சீனாவால் வந்த முட்டுக் கட்டை முடிவுக்கு வந்தது! ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டது பாகிஸ்தான்!!
காத்மாண்டு: சார்க் அமைப்புக்குள் ஊடுருவ சீனா முயற்சித்ததன் விளைவாக ஏற்பட்ட இறுக்கம் முடிவுக்கு வந்துள்ளது. சார்க் நாடுகளிடையே எரிசக்தி பகிர்வு தொடர்பான ஒப்பந்தத்தில் பாகிஸ்தானும் கையெழுத்திட்டது.
சார்க் அமைப்பைப் பொறுத்தவரை இந்தியா, இலங்கை, வங்கதேசம், நேபாளம், மாலத்தீவு, பூட்டான், பாகிஸ்தான் ஆகிய நாடுகள்தான் நீண்டகால உறுப்பினர்களாக இருந்து வருகின்றனர். பின்னர் 2007ஆம் ஆண்டு ஆப்கானிஸ்தான் சார்க் அமைப்பில் இணைத்துக் கொள்ளப்பட்டது.

அதே நேரத்தில் சீனா, ஆஸ்திரேலியா, அமெரிக்கா, ஐரோப்பிய ஒன்றியம், ஈரான், தென்கொரியா, மொரிசீயஸ், மியன்மார் ஆகிய நாடுகள் பார்வையாளர்கள் என்ற தகுதியை சார்க் அமைப்பில் பெற்றிருந்தன. அதுவும் சீனாவுக்கு கூட 2006ஆம் ஆண்டுதான் பார்வையாளர் அந்தஸ்து கொடுக்கப்பட்டது.
இந்த நிலையில் தெற்காசிய நாடுகள் பலவற்றிலும் கடந்த 20 ஆண்டுகாலத்தில் சீனா மேலாதிக்கம் செலுத்தி வருகிறது. தெற்காசிய நாடுகள் பலவற்றிலும் துறைமுகங்கள், மின்நிலையங்கள் அமைத்து தமது செல்வாக்கை அதிகப்படுத்திக் கொண்டது சீனா.
இதனால் சார்க் அமைப்புக்குள்ளும் மூக்கை நுழைத்துக் கொண்டு தெற்காசியாவில் இந்தியாவுக்கு போட்டியாக தம்மை நிலை நிறுத்திக் கொள்ள சீனா முயற்சித்தது. இதன் ஒரு பகுதியாக கடந்த செவ்வாய்க்கிழமையன்று சார்க் மாநாட்டை ஒட்டி நடைபெற்ற ஆலோசனைக் கூட்டத்தில், தற்போது பார்வையாளர் என்ற அந்தஸ்தில் இருக்கும் சீனா, தென்கொரியாவை அடுத்த நிலைக்கு அங்கீகரித்து சார்க் அமைப்பில் இணைத்துக் கொள்ள வேண்டும் என்று பாகிஸ்தான் வலியுறுத்தியது.
இதற்கு இலங்கை, மாலத்தீவு நாடுகள் ஆதரவளித்தன. ஆனால் இதனை இந்தியா முற்று முழுதாக நிராகரித்தது.
இதனால் பாகிஸ்தான் கடும் அதிருப்தியடைந்தது. பாகிஸ்தான் தனது அதிருப்தியை வெளிப்படுத்தும் வகையில் சார்க் நாடுகளிடையேயான சாலை வழி போக்குவரத்து, மின்பகிர்வு போன்றவை தொடர்பான 3 முக்கிய ஒப்பந்தங்களில் கையெழுத்திட பாகிஸ்தான் மறுத்துவிட்டது. இப்படி சீனாவின் தலையீட்டால் தெற்காசிய நாடுகளுக்கான தனித்துவமான கூட்டமைப்பான சார்க் அமைப்பில் ஒரு தேக்க நிலை உருவாகும் சூழல் ஏற்பட்டது.
இந்த நிலையில் சார்க் மாநாட்டின் இறுதி நாளான இன்று உறுப்பு நாடுகளின் தலைவர்களிடையேயான கருத்து வேறுபாடுகளை களைவதற்கான பேச்சுவார்த்தை நடத்தப்பட்டது. இந்தப் பேச்சுவார்த்தையின் முடிவில் சார்க் நாடுகளிடையேயான எரிசக்தி பகிர்வு ஒப்பந்தத்தில் பாகிஸ்தான் கையெழுத்திட்டது.
அத்துடன் சார்க் அமைப்பின் அடுத்த மாநாடு பாகிஸ்தானின் இஸ்லாமாபாத்தில் நடைபெறும் என்றும் நேபாள பிரதமர் சுஷில் கொய்ராலா தெரிவித்தார்.
-
போரில் ‘என்ட்ரி'யான ரஷ்யா.. அரபு நாடுகளை ஈரான் தாக்கியது எப்படி? டிரம்பை கதறவிடும் புதின்! -
த்ரிஷா பற்றி விஜய் பாதுகாவலர் போட்ட போஸ்ட்.. மொத்த பிரச்சனைக்கும் பதில்! குவியும் கமெண்ட்ஸ் -
2020ல் ஒரு கோடிக்கு 'இதை' வாங்கியிருந்தால் இன்று 75 கோடி லாபம்.. எஸ்பிஐயில் 6 கோடி.. தங்கம் 4 கோடி -
ஸ்டாலின் காதுக்கு எட்டிய பெயர்.. உளவுத்துறைக்கு உடனே உத்தரவு.. சென்னை சுவரில் தோன்றிய நாடார் சங்கம் -
விஜய்க்கு தான் பிரச்சனை! அடுத்த அடி, அதிரடி காட்டும் மகன் ஜேசன் சஞ்சீவ்! இதுதான் கெத்து.. குவியும் பாராட்டு -
மக்களின் கண்ணோட்டமே உங்களை பிரபலமாக மாற்றுகிறது.. விஜய்க்கு கிருத்திகா உதயநிதி சூசக அட்வைஸ்! -
“ஒரு சாதாரண வக்கீல்” .. சீண்டிய ஜெயலலிதா.. ப.சிதம்பரம் செய்த சம்பவங்கள்! -
“OPS சிரிப்பே அவருக்கு பிரச்சனை”.. ஸ்டாலின் பேச பேச.. மேடையிலேயே குலுங்கி குலுங்கி சிரித்த ஓபிஎஸ்! -
"தமிழ்நாடு உங்களை மறக்காது" ஆளுநரிடம் சொல்லி ஸ்டாலின் தந்த பரிசு பாருங்க! உடனே RN ரவியின் பரவச பதில் -
நகைக்கடன் தள்ளுபடி கூட்டுறவு வங்கியின் சர்ப்ரைஸ் வரட்டும்! ஊழியர்களுக்கு ரூ.8000 ஏறிய ஊதியம் பாருங்க -
அரபு நாடுகள் மீது இனி தாக்குதல் கிடையாது.. மன்னிப்பு கேட்ட ஈரான் அதிபர்! முடிவுக்கு வரும் போர்? -
பக்கத்து நாட்டை தாக்க மாட்டோம்னு சொல்லி.. துபாய் விமான நிலையத்தை அட்டாக் செய்த ஈரான்! ஷாக் வீடியோ












Click it and Unblock the Notifications