சீனாவால் வந்த முட்டுக் கட்டை முடிவுக்கு வந்தது! ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டது பாகிஸ்தான்!!
காத்மாண்டு: சார்க் அமைப்புக்குள் ஊடுருவ சீனா முயற்சித்ததன் விளைவாக ஏற்பட்ட இறுக்கம் முடிவுக்கு வந்துள்ளது. சார்க் நாடுகளிடையே எரிசக்தி பகிர்வு தொடர்பான ஒப்பந்தத்தில் பாகிஸ்தானும் கையெழுத்திட்டது.
சார்க் அமைப்பைப் பொறுத்தவரை இந்தியா, இலங்கை, வங்கதேசம், நேபாளம், மாலத்தீவு, பூட்டான், பாகிஸ்தான் ஆகிய நாடுகள்தான் நீண்டகால உறுப்பினர்களாக இருந்து வருகின்றனர். பின்னர் 2007ஆம் ஆண்டு ஆப்கானிஸ்தான் சார்க் அமைப்பில் இணைத்துக் கொள்ளப்பட்டது.

அதே நேரத்தில் சீனா, ஆஸ்திரேலியா, அமெரிக்கா, ஐரோப்பிய ஒன்றியம், ஈரான், தென்கொரியா, மொரிசீயஸ், மியன்மார் ஆகிய நாடுகள் பார்வையாளர்கள் என்ற தகுதியை சார்க் அமைப்பில் பெற்றிருந்தன. அதுவும் சீனாவுக்கு கூட 2006ஆம் ஆண்டுதான் பார்வையாளர் அந்தஸ்து கொடுக்கப்பட்டது.
இந்த நிலையில் தெற்காசிய நாடுகள் பலவற்றிலும் கடந்த 20 ஆண்டுகாலத்தில் சீனா மேலாதிக்கம் செலுத்தி வருகிறது. தெற்காசிய நாடுகள் பலவற்றிலும் துறைமுகங்கள், மின்நிலையங்கள் அமைத்து தமது செல்வாக்கை அதிகப்படுத்திக் கொண்டது சீனா.
இதனால் சார்க் அமைப்புக்குள்ளும் மூக்கை நுழைத்துக் கொண்டு தெற்காசியாவில் இந்தியாவுக்கு போட்டியாக தம்மை நிலை நிறுத்திக் கொள்ள சீனா முயற்சித்தது. இதன் ஒரு பகுதியாக கடந்த செவ்வாய்க்கிழமையன்று சார்க் மாநாட்டை ஒட்டி நடைபெற்ற ஆலோசனைக் கூட்டத்தில், தற்போது பார்வையாளர் என்ற அந்தஸ்தில் இருக்கும் சீனா, தென்கொரியாவை அடுத்த நிலைக்கு அங்கீகரித்து சார்க் அமைப்பில் இணைத்துக் கொள்ள வேண்டும் என்று பாகிஸ்தான் வலியுறுத்தியது.
இதற்கு இலங்கை, மாலத்தீவு நாடுகள் ஆதரவளித்தன. ஆனால் இதனை இந்தியா முற்று முழுதாக நிராகரித்தது.
இதனால் பாகிஸ்தான் கடும் அதிருப்தியடைந்தது. பாகிஸ்தான் தனது அதிருப்தியை வெளிப்படுத்தும் வகையில் சார்க் நாடுகளிடையேயான சாலை வழி போக்குவரத்து, மின்பகிர்வு போன்றவை தொடர்பான 3 முக்கிய ஒப்பந்தங்களில் கையெழுத்திட பாகிஸ்தான் மறுத்துவிட்டது. இப்படி சீனாவின் தலையீட்டால் தெற்காசிய நாடுகளுக்கான தனித்துவமான கூட்டமைப்பான சார்க் அமைப்பில் ஒரு தேக்க நிலை உருவாகும் சூழல் ஏற்பட்டது.
இந்த நிலையில் சார்க் மாநாட்டின் இறுதி நாளான இன்று உறுப்பு நாடுகளின் தலைவர்களிடையேயான கருத்து வேறுபாடுகளை களைவதற்கான பேச்சுவார்த்தை நடத்தப்பட்டது. இந்தப் பேச்சுவார்த்தையின் முடிவில் சார்க் நாடுகளிடையேயான எரிசக்தி பகிர்வு ஒப்பந்தத்தில் பாகிஸ்தான் கையெழுத்திட்டது.
அத்துடன் சார்க் அமைப்பின் அடுத்த மாநாடு பாகிஸ்தானின் இஸ்லாமாபாத்தில் நடைபெறும் என்றும் நேபாள பிரதமர் சுஷில் கொய்ராலா தெரிவித்தார்.
-
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள் -
நான் பார்த்துகிறேன் நண்பா.. உறுதியாக சொன்ன விஜய்.. அஜித் தாய் மறைந்த இரவு.. நடந்தது என்ன?












Click it and Unblock the Notifications