சீனா: அதிகரிக்கும் முதியவர்கள்... விரைவில் ‘நாம் இருவர் நமக்கு இருவர் திட்டம்’ அமல்

Subscribe to Oneindia Tamil

ஷாங்காய்: மக்கட்தொகைப் பெருக்கத்தைக் கட்டுப் படுத்துவதற்காக இயற்றப் பட்ட ஒரு குழந்தை திட்டத்திற்கு பதிலாக, இனி தம்பதிகள் இரண்டு குழந்தைகள் பெற்றுக் கொள்ளும் திட்டத்தை அமல் படுத்த சீனா திட்டமிட்டுள்ளது.

உலக மக்கள் தொகையில் முதலிடத்தில் இருக்கிறது சீனா. எனவே, பெருகி வரும் மக்கட்தொகைப் பெருக்கத்தைக் கட்டுப் படுத்தும் நோக்கில் ஒரு குழந்தை திட்டத்தை கொண்டு வந்தது சீனா.

ஆனால், தற்போது சீனாவில் இளைஞர்களின் எண்ணிக்கையைப் பெருக்கும் வகையில் ஒரு குழந்தை திட்டத்தை வாபஸ் பெற அந்நாடு முடிவு செய்துள்ளதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.

மட்டுப்பட்ட மக்கட்தொகை....

மட்டுப்பட்ட மக்கட்தொகை....

சீனாவில் ஒரு குடும்பத்துக்கு ஒரு குழந்தை மட்டுமே பெறும் திட்டம் கடுமையாக்கப் பட்டதன் மூலம், அங்கு ‘மளமள'வென பெருகி வந்த மக்கள் தொகை கட்டுப்பாட்டுக்குள் வந்தது.

பெண்கள் தட்டுப்பாடு...

பெண்கள் தட்டுப்பாடு...

ஆனால், ஒரு குழந்தை மட்டுமே பெற வேண்டும் என்பதால் கருவில் இருக்கும் பெண் குழந்தைகள் அழிக்கப்படுவதாகவும், அதனால் திருமணம் செய்யும் இளைஞர்களுக்கு மணப்பெண் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளதாகவும் அங்கு குற்றச்சாட்டு எழுந்துள்ளது.

இளைஞர்கள் குறைவு....

இளைஞர்கள் குறைவு....

மேலும், சீனாவில் முதியவர்களின் எண்ணிக்கை லட்சக்கணக்கில் அதிகரித்து விட்டதாம். இதனால், இளைஞர்களின் மனித ஆற்றல் சக்தி குறைந்து விட்டதாகவும் கூறப்படுகிறது.

விரைவில் வாபஸ்...

விரைவில் வாபஸ்...

நாட்டின் நலனைக் கருத்தில் கொண்டு ஒரு குழந்தை திட்டத்தை தவிர்க்க சீனா அரசு முடிவு செய்துள்ளது. அதன்படி இத்திட்டம் விரைவில் வாபஸ் பெறப்பட உள்ளது.

புதிய சட்டம்...

புதிய சட்டம்...

விரைவில் நடைபெற உள்ள தேசிய மக்கள் காங்கிரசின் நிலைக் குழு கூட்டத்தில் குடும்பத்துக்கு 2 குழந்தை பெற்றுக் கொள்ளும் சட்டம் கொண்டு வரப்பட உள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

நாம் இருவர் நமக்கு இருவர்....

நாம் இருவர் நமக்கு இருவர்....

அதன்படி இனி புதிதாக திருமணம் செய்யும் தம்பதிகள் 2 குழந்தை பெற்றுக் கொள்ளலாம். அதே நேரத்தில் ஒரு குழந்தை மட்டுமே பெற்றுக் கொண்ட தம்பதிகள் மேலும் ஒரு குழந்தை பெற்றுக் கொள்ளவும் இச்சட்டம் அனுமதி அளிக்கும் என எதிர் பார்க்கப்படுகிறது.

லேபர் முகாம்கள்....

லேபர் முகாம்கள்....

அதே போன்று இளம் சிறார் குற்றவாளிகள் கைது செய்யப்பட்டு விசாரணை எதுவுமின்றி ‘லேபர்' முகாம்களில் அடைக்கப்படுகின்றனர். குடும்பத்தை பிரியும் இவர்கள் பல ஆண்டுகளாக தனிமையில் வாடுகின்றனர். இது மனித உரிமையை மீறுவதாக உள்ளது என்ற குற்றச்சாட்டும் உள்ளது. எனவே இச்சட்டமும் நீக்கப்பட்டு லேபர் முகாம்கள் மூடப்பட உள்ளது குறிப்பிடத்தக்கது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+