மீண்டும் வேகமெடுத்த கொரோனா.. அச்சத்தில் ஐரோப்பிய நாடுகள்.. ஷாக் நிலவரம்
ஜெனிவா: மீண்டும் கொரோனா மின்னல் வேகத்தில் பரவி வருவதால் ஐரோப்பிய ஒன்றியத்தில் உள்ள நாடுகள் அச்சம் அடைந்துள்ளன. கொரோனா உச்சம் பெற்று பின்னர் படிப்படியாக குறைந்த நிலையில் மீண்டும் ஒவ்வொரு நாடாக தொற்று அதிகரிக்க தொடங்கியிருப்பது அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
உலகில் கொரோனா தொற்றால் 3,87,29,168 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். இதில் இதுவரை 10,96,320 பேர் மரணம் அடைந்துள்ளனர். அதேநேரம் உலகில் கொரோனா தொற்றில் இருந்து மீண்டவர்களின் எண்ணிக்கை 2,91,11,241 ஆக உயர்ந்துள்ளது. தற்போது உலகில் கொரோனா பாதிப்புடன் 85,21,607 பேர் சிகிச்சை பெற்று வருகிறார்கள்.

உலகிலேயே அமெரிக்காவில் கொரோனா தொற்றால் 81,48,926 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். அதற்கு அடுத்தபடியாக இந்தியாவில் கொரோனா தொற்றால் 73,05,070 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். பிரேசிலில் கொரோனா தொற்றால் 5,141,498 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். ரஷ்யாவில் கொரோனா தொற்றால் 1,340,409 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர்.
கடந்த 24 மணி நேரத்தில் அதிகபட்சமாக இந்தியாவில் 67,988 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். அமெரிக்காவில் கடந்த 24 மணி நேரத்தில் 58,576 பேருக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டுள்ளது. பிரேசிலில் கடந்த 24 மணி நேரத்தில் 26675 பேருக்கு கொரோனா உறுதியாகி உள்ளது. பிரான்ஸில் நேற்று ஒரே நாளில் 22,591 பேருக்கு கொரோனா இருப்பது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. இங்கிலாந்திலும் ஒரே நாளில் கொரோனா தொற்றால் 19724 பேர் பாதிக்கப்பட்டிருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. ஸ்பெயின், பெல்ஜியம், போலந்து, நெதர்லாந்து, இத்தாலி, ஜெர்மனி உள்பட பல்வேறு ஐரோப்பிய நாடுகளிலும் தினசரி தொற்று பாதிப்பு 7 ஆயிரத்திற்கு அதிகமாக உள்ளது. இதனால் அந்த நாடுகள் அச்சம் அடைந்துள்ளன.
உயிரிழப்பை பொறுத்தவரை அமெரிக்காவில் கடந்த 24 மணி நேரத்தில் 967 பேர் கொரோனாவால் மரணம் அடைந்துள்ளனர். பிரேசிலில் கொரோனா தொற்றால் 716 பேர் ஒரே நாளில் மரணம் அடைந்துள்ளனர், இந்தியாவில் ஒரே நாளில் கொரோனா தொற்றால் 694 பேர் பலியாகி உள்ளனர். மெக்ஸிகோவில் கடந்த 24 மணி நேரத்தில் 475 பேர் மரணம் அடைந்துள்ளனர்.
உலகிலேயே அதிகபட்சமாக அமெரிக்காவில் இதுவரை 221,840 பேர் மரணம் அடைந்துள்ளனர். பிரேசிலில் கொரோனா தொற்றால் இதுவரை 151,779 பேர் பலியாகி உள்ளனர்.
இந்தியாவில் கொரோனா தொற்றால் இதுவரை 111,311 பேர் உயிரிழந்துள்ளனர். மெக்ஸிகோவில் 84420 பேர் பலியாகி உள்ளனர்.
-
ஒரு வழியாக மாற்றப்பட்ட CBSE தலைவர், செயலாளர்! OSM குளறுபடி குறித்து விசாரிக்க தனியாக ஆணையம் அமைப்பு -
ஏர்போர்ட்டில் வைத்தே கரப்பான் பூச்சி ஜனதா கட்சி தலைவர் கைது? டெல்லியில் அலறும் பாஜக அரசு -
இந்தியாவில் விருப்பப்பட்டு ஒருவர் பாலியல் தொழில் செய்வது குற்றமல்ல! உச்ச நீதிமன்றம் முக்கிய தீர்ப்பு -
பாஜகவுக்கு தலைவலியாக மாறும் கரப்பான்பூச்சி கட்சி! ஜூன் 6ம் தேதி டெல்லியை ஸ்தம்பிக்க வைக்க திட்டம் -
கதறும் கராச்சி.. குடிநீர், மின்சாரம், கேஸ் எதுவும் இல்லை.. சிந்து நதியை நிறுத்தியதால் நிலைமை மோசம் -
கனவுகள் தகர்ந்தன! மாணவர்களால் மறக்க முடியாத மே மாதம்! 24 லட்சம் மாணவர்களை பாதித்த தேர்வு குளறுபடிகள் -
இர்ஃபானின் ரூ. 3650 பிரியாணியை வறுத்தெடுத்த யூடியூப்பர்.. ப்ளூ சட்டை மாறனுடன் ஒப்பிட்டு கலாய் -
கங்கணம் கட்டி சதி பண்ணிருக்கீங்க.. சேகர் பாபுவை போனில் வறுத்து எடுத்த ஸ்டாலின்.. ஷாக் தகவல்! -
4 தொகுதி இடைத்தேர்தலை புறக்கணிக்க திமுக முடிவு? ஸ்டாலினின் ராஜதந்திரம்! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக!












Click it and Unblock the Notifications