ஹெலிகாப்டர் ஊழல்: இத்தாலிக்கான தூதருடன் சிபிஐ இயக்குநர் ரஞ்சித் சின்ஹா ஆலோசனை
ரோம்: நாட்டின் வி.வி.ஐ.பிகளுக்கான சொகுசு ஹெலிகாப்டர்கள் வாங்கியதில் நடைபெற்ற ஊழல் வழக்கு தொடர்பாக இத்தாலிக்கான இந்திய தூதர் பசந்த்குமாருடன் சிபிஐ இயக்குநர் ரஞ்சித் சின்ஹா ஆலோசனை நடத்தியுள்ளார்.
இத்தாலி தலைநகர் ரோமில் அண்மையில் ஆட்கடத்தல்கள் தொடர்பாக சர்வதேச மாநாடு நடைபெற்றது. இதில் சிபிஐ இயக்குநர் ரஞ்சித் சின்ஹாவும் கலந்து கொண்டார்.

இந்த மாநாட்டுக்குப் பின்னர் இத்தாலிக்கான இந்திய தூதர் பசந்த் குமாரை ரஞ்சித் சின்ஹா சதித்துப் பேசினார். இந்த சந்திப்பின் போது இத்தாலியில் நடைபெற்று வரும் ஹெலிகாப்டர் பேர ஊழல் வழக்கின் விசாரணையை விரைந்து முடிக்க அழுத்தம் கொடுக்க வேண்டும் என்று சின்ஹா கேட்டுக் கொண்டார்.
மேலும் இந்த ஹெலிகாப்டர் பேர ஊழல் தொடர்பாக கூடுதல் தகவல்களை இத்தாலிய அதிகாரிகளிடம் இருந்து பெறுவது தொடர்பாகவும் இருவரும் ஆலோசனை நடத்தியுள்ளதாக தெரிகிறது.
இந்திய ராணுவத்துக்கு ரூ. 3,600 கோடி சொகுசு ஹெலிகாப்டர்கள் வாங்கியதில் ஊழல் நடைபெற்றதாக எழுந்த குற்றச்சாட்டு தொடர்பாக சிபிஐ வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறது. இந்த வழக்கு தொடர்பாக இந்திய விமான படையின் முன்னாள் தலைவர் எஸ்பி தியாகி உட்பட 13 பேர் மீது சிபிஐ வழக்கு பதிவு செய்துள்ளது. இந்த குற்றச்சாட்டையடுத்து இத்தாலி நிறுவனத்துடன் மேற்கொள்ளப்பட்ட ஒப்பந்தத்தையும் மத்திய அரசு ரத்து செய்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
-
இமாச்சல் போல.. தமிழகத்தில் அரசு ஊழியர்களின் மாத சம்பளத்தை 30% குறைக்க வேண்டியது வரும்.. அன்புமணி -
1 சவரன் தங்க நகை வாங்க போறீங்களா? கடைக்காரர் போடும் கணக்கில் அதிக மாற்றமா? ஏமாறாமல் இருக்க பில் தேவை -
10 பைசா கூட வராது.. தங்கத்தை மொத்தமாக விற்கும் முதலீட்டாளர்கள்.. நெருங்கி வரும் பேரழிவு? -
அதை சொல்ல யாருக்கும் அருகதை இல்லை.. வீட்டிலும், ஆபீஸிலும் இதுதான் நடக்குது செல்வராகவன் ஆதங்கம் -
56 out of 234: விசிகவுக்கு "6+2!" திமுக கூட்டணியில் எந்தெந்த கட்சிகளுக்கு எத்தனை தொகுதிகள்? -
அதிமுக கூட்டணியில் பாமகவுக்கு 18, அமமுகவுக்கு 11 தொகுதிகள் ஒதுக்கீடு! -
கேஸ் மானியம் ₹300 வந்தாச்சா? வங்கிக்கு போகவே வேண்டாம்… வீட்டிலேயே 2 நிமிஷத்தில் தெரிஞ்சுக்கலாம் -
48 அவுட் ஆஃப் 234! திமுக கூட்டணியில் இதுவரை எந்தெந்த கட்சிகளுக்கு எத்தனை சீட் ஒதுக்கீடு! -
PHH, AAY ரேஷன் கார்டுதாரர்களுக்கு முக்கிய அறிவிப்பு! கார்டு காலி ஆயிடும்..ரேகை வைக்கலைனா ப்ளாக் தான் -
அமெரிக்காவை வீழ்த்தும் ஈரான்.. ஆட்டம் காணும் மிதக்கும் அரண்மனை.. ஒரே இரவில் பஸ்பம் ஆன $13000000000! -
டிரம்ப் வயிற்றில் பாலை வார்த்த ஈரான்.. அமெரிக்காவுக்கு முதல் முறையாக பச்சைக்கொடி -
நாகர்கோவில் எம்எல்ஏ காந்திக்கு கல்தா.. பாஜக தலைமை முடிவால் கலக்கம்












Click it and Unblock the Notifications