போர் பதற்றத்தை அதிகரிக்கும் சீனா.. இந்தியாவில் உள்ள சீனர்களை திரும்ப அழைக்க முடிவு!
Subscribe to Oneindia Tamil
பீஜிங்: இந்தியா-சீனா நடுவே போர் பதற்றத்தை அதிகரிக்கும் வகையிலான அறிவிப்பு ஒன்றை சீன வெளியுறவுத்துறை வெளியிட உள்ளதாக தகவல்கள் வெளியாாகியுள்ளன.
சிக்கிம் எல்லையில் சீனா அத்துமீறிவரும் நிலையில், இந்திய ராணுவம் அதற்கு முட்டுக்கட்டை போட்டுவருகிறது. இதனால் ஆத்திரமடைந்துள்ள சீனா போர் பீதியை கிளப்பி வருகிறது.

இந்த நிலையில், இந்தியாவில் சுற்றுப் பயணம் செய்துவரும் தங்கள் நாட்டினரை திரும்ப அழைக்க அந்த நாட்டு வெளியுறவுத்துறை முடிவு செய்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
அதேபோல, புதிதாக சீனாவிலிருந்து இந்தியாவுக்கு வரும் சுற்றுலா பயணிகளையும் தடுக்கும் உத்தரவை பிறப்பிக்க சீனா திட்டமிட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. இவ்வாறான உத்தரவு பதற்றத்தை அதிகரிக்க செய்யும் என்ற அச்சம் ஏற்பட்டுள்ளது.












Click it and Unblock the Notifications