132 பேரை பலிகொண்ட சீனா விமான விபத்து... காரணத்தை சொல்லப்போகும் கருப்புப்பெட்டி கிடைத்தது
பெயிஜிங்: 132 பேருடன் விபத்துக்குள்ளான சீன விமானத்தின் கருப்புப் பெட்டி கண்டெடுக்கப்பட்டுள்ளதாக அந்நாட்டு அரசு தெரிவித்து உள்ளது.
சீனாவின் தெற்கு பகுதியில் கடந்த மார்ச் 21 ஆம் தேதி, ஈஸ்டர்ன் ஏர்வேஸ் பயணிகள் விமானம் விபத்துக்குள்ளானதில், அதில் பயணித்த 132 பேரும் பரிதாபமாக உயிரிழந்தனர்.
6 ஆண்டுகள் பழமையான போயிங் 737 ரக விமானமான இது குன்மிங்கிலிருந்து 123 பயணிகள், 2 விமானிகள், 7 விமான பணியாளர்கள் என 132 பேருடன் குவாங்சி மாகாணத்துக்கு புறப்பட்டது.

ஒரு நொடியில் எல்லாம் முடிந்தது
இந்த விமானம் வுஜோ நகருக்கு அருகே தெங்க்சியன் பகுதியில் உள்ள மலையில் மோதி விபத்துக்குள்ளானது. தொடக்கத்தில் விமானத்தில் பயணித்த 132 பேரின் நிலை என்னவென்று தெரியாமல் இருந்தது. பின்னர் பயணிகள் அனைவரும் இறந்துவிட்டதாக சீன அரசு உறுதிபடுத்தியது. உலகளவில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்திய இந்த விமான விபத்து சீனாவில் கடந்த 10 ஆண்டுகளில் நிகழ்ந்த முதல் விமான விபத்தாகும்.

மீட்கப்படாத உடல்கள்
விமானம் விபத்துக்குள்ளான பகுதியில் ஆயிரத்துக்கும் அதிகமான மீட்புப்படையினர் விரைந்து சென்று மீட்புப் பணிகளில் ஈடுபட்டனர். தொடர்ந்து பல மணி நேரம் மீட்புப் பணிகளில் ஈடுபட்டும் ஏராளமான பயணிகளின் உடல்களை மீட்க முடியாமல் வீரர்கள் தடுமாறி வருகின்றனர். இதனிடையே விமானத்தில் பயணித்தவர்களின் உறவினர்கள் மற்றும் நண்பர்கள் ஈஸ்டர்ன் ஏர்லைன்ஸ் நிறுவனத்தின் அலுவலகங்களுக்கு படையெடுத்து வருகின்றனர்.

விமான விபத்துக்கான காரணம்
விமான விபத்துக்கான காரணம் குறித்து தொடர்ந்து விசாரணை நடைபெற்றபோதிலும், தெளிவான காரணங்கள் ஏதும் புலப்படவில்லை என அரசு தரப்பில் தெரிவிக்கப்பட்டு இருக்கிறது. இதனை கண்டறிய முதலில் விமானத்தின் கருப்புப் பெட்டியை கண்டறிய வேண்டும் என்பதால் அதற்கென தனி குழு அமைத்து மீட்புப்படை உதவியுடன் தேடுதல் பணி நடைபெற்றது.

என்ன காரணமாக இருக்கும்?
விமான விபத்து குறித்து விமான நிபுணர் ராபர்ட் மன் தெரிவிக்கையில், "நமக்கு கிடைத்திருக்கும் தகவலின் அடிப்படையில் பார்த்தால் விமானம் திடீரென்று கீழே விழுந்து இருக்கிறது. எப்படி விமானம் விழுந்தது என்பதை கண்டறிய வேண்டும். காக்பிட்டில் விமானிகள் என்ன பேசினார்கள் என்பதையும் பார்க்க வேண்டும். கருப்புப்பெட்டி கண்டுபிடிக்கப்பட்டால் எல்லாம் தெரிந்துவிடும். விமான பாகங்களை வைத்தும் நாம் கண்டுபிடிக்கலாம்." என்றார்.

கருப்புப் பெட்டி மீட்பு
இந்த நிலையில், விமானம் விபத்துக்குள்ளான பகுதியில் விமானத்தின் கருப்புப்பெட்டி கண்டு எடுக்கப்பட்டு இருப்பதாக அந்நாட்டின் விமான போக்குவரத்துத் துறை அமைச்சகம் தெரிவித்து உள்ளது. இதனை சீனாவின் விமான போக்குவரத்துறை ஆணைய செய்தித் தொடர்பாளர் லியூ லுசோங் உறுதிபடுத்தி இருக்கிறார். இதனை ஆய்வுக்கு உட்படுத்துவதன் மூலம் விரைவில் விமான விபத்துக்கான காரணம் தெரியவரும் என்று நம்பப்படுகிறது.
-
இமாச்சல் போல.. தமிழகத்தில் அரசு ஊழியர்களின் மாத சம்பளத்தை 30% குறைக்க வேண்டியது வரும்.. அன்புமணி -
1 சவரன் தங்க நகை வாங்க போறீங்களா? கடைக்காரர் போடும் கணக்கில் அதிக மாற்றமா? ஏமாறாமல் இருக்க பில் தேவை -
10 பைசா கூட வராது.. தங்கத்தை மொத்தமாக விற்கும் முதலீட்டாளர்கள்.. நெருங்கி வரும் பேரழிவு? -
அதை சொல்ல யாருக்கும் அருகதை இல்லை.. வீட்டிலும், ஆபீஸிலும் இதுதான் நடக்குது செல்வராகவன் ஆதங்கம் -
56 out of 234: விசிகவுக்கு "6+2!" திமுக கூட்டணியில் எந்தெந்த கட்சிகளுக்கு எத்தனை தொகுதிகள்? -
அதிமுக கூட்டணியில் பாமகவுக்கு 18, அமமுகவுக்கு 11 தொகுதிகள் ஒதுக்கீடு! -
கேஸ் மானியம் ₹300 வந்தாச்சா? வங்கிக்கு போகவே வேண்டாம்… வீட்டிலேயே 2 நிமிஷத்தில் தெரிஞ்சுக்கலாம் -
48 அவுட் ஆஃப் 234! திமுக கூட்டணியில் இதுவரை எந்தெந்த கட்சிகளுக்கு எத்தனை சீட் ஒதுக்கீடு! -
PHH, AAY ரேஷன் கார்டுதாரர்களுக்கு முக்கிய அறிவிப்பு! கார்டு காலி ஆயிடும்..ரேகை வைக்கலைனா ப்ளாக் தான் -
அமெரிக்காவை வீழ்த்தும் ஈரான்.. ஆட்டம் காணும் மிதக்கும் அரண்மனை.. ஒரே இரவில் பஸ்பம் ஆன $13000000000! -
டிரம்ப் வயிற்றில் பாலை வார்த்த ஈரான்.. அமெரிக்காவுக்கு முதல் முறையாக பச்சைக்கொடி -
நாகர்கோவில் எம்எல்ஏ காந்திக்கு கல்தா.. பாஜக தலைமை முடிவால் கலக்கம்












Click it and Unblock the Notifications