மாஸ்க் இல்லை.. உணவு இல்லை.. சீனாவில் இருந்து வெளியேற முடியாமல் தவிக்கும் தமிழக மாணவர்கள்
பெய்ஜிங்: சீனாவில் கரோனா வைரஸ் பாதிப்பு ஏற்பட்டதை தொடர்ந்து மாஸ்க்குகளும் உணவு பொருட்களும் தீர்ந்துவிட்டதால் அதை வாங்குவதற்கு கூட வெளியேற முடியாமல் தமிழக மாணவர்கள் தவித்து வருவதாக தெரிவித்துள்ளனர்.
சீனாவில் கரோனா வைரஸ் நோயால் 800-க்கும் மேற்பட்டோர் பாதிக்கப்பட்டுள்ளனர். இவர்களில் 25-க்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளனர்.
சர்வதேச அளவில் பல்வேறு நாடுகளுக்கு பரவி வரும் இந்த வைரஸ் தொற்றால் பாதிக்கப்பட்டோருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. சீனாவில் வூஹான் நகர்ப்பகுதி மீன் சந்தையிலிருந்து கரோனா வைரஸ் பரவியிருக்கலாம் என தெரிகிறது.

கரோனா வைரஸ்
இதனால் அந்த நாட்டில் உள்ள முக்கிய நகரங்கள் ஸ்தம்பித்துள்ளது. மேலும் 10 நகரங்களுக்கான போக்குவரத்து முற்றிலும் தடை செய்யப்பட்டது. காற்றில் பரவும் கரோனா வைரஸ் பாதிப்பிலிருந்து தப்பிக்க பல்வேறு மருத்துவமனைகளுக்கு செல்கின்றனர்.

சீனா
வெளியே செல்லும் போது முகமூடி அணிந்து செல்கின்றனர். கூடுதலாக உணவு பொருட்களை வாங்கி வைத்துக் கொள்கின்றனர். இதனால் சீனாவில் உணவு தட்டுப்பாடு ஏற்படும் அபாயம் உள்ளது. தமிழகம், கேரளம், கர்நாடகா உள்ளிட்ட மாநிலங்களிலிருந்து மாணவர்கள் சீனாவில் உள்ள கல்வி நிறுவனங்களில் பயின்று வருகின்றனர்.

சீனா
இவர்கள் எவ்வாறு இருக்கிறார்கள் என்பது குறித்து பெய்ஜிங்கில் உள்ள இந்திய தூதரக அதிகாரிகள் விசாரித்து வருகின்றனர். சீனாவில் தற்போது பல்கலைக்கழகங்கள் மூடப்பட்டுள்ளன. சீனாவில் பயின்று வரும் தமிழக மாணவர்கள் வெளியில் செல்ல முடியாத நிலையில் அவதிப்பட்டு வருகின்றனர்.

தமிழக மாணவர்கள்
அடுத்த 2 நாட்களுக்கு மட்டுமே உணவு தயார் செய்வதற்கு தேவையான பொருட்கள் இருப்பதாக அவர்கள் வேதனை தெரிவித்தனர். கரோனா வைரஸ் காற்றில் பரவுவதால் நோய் தொற்று ஏற்படுவதை தவிர்க்க முகமூடி அணிவது அவசியமாகிறது. ஆனால் அதை வாங்குவதற்கு கூட இந்த மாணவர்களால் வெளியே செல்ல முடியவில்லை.

உதவி
இந்திய தூதரக அதிகாரிகள் தமிழக மாணவர்களை தொடர்பு கொண்டு நோய் தொற்று குறித்து கேட்டறிந்தனர். அவர்களது தொடர்பு எண்களையும் மாணவர்களிடம் கொடுத்து உதவி தேவைப்படுமாயின் அழைக்குமாறு அறிவுறுத்தினர். உணவு, முகமூடி இல்லாததால் இ்ந்திய தூதரகத்தின் உதவியை மாணவர்கள் நாடியுள்ளனர்.
-
மேகதாது அணை: முதல்வரானதும் டி.கே.சிவகுமார் அதிரடி! முடிவெடுக்க வேண்டியது தமிழ்நாடு இல்லை! -
தவெக தலைமையில் தமிழ்நாடு சமூக நீதி முற்போக்கு கூட்டணி.. திமுகவுக்கு பிரவீன் சக்ரவர்த்தி செக்மேட் -
அறிவிப்பு பலகையில் கல்விக் கட்டண விவரங்களை வெளியிட உத்தரவு.. எதிர்த்து தனியார் பள்ளிகள் வழக்கு -
ஸ்டாலின் மீதிருந்த கோபம்.. தவெகவிற்கு தாவுகிறார் திமுகவின் இளம் நம்பிக்கை? பெரிய டீமும் போகுது -
கூட்டுறவு வங்கி நகைக்கடன் வாங்கியோருக்கு குட் நியூஸ்! பணம் கட்டலயா? ஏலத்திலிருந்து நகை மீட்க ஈஸி வழி -
மாமூல் தொல்லையில் இருந்து முதல்வர் விஜய் எங்களை காப்பாற்றிவிட்டார்.. டாஸ்மாக் பணியாளர் சங்கம் -
ரூட்டை மாற்றிய இந்திய ஐடி நிறுவனங்கள்.. இனியும் சும்மா இருந்தா வேலைக்கு ஆகாது! -
"முதலமைச்சருக்கு நன்றி.. ஆனால்! எதிரியின் எதிரி நண்பனா? விஜய் ரசிகர்கள் குறித்து பேசிய அஜித் சகோதரர் -
வீரமணி ஒரே போடு.. திருச்சியில் முதலமைச்சர் விஜய் பேசிய அந்த பேச்சால் மொத்த பேருக்கும் முகச்சுளிப்பு? -
இன்பதுரை வெற்றி செல்லாது என்ற தீர்ப்பால் அடுத்து என்ன நடக்கும்? முன்னாள் சபாநாயகர் அப்பாவு விளக்கம் -
விஜய்யின் ஆலோசகர் + 2 அமைச்சர்களால் நேர்ந்த அவமானம்.. சட்டசபை செயலாளர் சீனிவாசன் பதவி விலகியது ஏன்? -
கோவையில் அருவியாக மாறிய மேம்பாலம் .. மேட்டுப்பாளையம் ஊட்டி செல்லும் வழியில் மாறிய காட்சி












Click it and Unblock the Notifications