தனியாக விசாரிப்போம்.. காஷ்மீர் பிரச்சனையில் 5 முக்கிய நாடுகளுடன் கை கோர்க்கும் சீனா.. ஷாக்கிங்!
பெய்ஜிங்: ஜம்மு காஷ்மீர் விவகாரத்தை ஐநாவில் உள்ள முக்கிய நாடுகளிடம் முறையிட உள்ளதாக சீனா முடிவு எடுத்துள்ளது. இது தொடர்பாக தனியாக ஆலோசிக்க அழைப்பும் விடுத்துள்ளது.
கடந்த வாரம் யாரும் எதிர்பார்க்காத திருப்பமாக ஜம்மு காஷ்மீருக்கு சிறப்பு உரிமைகளை வழங்கக் கூடிய அரசியல் சாசனத்தின் 370வது பிரிவை நீக்குவதாக மத்திய அரசு அறிவித்தது. அதேபோல் காஷ்மீரை இரண்டாக பிரித்துக் நடவடிக்கை எடுத்துள்ளது.
இது பற்றி உலக நாடுகள் பெரியதாக எந்த விதமான கருத்தும் தெரிவிக்கவில்லை. ஆனால் தற்போது கொஞ்சம் கொஞ்சமாக இது உலக அளவில் பிரச்சனையாகி வருகிறது.

கடந்த வாரம்
இந்தியாவுடன் அனைத்து விதமான வர்த்தக உறவு மற்றும் தூதரக உறவுகளை நிறுத்த போவதாகவும் பாகிஸ்தான் அறிவித்துள்ளது. மேலும் வாகாவில் இருக்கும் எல்லையை மொத்தமாக மூடுவதாக பாகிஸ்தான் அறிவித்துள்ளது. அதேபோல் ஜம்மு காஷ்மீர் விவகாரத்தில் நடந்த அதிரடி மாற்றங்கள் குறித்து ஐநாவில் முறையிட உள்ளதாக பாகிஸ்தான் முடிவு எடுத்தது.

பாதுகாப்பு
ஐநாவில் மட்டுமில்லாமல் ஐநா பாதுகாப்பு கவுன்சிலிலும் முறையிட போவதாக பாகிஸ்தான் அறிவித்தது. அதேபோல் ஐநா பாதுகாப்பு கவுன்சிலுக்கு தரப்பில் இருந்து கடிதமும் அளித்துள்ளது. பாகிஸ்தானை தொடர்ந்து தற்போது சீனாவும் ஐநா பாதுகாப்பு கவுன்சிலில் முறையிட்டு இருக்கிறது.

யார் இருக்கிறார்கள்
ஐநா பாதுகாப்பு கவுன்சிலில் தற்போது சீனா, பிரான்ஸ், ரஷ்யா, பிரிட்டிஷ், அமெரிக்கா ஆகிய நாடுகள் இருக்கிறது. இவர்களிடம் பாகிஸ்தான் தரப்பில் புகார் அளிக்கப்பட உள்ளது. தற்போது சீனாவும் மீதம் இருக்கும் நான்கு நாடுகளிடமும் புகார் அளித்துள்ளது.

என்ன அழைப்பு
அதன்படி காஷ்மீர் விவகாரம் குறித்து தனியாக விசாரிக்க வேண்டும். ஐந்து நாடுகள் சேர்ந்து ஆலோசிக்க வேண்டும். உடனடியாக இதற்கான கூட்டத்தை கூட்ட வேண்டும் என்று சீனா தரப்பில் கூறப்பட்டுள்ளது. ஆனால் இன்னும் இதற்கு ஐநா பாதுகாப்பு கவுன்சில் சரியான பதில் அளிக்கவில்லை.
-
ரூட்டை மாற்றிய இந்திய ஐடி நிறுவனங்கள்.. இனியும் சும்மா இருந்தா வேலைக்கு ஆகாது! -
விஜய்யின் ஆலோசகர் + 2 அமைச்சர்களால் நேர்ந்த அவமானம்.. சட்டசபை செயலாளர் சீனிவாசன் பதவி விலகியது ஏன்? -
75 பவுன்ஸ் ஆன செக்குகள்.. நடிகர் கரண் வாழ்க்கையை கெடுத்தது அந்த பெண்ணா? உண்மையை உடைத்த பிரபலம் -
எலக்ட்ரீஷியன் நள்ளிரவில் வாஷ்பேசினில் பண்ண காரியம்! உறைந்து போன 4 பிஞ்சு குழந்தைகள்! பதைபதைத்த கேரளா -
பனையூர் பாபுவின் மாஸ் மூவ்... அந்த தொகுதிதான் காரணமா? 7ம் தேதி திமுகவில் சர்ப்ரைஸ்.. ஆடிப்போன விசிக -
விஜய்யை இப்படியே விடக்கூடாது.. பாஜக பாணியை கையில் எடுக்கும் திமுக.. பெரிய மாற்றம் வரப்போகுது -
மம்தாவை கதறவிடும் முதல் முறை எம்எல்ஏ.. 60 எம்எல்ஏக்களை அபகரித்தது எப்படி? தி.காங்கிரஸ் பிளவு பின்னணி -
காங்கிரஸுக்கு ராஜ்யசபா சீட்.. அலேக்காக தப்பிக்கும் தவெக! பிளான் இதுதான்! -
அழுதபடி அலிசா அப்துல்லா புகார்.. ஒரே நாளில் திருச்சி சூர்யாவை தூக்கிய போலீஸ்! தலைமறைவான முக்தார்? -
பயங்கரமான ஆளுங்க விஜய்! காங்கிரஸுக்கு தான் சீட்டு.. ஆனா எம்பி எங்களுங்க! ராஜ்சபா சீட்டு யாருக்கு? -
துன்பத்திலும் ஒரு இன்பம்.. மத்திய அமைச்சராகும் நயினார்! தமிழக பாஜக புதிய தலைவர் இவரா? கலகல கமலாலயம்! -
ரூ.72 லட்சம் பணம் அக்கவுண்டில் ஏறியதும் ஊரைவிட்டே ‘எஸ்கேப்’.. மோசடி புகாரில் தவெக நிர்வாகி கைது!












Click it and Unblock the Notifications