"எத" வச்சு இந்தம்மா, அந்தம்மாவை அடிச்சிருக்கு பாருங்க...!
புளோரிடா: வீட்டைக் காலி செய்யும்போது இரு பெண்களுக்குள் ஏற்பட்ட மோதலில் செக்ஸ் பொம்மையை எடுத்து சரமாரியாக தாக்கி விட்டார் ஒரு பெண். அந்தப் பெண்ணை போலீஸார் கைது செய்துள்ளனர்.
டில்டோ எனப்படும் செயற்கை ஆணுறுப்பை வைத்து இந்தப் பெண் தாக்குதல் நடத்தியுள்ளார். அமெரிக்காவின் புளோரிடாவில் இந்த சம்பவம் நடந்துள்ளது.

தாக்குதல் நடத்திய பெண்ணின் பெயர் ஆன்னெட் கீல்ஹர்ன். இவருக்கு 57 வயதாகிறது. இவருடன் வசித்து வரும் பெண் பார்ட்னரின் பெயர் காம்ஸே காபனேர் ரிட்லி. கடந்த சனிக்கிழமை இரவு இருவருக்கும் இடையே திடீரென வாக்குவாதம் மூண்டது. காரசாரமாக பேசிக் கொண்டனர். வீட்டைக் காலி செய்து விடுவதாக காம்ஸே கூறினார். மேலும் ஆன்னெட் மீது போலீஸில் புகாரும் கூறினார். தான் வீட்டைக் காலி செய்யப் போவதாகவும், பாதுகாப்புக்கு வருமாறும் அவர் கோரினார்.
இதையடுத்து போலீஸார் பாதுகாப்புக்காக வந்திருந்தனர். அப்போது தனது சாமான்களை எல்லாம் பார்த்து எடுத்து பிரித்து வைத்தார் காம்ஸே. அதை வேடிக்கை பார்த்துக் கொண்டிருந்தார் ஆன்னெட். அப்போது காம்ஸே ஒரு செயற்கை ஆண் குறி செக்ஸ் பொம்மையை எடுத்து தனது பேக்கில் வைத்தார். அதைப் பார்த்த ஆன்னெட், அது எனக்குச் சொந்தமானது, அதை எடுக்காதே என்று கேட்டு சண்டை பிடித்தார். இரு பெண்களுக்கும் வாய்ச் சண்டை வலுத்தது.
அப்போது ஆன்னெட் அந்த செக்ஸ் பொம்மையைப் பிடுங்கி அதைக் கொண்டு காம்ஸே முகத்தில் சப்புச் சப்பென்று நாலு அடி அடித்தார். இதைப் பார்த்த போலீஸாருக்கு என்ன செய்வது என்று தெரியவில்லை. இரு பெண்களையும் விலக்கி விட்ட அவரகள் காம்ஸே கொடுத்த புகாரின் பேரில் ஆன்னெட்டைக் கைது செய்து அழைத்துச் சென்றனர்.
சண்டையின்போது பயன்படுத்தப்பட்ட ஆண்குறியை அவர்கள் பறிமுதல் செய்தனரா என்பது தெரியவில்லை.
சர்ச்சைக்குரிய இரு பெண்களும் சேர்ந்து வாழ்ந்து வந்தனர். ஆன்னெட் தனது மார்பில், காம்ஸேவின் பெயரைப் பச்சைக் குத்தி வைத்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.












Click it and Unblock the Notifications