கேட்கும்போது அவர் அளிக்கும் பதில் மீண்டும் சர்ச்சையை ஏற்படுத்தலாம் என நினைத்து ஜஸ்டின் ட்ரூடோ ஊடகங்களை தவிர்த்துவிட்டு சென்றார். இதுதொடர்பான வீடியோ தற்போது இணையதளங்களில் வெளியாகி வேகமாக பரவி வருகிறது.
-
"மறைமுக ஊரடங்கு?" இந்தியாவை மெல்ல சுத்துபோடும் ஆபத்து.. கூட்டி கழிச்சு பாருங்க எல்லாம் புரியும் -
ஈரானுடன் ரகசிய டீல்.. சைலன்ட்டாக அம்பானி சம்பவம்.. 2019க்கு பின் இந்தியா வரும் 50 லட்சம் பேரல் ஆயில் -
ஈரானை அரவணைக்கும் இந்தியா.. மீண்டும் தொடங்கும் கச்சா எண்ணெய் வர்த்தகம்? மத்திய அரசு பிளான் -
"தேங்க் யூ இந்தியா.. உங்க உதவியை நாங்கள் மறக்கவே மாட்டோம்.." போருக்கு நடுவே நன்றி சொன்ன ஈரான் -
தெறித்து ஓடும் வெளிநாட்டு முதலீட்டாளர்கள்! பாதாளத்திற்கே போகும் இந்திய பங்குச்சந்தைகள்.. 3 காரணங்கள் -
பெரிய சிக்கலில் இந்தியா! 1970ல் நடந்தது போல.. இப்போதும் நடக்கப்போகுது! வெளியான ஷாக் தகவல்! -
1 மணி நேரம் நின்றாலும் ஒரு சொட்டு பெட்ரோல் இல்லை! ஹைதராபாத்தில் நிலைமை இதுதான்.. கள நிலவரம் இதுதான்! -
இந்தியாவிற்கு மிகப்பெரிய அறிவிப்பு.. சுரேஷ் கோபி vs நரேந்திர மோடி.. அடுத்தடுத்து கவனித்தீர்களா? -
எல்பிஜி விஷயத்தில் இந்தியா சொதப்பல்! இனி வரும் நாட்கள் ரொம்ப கஷ்டம்! வார்னிங் வந்துடுச்சு -
துரந்தர் இல்லை.. துரோகி.. இந்திய விமான படை வீரர் அதிரடி கைது! பாகிஸ்தானுக்காக உளவு பார்த்தது அம்பலம் -
ஹேப்பி நியூஸ்..சிலிண்டர் சிக்கல் இனி வராது! இந்தியாவுக்கு கைகொடுத்த ஈரான்! பாய்ந்து வரும் கப்பல்கள்! -
தங்கம்.. 'தரை' தட்டியது ஏன்? கூடை கூடையாக மார்க்கெட்டில் விற்ற அரபு நாடுகள்.. ஒரு ராட்சனின் வீழ்ச்சி












Click it and Unblock the Notifications