ஜி20 மாநாடு: பிரேசில் அதிபர் பொல்சனாரூவை புறக்கணித்த தலைவர்கள்- கேள்வி கேட்ட ரிப்போர்ட்டருக்கு உதை!
ரோம்: இத்தாலியின் ரோம் நகரில் நடைபெற்ற ஜி20 உச்சி மாநாட்டில் கொரோனா கால சர்ச்சை நாயகனான பிரேசில் அதிபர் பொல்சனாரூ, உலக நாடுகளின் தலைவர்களால் புறக்கணிக்கப்பட்டு தனித்துவிடப்பட்டவராக வலம் வந்தார். இது தொடர்பாக கேள்வி எழுப்பிய பிரேசில் பத்திரிகையாளர்களை பொல்சனாரூ பாதுகாவலர்கள் தாக்கியதாக புதிய பஞ்சாயத்தும் கிளம்பியுள்ளது.
உலக நாடுகளில் கொரோனா கோரத்தாண்டவமாடிய போது ஒவ்வொரு நாட்டின் தலைவரும் பேரதிர்ச்சியில் உறைந்துதான் போனார்கள். ஆனால் உலக நாடுகளிலேயே அப்படியான எந்த ஒரு கவலையும் கொள்ளாதவராக இருந்தவர் பிரேசில் அதிபர் பொல்சனாரூ.
கொரோனா தடுப்பூசி குறித்து பொல்சனாரூ பேசிய பேச்சுகள் உலக நாடுகளை அதிர்ச்சி அடையவும் வைத்தன. ஆனால் தமது நாட்டில் தடுப்பூசி போடும் திட்டத்தை தொடங்கிவைத்த அவர், இதனால் ஏற்படும் பக்க விளைவுகளுக்கு நான் பொறுப்பு அல்ல.. தடுப்பூசி போட்டுக் கொண்டு நீங்கள் முதலையாக மாறினாலும் மாறலாம் என்றார்.

பிரேசிலில் பேரழிவு
உலக நாடுகளில் அமெரிக்காவுக்கு அடுத்ததாக பிரேசிலில்தான் கொரோனா பேரழிவு அதிகம். கொரோனா மரணங்கள் பட்டியலில் பிரேசில் 2-வது இடத்தில் இருக்கிறது. ஆனால் இதைப்பற்றி எல்லாம் பொல்சனாரூ கவலைப்படவே இல்லை. கொரோனா தடுப்பூசிக்கும் எய்ட்ஸ் நோய்க்கும் தொடர்பு இருக்கிறது என்றெல்லாம் பொறுப்பற்ற முறையில் பேசி வந்தார்.

அதிபர் மீது விசாரணை
இதனால் கொந்தளித்து போன பிரேசில் மக்கள், பொல்சனாரூவுக்கு எதிராக வீதிகளில் போராடினர். முக கவசம் வேண்டாம்; தடுப்பூசி வேண்டாம் என்றெல்லாம் பொல்சனாரூ பேசிய பேச்சுகளை உலக சுகாதார அமைப்பு கண்டித்தது. பொறுமையை இழந்து போன பிரேசில் எதிர்க்கட்சி எம்.பி.க்கள் இப்போது பொல்சனாரூ மீது மக்களை இனப்படுகொலை செய்தது உள்ளிட்ட 13 குற்றச்சாட்டுகளை சுமத்தி உள்ளனர். மேலும் பொல்சனாரூ மீது வழக்குப் பதிவு செய்து நடவடிக்கை எடுக்கவும் வலியுறுத்தி உள்ளனர். இது தொடர்பான தீர்மானம் பிரேசில் நாடாளுமன்றத்திலேயே நிறைவேற்றப்பட்டும் உள்ளது.

