பொருளாதாரம் நாசமாகிவிட்டது.. அதிகாரம் எல்லாம் ஒருத்தர் கையில் உள்ளது.. ரகுராம் ராஜன் பொளேர்!
அமெரிக்காவில் நடந்த கல்லூரி நிகழ்வு ஒன்றில் பேசிய முன்னாள் ஆர்பிஐ இயக்குனர் ரகுராம் ராஜன் மத்திய அரசை கடுமையாக விமர்சனம் செய்துள்ளார்.
கலிபோர்னியா: அமெரிக்காவில் நடந்த கல்லூரி நிகழ்வு ஒன்றில் பேசிய முன்னாள் ஆர்பிஐ இயக்குனர் ரகுராம் ராஜன் மத்திய அரசை கடுமையாக விமர்சனம் செய்துள்ளார்.
தற்போது ஆர்பிஐ அமைப்பிற்கும் மத்திய அரசுக்கும் இடையே கடுமையான மோதல் நிலவி வருகிறது. ஆர்பிஐ இயக்குனர் உர்ஜித் பட்டேலை மத்திய அரசு பதவி விலகி வற்புறுத்தும் நிலை கூட ஏற்பட வாய்ப்புள்ளது.
இந்த நிலையில் கலிபோர்னியா பல்கலைக்கழத்தில் பேசிய முன்னாள் ஆர்பிஐ இயக்குனர் ரகுராம் ராஜன் மத்திய அரசை விமர்சனம் செய்துள்ளார். மத்திய அரசின் கொள்கையால் நாட்டின் பொருளாதாரம் எப்படி மோசம் அடைந்தது என்று கூறியுள்ளார்.

இந்திய பொருளாதாரம்
ரகுராம் ராஜன் தனது பேச்சில், இந்தியாவின் பொருளாதாரம் 2016க்கும் முன்பு வரை மிகவும் நன்றாக இருந்தது. இந்தியா மிக மிக வேகமாக வளர்ந்து வந்தது. 25 வருடங்களில் இல்லாத அளவிற்கு இந்தியா மிக வேகமான வளர்ச்சியை சந்தித்து. அவ்வளவு வேகமான பொருளாதார வளர்ச்சியை இந்தியா சந்தித்ததே கிடையாது.

வேகமாக குறைந்தது
ஆனால் 2016க்கு பின் இந்தியாவின் பொருளாதார வளர்ச்சி வேகமாக குறைந்தது. ஜிஎஸ்டி மற்றும் பணமதிப்பிழப்பு நீக்கம்தான் இதற்கு காரணம். இந்த இரண்டும் கொண்டு வரப்பட்ட பின் இந்திய பொருளாதாரம் மொத்தமாக சாய்ந்தது. அதன்பின் தொடர்ந்து சரிந்து வருகிறது.

மத்திய அரசு
இந்தியாவில் எது நடக்க வேண்டும் என்றாலும் மத்திய அரசின் அனுமதியுடன் நடக்க வேண்டும் என்ற நிலை இருக்கிறது. அது மிகவும் ஆபத்தான விஷயம் ஆகும். மத்திய அரசு மொத்தமாக மாநிலங்களை கட்டுப்படுத்த பார்க்கிறது. அது இந்தியாவிற்கு மிகப்பெரிய பிரச்சனையாக முடியும்.

பெரிய அதிகாரம்
முக்கியமாக இப்போது இருக்கும் மத்திய அரசு ஒருவரை மட்டுமே நம்பி இருக்கிறது. அவர் தனி அதிகாரம் கொண்ட நிறுவனங்களை கூட கட்டுப்படுத்த பார்க்கிறார். ஆர்பிஐ, சிபிஐ என்று எல்லோரையும் அவர் கட்டுப்படுத்த பார்க்கிறார். இது இந்தியாவின் எதிர்காலத்திற்கு நல்லதல்ல என்று ரகுராம் ராஜன் தெரிவித்துள்ளார்.
-
டோட்டலாக தனிமைப்படுத்தப்பட்ட திமுக! உச்சக்கட்ட ஹேப்பியில் பாஜக.. தவெக விஜய் அரசுக்கு சிக்கலா? -
மோடி, நிர்மலா சீதாராமன் சந்திப்பின்போது.. கூடவே போன ஜோசியர்! சலசலப்பை கிளப்பிய விஜய்! -
97 ரன்களில் அவுட்.. ஒட்டுமொத்த மைதானமும் சோகம்.. உலக சாதனையை தவறவிட்ட வைபவ் சூர்யவன்ஷி! -
முதல்வர் விஜய்யை சந்திக்க நேரம் ஒதுக்காத அமித் ஷா.. என்ன நடந்தது? -
பிரதமர் மோடிக்கு நன்றி சொன்ன முதல்வர் விஜய்.. அதைவிட முக்கியம் 4 மேஜர் கோரிக்கைகள் -
"ஆர்.எஸ்.எஸ் பேரப்பிள்ளையாக மாறிய விசிக".. திருமா மீது பொன்.ராதாகிருஷ்ணன் கடும் தாக்கு! -
நிர்மலா சீதாராமனும் விஜய் கிட்ட அதையே சொல்வாரோ? 118 மேஜிக் நம்பர்.. தவெகவை அசைக்க முடியாத பின்னணி? -
ஒரே சீசனில் 61 சிக்ஸ்.. கெய்ல் சாதனையை 15 வயது சிறுவன் முடிச்சிட்டான்! தெறிக்கவிட்ட வைபவ் சூர்யவன்ஷி -
குதிரை பேரமா? எடப்பாடி பழனிசாமிதான் அதை செய்தார்! ஒரே போடாக போட்ட அமைச்சர் அருண்ராஜ் -
தமிழக அரசின் அதிரடி அறிவிப்பு! நுகர்வோருக்கு வந்த புதிய வசதி.. வெளியானது முக்கிய அப்டேட் -
“போலீஸ் என்றால் சிரிக்க கூடாதா? இதில் என்ன பிரச்சனை?” அமைச்சர் வன்னி அரசு சரமாரி கேள்வி! -
ரயிலில் உங்க சீட்டில் வேறு யாரேனும் இருந்தால் ரூ.20,000 இழப்பீடு? இந்த உத்தரவு பற்றி தெரியுமா












Click it and Unblock the Notifications