> ரத்த வாந்தி எடுக்கும் முஸ்லீம்களின் கப்பில் நீர் குடித்ததற்காக தூக்கு தண்டனை விதிக்கப்பட்ட பாக். க
இஸ்லாமாபாத்: பாகிஸ்தானில் முஸ்லீம் பெண்கள் குடித்த கப்பில் தண்ணீர் குடித்த காரணத்திற்காக மரண தண்டனை விதிக்கப்பட்ட கிறிஸ்தவ பெண்ணுக்கு குடலில் ரத்தக்கசிவு ஏற்பட்டுள்ளதுடன் அவர் ரத்த வாந்தி எடுத்துக் கொண்டிருக்கிறார்.
பாகிஸ்தானில் வசித்து வருபவர் கிறிஸ்தவரான ஆசிக் மசிஹ். அவரது மனைவி ஆசியா பீபி(50). அவர்களுக்கு 3 மகள்கள் உள்ளனர். இந்நிலையில் கடந்த 2009ம் ஆண்டு ஜுன் மாதம் வயலில் வேலை செய்கையில் கிறிஸ்தவரான ஆசியா முஸ்லீம் பெண்கள் குடித்த அதே கப்பில் தண்ணீர் குடித்துள்ளார். அதற்கு வயலில் வேலை பார்த்த முஸ்லீம் பெண்கள் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர்.

மேலும் அந்த பெண்கள் மத தலைவரை சந்தித்து ஆசியா பீபி நபிகள் நாயகத்தை அவமதித்துவிட்டார், மத நிந்தனை செய்துவிட்டார் என்று புகார் தெரிவித்தனர். இது குறித்த வழக்கில் கடந்த 2010ம் ஆண்டு ஆசியா பீபிக்கு மரண தண்டனை விதிக்கப்பட்டது. கடந்த 5 ஆண்டுகளாக சிறையில் உள்ள ஆசியாவின் உடல்நலம் பாதிக்கப்பட்டுள்ளது.
அவரது குடலில் ரத்தக்கசிவு ஏற்பட்டுள்ளது. மேலும் அவர் ரத்த வாந்தி எடுப்பதுடன் சாப்பிடவே கஷ்டப்படுகிறார். இந்நிலை தொடர்ந்தால் அவரை தூக்கிலிடாமலேயே இறந்துவிடுவார் என்று கூறப்படுகிறது.
ஆசியாவின் தண்டனையை ஆயுள் தண்டனையாக குறைக்க அவரது வழக்கறிஞர்கள் கடந்த ஆண்டு லாகூர் உயர் நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்தனர். ஆனால் லாகூர் உயர் நீதிமன்றமோ ஆசியாவின் தூக்கு தண்டனையை உறுதி செய்தது.
ஆசியா பீபிக்கு பொதுமன்னிப்பு அளிக்குமாறு கூறி அவரின் கணவர் பாகிஸ்தான் அதிபருக்கு கருணை மனு அனுப்பியுள்ளார். அதிபர் அந்த மனுவை ஏற்றுக் கொண்டால் ஆசியா பீபி தூக்கில் இருந்து தப்பிக்க முடியும்.
-
ஆபாசம்.. ஆபாசம்.. யூடியூபர்கள் கிருஷ் ஐஷ்வர்யா மீது கோவை சைபர் க்ரைம் போலீஸில் புகார் -
சென்னையில் நாளை மாலை ‘GenZ DMK’ பிரம்மாண்ட நிகழ்ச்சி.. களமிறங்கும் திமுக உணர்வுள்ள இளைஞர்கள்! -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக -
விசில் அடித்து முன்னேறும் கர்நாடகா, ஆந்திரா.. இனி தமிழ்நாடு வேடிக்கை பார்க்கணும்! விஜய் போட்ட பிரேக் -
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
சிவகுமார் போட்ட மாஸ்டர் ஸ்கெட்ச்.. ராகுலுக்கு நேரமில்லை? டெல்லியில் மிஸ்டர் விஜய்னு கூப்பிட்டது யாரு -
GH-ல் கடைநிலை ஊழியர்கள் மீது நடவடிக்கை எடுத்த ரமேஷுக்கு அர்ச்சகர்கள் மீது ஆக்ஷன் எடுக்க தாமதம் ஏன்? -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பூந்தமல்லி டூ வடபழனி இனி 20 நிமிடங்களில்.. ஆளில்லா மெட்ரோ ரயில் சேவைக்கு கிடைத்த பச்சை சிக்னல் -
மாடுகளை பலியிட தடை.. நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு! விஜய்க்கு சிபிஎம் வைத்த முக்கிய கோரிக்கை!












Click it and Unblock the Notifications