Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

ஹெலிகாப்டர் ஊழல்: இத்தாலிக்கான தூதருடன் சிபிஐ இயக்குநர் ரஞ்சித் சின்ஹா ஆலோசனை

Subscribe to Oneindia Tamil

ரோம்: நாட்டின் வி.வி.ஐ.பிகளுக்கான சொகுசு ஹெலிகாப்டர்கள் வாங்கியதில் நடைபெற்ற ஊழல் வழக்கு தொடர்பாக இத்தாலிக்கான இந்திய தூதர் பசந்த்குமாருடன் சிபிஐ இயக்குநர் ரஞ்சித் சின்ஹா ஆலோசனை நடத்தியுள்ளார்.

இத்தாலி தலைநகர் ரோமில் அண்மையில் ஆட்கடத்தல்கள் தொடர்பாக சர்வதேச மாநாடு நடைபெற்றது. இதில் சிபிஐ இயக்குநர் ரஞ்சித் சின்ஹாவும் கலந்து கொண்டார்.

CBI Director Ranjeet Sinha meets Indian envoy in Italy

இந்த மாநாட்டுக்குப் பின்னர் இத்தாலிக்கான இந்திய தூதர் பசந்த் குமாரை ரஞ்சித் சின்ஹா சதித்துப் பேசினார். இந்த சந்திப்பின் போது இத்தாலியில் நடைபெற்று வரும் ஹெலிகாப்டர் பேர ஊழல் வழக்கின் விசாரணையை விரைந்து முடிக்க அழுத்தம் கொடுக்க வேண்டும் என்று சின்ஹா கேட்டுக் கொண்டார்.

மேலும் இந்த ஹெலிகாப்டர் பேர ஊழல் தொடர்பாக கூடுதல் தகவல்களை இத்தாலிய அதிகாரிகளிடம் இருந்து பெறுவது தொடர்பாகவும் இருவரும் ஆலோசனை நடத்தியுள்ளதாக தெரிகிறது.

இந்திய ராணுவத்துக்கு ரூ. 3,600 கோடி சொகுசு ஹெலிகாப்டர்கள் வாங்கியதில் ஊழல் நடைபெற்றதாக எழுந்த குற்றச்சாட்டு தொடர்பாக சிபிஐ வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறது. இந்த வழக்கு தொடர்பாக இந்திய விமான படையின் முன்னாள் தலைவர் எஸ்பி தியாகி உட்பட 13 பேர் மீது சிபிஐ வழக்கு பதிவு செய்துள்ளது. இந்த குற்றச்சாட்டையடுத்து இத்தாலி நிறுவனத்துடன் மேற்கொள்ளப்பட்ட ஒப்பந்தத்தையும் மத்திய அரசு ரத்து செய்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+