தனிமைப்படுத்தப்பட்ட பொல்சனாரூ
இந்த சூழ்நிலையில்தான் இத்தாலியின் ரோம் நகரில் நடைபெற்ற ஜி20 உச்சி மாநாட்டில் பொல்சனாரூ பங்கேற்றார். ஆனால் இம்மாநாட்டில் சர்வதேச நாடுகளின் தலைவர் பொல்சனாரூவை கண்டுகொள்ளவே இல்லை. அந்த அளவுக்கு உலக நாடுகளின் வெறுப்பை சம்பாதித்திருக்கிறார் பொல்சனாரூ. ஜி20 நாடுகளின் தலைவர்கள் பலரும் ஒருவருக்கு ஒருவர் கலந்துரையாடிக் கொண்டிருக்கும் போது தனி மனிதராக பொல்சனாரூ மட்டும் நடமாடுவது; சாப்பிடுவது போன்ற வீடியோக்கள் சமூக வலைதளங்களில் வைரலாகவும் ஷேர் செய்யப்பட்டு வருகிறது. மேலும் ஜி20 மாநாட்டில் பங்கேற்ற தலைவர்கள் கூட்டாக போட்டோ எடுத்துக் கொண்ட போது கூட பொல்சனாரூ அதில் இடம்பெறவும் இல்லை.

பத்திரிகையாளர் மீது தாக்குதல்
இது தொடர்பாக TV Globo என்ற பத்திரிகையின் செய்தியாளர் Leonardo Monteiro கேள்வி எழுப்பிய போது அவரை பொல்சனாரூவின் பாதுகாவலர்கள் கடுமையாக தாக்கியதாகவும் கூறப்படுகிறது. இருப்பினும் அந்த பத்திரிகையாளரை தாக்கியது பிரேசில் அதிபரின் பாதுகாவலர்களா? இத்தாலிய பாதுகாப்பு படையினரா என்பது குறித்து உறுதியாக தெரியவில்லை எனவும் கூறப்படுகிறது.
-
டெல்லி தந்த கிரீன் சிக்னல்.. 4 வழியாக மாறும் தமிழ்நாட்டின் மூன்று முக்கிய சாலைகள்.. மெகா பிளான்! -
அதிமுக கூட்டணியில் பாமகவுக்கு 18, அமமுகவுக்கு 11 தொகுதிகள் ஒதுக்கீடு! -
PHH, AAY ரேஷன் கார்டுதாரர்களுக்கு முக்கிய அறிவிப்பு! கார்டு காலி ஆயிடும்..ரேகை வைக்கலைனா ப்ளாக் தான் -
நாகர்கோவில் எம்எல்ஏ காந்திக்கு கல்தா.. பாஜக தலைமை முடிவால் கலக்கம் -
பெட்ரோல் இல்லை.. ஆசிய நாடுகளுக்கு ‘நோ’ சொன்ன அராம்கோ? உலக அரசியலே தடம் புரள போகுது? -
பாரதத்தின் நிரந்தர பிரதமர்.. வட இந்தியாவில் திமுக சிலிண்டர் விளம்பரம் ஹிட்.. தர்ம சங்கடத்தில் பாஜக -
தங்கக் காசு மூலம் டிரம்ப் வேலையை காட்டிட்டாரு! அமெரிக்காவில் தங்க நாணயம் தந்த அதிர்ச்சி -
10 பைசா கூட வராது.. தங்கத்தை மொத்தமாக விற்கும் முதலீட்டாளர்கள்.. நெருங்கி வரும் பேரழிவு? -
தேமுதிகவுக்கு எத்தனை தொகுதிகள்? எங்கெங்கு போட்டியிடுகிறார்கள்? உத்தேச பட்டியல் இதுதானா? -
பாஜகவுக்கு 27 சீட்.. என்.டி.ஏ கூட்டணியில் தொகுதி பங்கீட்டை இறுதி செய்து அறிவித்தார் எடப்பாடி! -
பவரை காட்டுவோம்! மொத்த உலக நாடுகளையும் பீதியில் ஆழ்த்திய டிரம்ப் சொன்ன வார்த்தை! பெருசா நடக்க போகுது -
சர்ருன்னு ஏறிய பாஜக சீட் கணக்கு.. கடந்த தேர்தல்களில் பாஜக போட்டியிட்ட தொகுதிகள் எத்தனை?












Click it and Unblock the Notifications