சீனாவில் தீவிரவாத தாக்குதல்கள்: 9 பேருக்கு தூக்கு தண்டனை
Subscribe to Oneindia Tamil
பீஜிங்: சீனாவில் தீவிரவாத தாக்குதல்கள் வழக்கில் 9 பேருக்கு தூக்கு தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.
சீனாவில் ஸின்ஜியாங் மாகாணத்திலும், பிற பகுதிகளிலும் தொடர்ந்து தீவிரவாத தாக்குதல்கள் நடைபெற்று வந்தன. ரயில் நிலையங்களில் நடந்த கத்திக்குத்து சம்பவங்கள், உரும்கியில் நடந்த குண்டுவெடிப்புகள் ஆகியவையும் இதில் அடங்கும்.
இந்த சம்பவங்கள் தொடர்பாக அல்கொய்தா தீவிரவாத இயக்கத்துடன் தொடர்புடைய கிழக்கு துர்கிஸ்தான் இஸ்லாமிய இயக்கத்தினர் 81 பேர் மீது குற்றம் சாட்டப்பட்டது.
இது தொடர்பான வழக்கை சீனாவில் உள்ள பல்வேறு நீதிமன்றங்கள் விசாரித்து நேற்று தீர்ப்பு அளித்தன. இதில் 9 பேருக்கு தூக்கு தண்டனை விதிக்கப்பட்டது. எஞ்சியோருக்கு தீவிரவாத குற்றச்சாட்டின்பேரில் பல்வேறு கால அளவில் சிறைத்தண்டனை விதிக்கப்பட்டது.












Click it and Unblock the Notifications