இங்கிலாந்து தேவாலயங்களில் பெண் பிஷப்புகள் நியமனத்திற்கு அனுமதி
லண்டன்: இங்கிலாந்து தேவாலயங்களில் பெண் பாதிரியார்களை பிஷப்களாக நியமிப்பதற்கு அனுமதி அளிக்கப் பட்டுள்ளது.
கடந்த 1994ம் ஆண்டு இங்கிலாந்து தேவாலயங்களில் பெண் பாதிரியார்கள் நியமிக்கப் பட்டனர். ஆனால், அவர்களுக்கு சீனியர் பதவி, அதாவது பிஷப்புகளாக பணி புரிய அனுமதி மறுக்கப்பட்டது. எனவே, பெண் பாதிரியார்களையும் பிஷப்புகளாக நியமிக்க வேண்டும் என கோரிக்கை விடுக்கப்பட்டது.
அதனைத் தொடர்ந்து கடந்த 2012ம் ஆண்டு பெண் பிஷப் ஒருவர் நியமிக்கப்பட்டார். ஆனால், அதற்கு எதிர்ப்பு கிளம்பியது. முக்கிய விஷயங்களை தீர்மானிக்கும் மதகுருமார்களின் நீதிமன்றமான ‘சினாட்'ல் நடத்தப்பட்ட ஓட்டெடுப்பிலும் தோல்வியே கிடைத்தது.
பின்னர், இத்தீர்மானம் இங்கிலாந்து நாடாளுமன்றத்தில் நிறைவேற்றப்பட்டதையடுத்து, மீண்டும் ‘சினாட்' பொதுமன்ற குழு கூட்டம் நடத்தப்பட்டு வெஸ்ட் மினிஸ்டர் சர்ச் ஹவுசில் ஓட்டெடுப்பு நடந்தது. அதில் பெண் பிஷப்புகள் நியமிக்கும் தீர்மானத்துக்கு ஒப்புதல் அளிக்கப்பட்டது.
எனவே, அடுத்த மாதம் இங்கிலாந்தில் பெண் பிஷப்புகள் நியமிக்கப்படுவார்கள் என அறிவிக்கப்பட்டுள்ளது.












Click it and Unblock the Notifications