பிறை உட்பட அனைத்து இஸ்லாமிய சின்னங்களையும் நீக்குக.. சீனாவில் அரசு புதிய கெடுபிடி.. பகீர் காரணம்!
சீனாவில் இஸ்லாமிய மதத்திற்கு தொடர்பு இருப்பதாக கருதப்படும் அனைத்து சின்னங்களையும் நீக்க வேண்டும் என்று அந்நாட்டு கம்யூனிஸ்ட் அரசு உத்தரவு பிறப்பித்துள்ளது.
Recommended Video
பெய்ஜிங்: சீனாவில் இஸ்லாமிய மதத்திற்கு தொடர்பு இருப்பதாக கருதப்படும் அனைத்து சின்னங்களையும் பொது இடத்தில் இருந்து நீக்க வேண்டும் என்று அந்நாட்டு கம்யூனிஸ்ட் அரசு உத்தரவு பிறப்பித்துள்ளது.
உலகில் இஸ்லாமியர்கள் அதிகம் வாழும் நாடுகளில் சீனாவும் ஒரு முக்கியமான நாடு ஆகும். அங்கு மொத்த மக்கள் தொகையில் தற்போது 20 மில்லியன் இஸ்லாமியர்கள் இருக்கிறார்கள்.
ஆசியாவில் பல நாடுகளில் இஸ்லாமியர்கள் மோசமாக நடத்தப்பட்டு வந்தாலும் சீனாவில் இத்தனை நாட்கள் நல்ல நிலையில்தான் நடத்தப்பட்டு வந்தனர். ஆனால் அதற்கும் தற்போது பிரச்சனை ஏற்படும் நிலை உருவாகி உள்ளது.

என்ன உத்தரவு
சீனாவில் இஸ்லாமிய மதத்திற்கு தொடர்பு இருப்பதாக கருதப்படும் அனைத்து சின்னங்களை நீக்க வேண்டும் என்று அந்நாட்டு கம்யூனிஸ்ட் அரசு உத்தரவு பிறப்பித்துள்ளது. இஸ்லாமியர்களின் கடைகளில் இருக்கும் பிறை முத்திரை, மசூதி முத்திரைகளை நீக்க அந்நாட்டு அரசு உத்தரவு பிறப்பித்துள்ளது. பொது இடங்களில் இனி இந்த முத்திரைகள் இருக்க கூடாது என்று உத்தரவு பிறப்பித்துள்ளது.

வேறு என்ன
அதேபோல் ஹோட்டல்களில் அரபிக் எழுத்துக்களில் ஹலால் என்று எழுதப்பட்டு இருக்க கூடாது என்றும் கூறியுள்ளது. ஹலால் உணவு என்று ஹோட்டலில் எல்லோருக்கும் தெரியும்படி பொதுவில் எழுதுவது தவறு என்று கூறியுள்ளது. இதனால் அங்கு இருக்கும் ஹோட்டலில் ஹலால் முத்திரை நீக்கப்பட்டு வருகிறது.

என்ன மசூதிகள்
அதேபோல் இஸ்லாமிய நாடுகளில் இருப்பதை போல கூம்பு வடிவம் கொண்ட வகையில் மசூதிகள் இனி கட்டுவதை குறைக்க வேண்டும் என்று அறிவுறுத்தப்பட்டு உள்ளது. 2016லேயே அந்நாடு இஸ்லாமியா மதத்திற்கு எதிராக இது போன்ற சிறிய சிறிய நடவடிக்கைகளை எடுத்து வந்தது. தற்போது அது உச்சம் அடைந்து உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

காரணம் என்ன
அதன்படி சீனாவில் இஸ்லாம் மதம் மட்டுமில்லாமல் கிறிஸ்துவமும் இதேபோல் கெடுபிடிகளுக்கு உள்ளாகி வருகிறது. சீனாவில் புத்தமதம் தவிர்த்து மற்ற மதங்களை கொஞ்சம் கொஞ்சமாக புறக்கணிக்க அரசு முயல்வதாக புகார் எழுந்துள்ளது. சீனாவிற்கும் இந்த மதங்களுக்கும் தொடர்பு இல்லை என்பதால் இது போல நடவடிக்கை எடுப்பதாக அரசு தரப்பில் பகீர் விளக்கம் அளிக்கப்பட்டுள்ளது.
-
சொத்து வைத்திருப்போர் கவனத்திற்கு! ஏப்.1 முதல் பத்திரப்பதிவில் பெரிய மாற்றம்.. இனி நிலம் இந்த விலை? -
கேஸ் சிலிண்டர் விலை மாறுது! ஏப்.1 முதல் புதிய விலை! இல்லத்தரசிகள் மாத பட்ஜெட்டில் என்ன தாக்கம்? -
H-1B விசா கட்டுப்பாடுகள் நீக்கம்.. அமெரிக்காவில் முக்கிய மசோதா.. இதுதான் இந்தியர்களுக்கு நல்ல செய்தி -
இதுக்கு மேல கடன் வாங்க முடியாது.. கஜானா காலி.. தத்தளிக்கும் தமிழக வெற்றிக் கழகம்.. அப்போ விஜய்? -
தங்கம்.. 'தரை' தட்டியது ஏன்? கூடை கூடையாக மார்க்கெட்டில் விற்ற அரபு நாடுகள்.. ஒரு ராட்சனின் வீழ்ச்சி -
வளைகுடா வளையம்: ஈரானிடம் இந்தியா வைத்த 'செக்'.. தவிப்பில் கச்சா எண்ணெய்! டெல்லி மெகா முடிவு -
திமுக வேட்பாளர் நேர்காணலில் பங்கேற்ற துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின்.. என்ன கேட்கப்பட்டது என விளக்கம் -
இமாச்சல் போல.. தமிழகத்தில் அரசு ஊழியர்களின் மாத சம்பளத்தை 30% குறைக்க வேண்டியது வரும்.. அன்புமணி -
டிராகனின் வெள்ளி வேட்டை.. சீனாவைச் சுழற்றியடிக்கும் சில்வர் ஜுரம்.. வெள்ளி இனி குட்டித்தங்கம்.. ஏன்? -
முதல் விக்கெட்.. திமுக கூட்டணியில் விலகிய தமிழக வாழ்வுரிமை கட்சி.. அறிவித்தார் வேல்முருகன் -
Siragadikka Aasai Promo: விஜயாவுக்கு எதிராக ஆதாரத்தை கண்டுபிடித்த முத்து- மீனா.. சிந்தாமணிக்கு ஆப்பு! செம சம்பவம் -
நன்றியய்யா நன்றி.. ஓட்டல் ஓனர்கள் வயிற்றில் பால் வார்த்த அறிவிப்பு! இனி சிலிண்டர் தட்டுப்பாடு இல்லை!












Click it and Unblock the Notifications