ரசாயன ஆயுத ஒழிப்பு அமைப்புக்கு அமைதிக்கான நோபல் பரிசு அறிவிப்பு
Subscribe to Oneindia Tamil

சிரியாவில் இந்த ரசாயன ஆயுத தடுப்பு அமைப்பானது ரசாயன ஆயுதங்களை அழிக்கும் பணியில் ஈடுபட்டு வருகிறது. நெதர்லாந்தில் உள்ள ஹேக்கில் இருக்கும் இந்த அமைப்பு ஐ.நாவுடன் இணைந்து செயல்பட்டு வருகிறது.
தற்போது சிரியாவில் இருக்கும் சாரின் போன்ற ஆபத்து விளைவிக்கக்கூடிய ரசாயன ஆயுத குவியல்களை வரும் ஆண்டிற்குள் அழிக்க முயற்சித்து வருகிறது. சிரியாவில் இதுபோன்ற ஆயுதங்களால் ஆகஸ்ட் மாதத்தில் மட்டும் சுமார் ஆயிரத்து 500 பேர் பலியானதாக உலக நாடுகளும், ஐ.நாவும் புகார் கூறி வருகின்றன.
ரூ7.7 கோடி ரூபாய் பரிசுத் தொகை கொண்ட இந்த அமைதி நோபல் பரிசு வரும் டிசம்பர் 10ந் தேதி ஆஸ்லோவில் வழங்கப்படவுள்ளது.












Click it and Unblock the Notifications