பிறை உட்பட அனைத்து இஸ்லாமிய சின்னங்களையும் நீக்குக.. சீனாவில் அரசு புதிய கெடுபிடி.. பகீர் காரணம்!
சீனாவில் இஸ்லாமிய மதத்திற்கு தொடர்பு இருப்பதாக கருதப்படும் அனைத்து சின்னங்களையும் நீக்க வேண்டும் என்று அந்நாட்டு கம்யூனிஸ்ட் அரசு உத்தரவு பிறப்பித்துள்ளது.
Recommended Video
பெய்ஜிங்: சீனாவில் இஸ்லாமிய மதத்திற்கு தொடர்பு இருப்பதாக கருதப்படும் அனைத்து சின்னங்களையும் பொது இடத்தில் இருந்து நீக்க வேண்டும் என்று அந்நாட்டு கம்யூனிஸ்ட் அரசு உத்தரவு பிறப்பித்துள்ளது.
உலகில் இஸ்லாமியர்கள் அதிகம் வாழும் நாடுகளில் சீனாவும் ஒரு முக்கியமான நாடு ஆகும். அங்கு மொத்த மக்கள் தொகையில் தற்போது 20 மில்லியன் இஸ்லாமியர்கள் இருக்கிறார்கள்.
ஆசியாவில் பல நாடுகளில் இஸ்லாமியர்கள் மோசமாக நடத்தப்பட்டு வந்தாலும் சீனாவில் இத்தனை நாட்கள் நல்ல நிலையில்தான் நடத்தப்பட்டு வந்தனர். ஆனால் அதற்கும் தற்போது பிரச்சனை ஏற்படும் நிலை உருவாகி உள்ளது.

என்ன உத்தரவு
சீனாவில் இஸ்லாமிய மதத்திற்கு தொடர்பு இருப்பதாக கருதப்படும் அனைத்து சின்னங்களை நீக்க வேண்டும் என்று அந்நாட்டு கம்யூனிஸ்ட் அரசு உத்தரவு பிறப்பித்துள்ளது. இஸ்லாமியர்களின் கடைகளில் இருக்கும் பிறை முத்திரை, மசூதி முத்திரைகளை நீக்க அந்நாட்டு அரசு உத்தரவு பிறப்பித்துள்ளது. பொது இடங்களில் இனி இந்த முத்திரைகள் இருக்க கூடாது என்று உத்தரவு பிறப்பித்துள்ளது.

வேறு என்ன
அதேபோல் ஹோட்டல்களில் அரபிக் எழுத்துக்களில் ஹலால் என்று எழுதப்பட்டு இருக்க கூடாது என்றும் கூறியுள்ளது. ஹலால் உணவு என்று ஹோட்டலில் எல்லோருக்கும் தெரியும்படி பொதுவில் எழுதுவது தவறு என்று கூறியுள்ளது. இதனால் அங்கு இருக்கும் ஹோட்டலில் ஹலால் முத்திரை நீக்கப்பட்டு வருகிறது.

என்ன மசூதிகள்
அதேபோல் இஸ்லாமிய நாடுகளில் இருப்பதை போல கூம்பு வடிவம் கொண்ட வகையில் மசூதிகள் இனி கட்டுவதை குறைக்க வேண்டும் என்று அறிவுறுத்தப்பட்டு உள்ளது. 2016லேயே அந்நாடு இஸ்லாமியா மதத்திற்கு எதிராக இது போன்ற சிறிய சிறிய நடவடிக்கைகளை எடுத்து வந்தது. தற்போது அது உச்சம் அடைந்து உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

காரணம் என்ன
அதன்படி சீனாவில் இஸ்லாம் மதம் மட்டுமில்லாமல் கிறிஸ்துவமும் இதேபோல் கெடுபிடிகளுக்கு உள்ளாகி வருகிறது. சீனாவில் புத்தமதம் தவிர்த்து மற்ற மதங்களை கொஞ்சம் கொஞ்சமாக புறக்கணிக்க அரசு முயல்வதாக புகார் எழுந்துள்ளது. சீனாவிற்கும் இந்த மதங்களுக்கும் தொடர்பு இல்லை என்பதால் இது போல நடவடிக்கை எடுப்பதாக அரசு தரப்பில் பகீர் விளக்கம் அளிக்கப்பட்டுள்ளது.
-
சீமான் வீட்டு விசேஷத்தில் தாய்மாமன் சீருடன் அனிதா ராதாகிருஷ்ணன்! வாசல் வரை வரவேற்று.. என்ன ஒரு பாசம் -
எடப்பாடி அனுப்பிய மெசேஜ்.. சி.வி. சண்முகம் வீட்டில் உறுதிபடுத்திய கே.சி வீரமணி.. இணைகிறது அதிமுக -
நாளுக்கு நாள் மோசமாகும் இந்தியா.. குட்டி குட்டி நாடெல்லாம் நம்மை முந்திக்கொண்டு செல்கிறது! -
விஜய் நியமித்த 2 நாளில்.. IPS அருணை கோர்ட்டிலேயே காத்திருக்க சொன்ன நீதிபதி சுவாமிநாதன்.. ஏன்? -
420 யூனிட் ஓடியிருக்கிறது.. ஆனால் 200 யூனிட் கழிக்காமல் 100 யூனிட் கழித்தது ஏன்? விளக்கம் -
'நீங்க உம் மட்டும் கொட்டுங்க தெய்வமே.. மற்றதை நான் பார்த்துக்கிறேன்' தெறிக்கும் ஆதவ் அர்ஜுனா மீம்ஸ்! -
அவரை முதல்ல தூக்கணும்.. பிளான் போட்டு வேலை பார்த்த மூவர் அணி.. விஜய்க்கு எகிறிய பிரஷர்.. என்னாச்சு? -
கடைகளை மூடிய பணியாளர்கள்.. ஸ்தம்பித்த டாஸ்மாக்.. இரவோடு இரவாக அமைச்சர் விக்னேஷ் வெளியிட்ட அறிவிப்பு -
கோவை மக்களே 5 ஆண்டுகளுக்கு பின் வந்த குட்நியூஸ்.. விஜய் கொடுத்த கிரீன் சிக்னல் - டூயல் கான்செப்ட் பஸ் ஸ்டாண்ட்! -
அப்பறம் வச்சிக்கிறேன்.. கடுப்பான விஜய்.. கோபத்தின் உச்சிக்கே போயிட்டாராமே.. அப்படி என்ன நடந்தது? -
இடைத்தேர்தலில் பொது வேட்பாளர்களை நிறுத்தி வெற்றி பெறச் செய்வோம்.. விஜய்க்கு அன்புமணி எச்சரிக்கை -
தமிழ்த்தாய் வாழ்த்து விவகாரத்தை கையில் எடுத்த விஜய்.. உள்துறை அமைச்சகத்திடம் சொல்லுங்க.. விஜய் வைத்த கோரிக்கை!












Click it and Unblock the Notifications