செத்து மடியும் மக்கள்.. உலக சுகாதார அவசர நிலை அறிவிப்பு.. மிரட்டும் கொரோனா
Recommended Video
ஜெனிவா: சீனாவில் நாள்தோறும் 100க்கணக்கான மக்கள் கொரோனா வைரஸ் தாக்கத்தால் உயிரிழந்து வருவதால் உலக சுகாதார அமைப்பு, உலக சுகாதார அவசர நிலையை பிறப்பித்துள்ளது.
சீனாவின் வுஹானில் 10 ஆயிரத்துக்கும் மேற்பட்ட மக்களுக்கு கொரோனா வைரஸ் தாக்கம் ஏற்பட்டுள்ளது. மக்கள் அடர்த்தி மிகுந்த நகரமே மரண ஓலத்துடன் உள்ளது. அங்கு உயிரிழந்தோரின் எண்ணிக்கை 213 ஆக உயர்ந்துள்ளது.
சீனாவை தாண்டி தைபே, ஜப்பான், அமெரிக்கா, இந்தியா, ஆஸ்திரேலியா உள்பட 15க்கும் மேற்பட்ட நாடுகளுக்கு கொரோனா வைரஸ் பாதிப்பு பரவி உள்ளது. சீனாவில் இருந்து வந்தவர்களுக்குத்தான் கொரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ளது. ஆனால் சீனாவை தாண்டி உலகில் வேறு எங்கும் உயிரிழப்புகள் இதுவரை ஏற்படவில்லை.

உலக சுகாதார அமைப்பு
எனினும் உலகம் முழுவதும் வேகமாக கொரோனா பரவி வருவதன் காரணமாக உலக சுகாதார அமைப்பு, கொரோனா வைரஸ் பாதிப்பை, உலக சுகாதார அவசர நிலை என அறிவித்துள்ளது. ஜெனீவாவை தளமாகக் கொண்டு இயங்கும் உலக சுகாதார அமைப்பு (ஐ.நா. சுகாதார நிறுவனம்) ஆரம்பத்தில் இந்த நோயால் ஏற்படும் அச்சுறுத்தலைக் குறைத்து மதிப்பிட்டது, ஆனால் நெருக்கடி பேச்சுவார்த்தைகளுக்குப் பிறகு அதன் இடர் மதிப்பீட்டைத் திருத்தி உள்ளது.

பரவும் அபாயம்
உலக சுகாதார அமைப்பின் தலைவர் டெட்ரோஸ் அதானோம் கெப்ரேயஸ் வியாழக்கிழமை ஜெனீவாவில் பேசுகையில், "பலவீனமான சுகாதார அமைப்புகளைக் கொண்ட நாடுகளுக்கு வைரஸ் பரவுவதற்கான சாத்தியக்கூறுதான் எங்கள் மிகப்பெரிய கவலை. மேலும் கொரோனா பரவுவதைக் கட்டுப்படுத்த நாம் அனைவரும் இப்போது ஒன்றாகச் செயல்பட வேண்டும். அப்போதுதான் அதை நாம் ஒன்றாக தடுத்து நிறுத்த முடியும். சீனாவுக்கு பயணம் செய்வதை தடுப்பது வர்த்தகத்துக்கு கட்டுப்பாடுகள் விடுப்பது செயல்கள் வைரஸ் பரவுவதைத் தடுக்க தேவையற்றது, இது 15 க்கும் மேற்பட்ட நாடுகளுக்கு பரவி உள்ளது" என்றார்.

பல நாடுகள் தடை
இதனிடையே பல நாடுகள் ஏற்கனவே தங்கள் குடிமக்களை சீனாவுக்குச் செல்ல வேண்டாம் என்று வலியுறுத்தியுள்ளன, சிலர் மத்திய சீன நகரமான வுஹானில் இருந்து பயணிகளுக்கு நுழைவதற்கு தடை விதித்துள்ளனர், அங்கு முதலில் வைரஸ் தோன்றியது.

முதல் தாக்குதல்
அமெரிக்க மண்ணில் முதல்முறையாக கொரோனா தாக்கம் ஏற்பட்டுள்ளது. வேறொரு நபரிடமிருந்து ஒருவர் வைரஸைப் பிடித்ததாக அமெரிக்கா தனது முதல் வழக்கு வந்துள்ளது. வுஹானுக்குப் பயணம் செய்த அவரது மனைவியிடமிருந்து சிகாகோவில் உள்ளவருக்கு வைரஸ் பரவி உள்ளதாக தெரியவந்துள்ளது. இதனிடையே அமெரிக்காவில் இருந்து சீனாவுக்கு விமானங்கள் இயங்குவதும் ரத்து செய்யப்பட்டு வருகிறது.
-
திருப்பரங்குன்றத்தில் தீபம்.. முதல்வர் விஜய் ஒப்புதல் கொடுப்பார்னு நம்புறோம்.. இந்து முன்னணி! -
மம்தாவிற்காக எம்பி பதவியை ராஜினாமா செய்யும் யூசுப் பதான்? பேச்சுவார்த்தையில் சவுரவ் கங்குலி? பின்னணி -
எல்லாமே முக்கிய தலைகள் ஆச்சே.. விஜய் முன்னிலையில்.. மொத்தமாக தவெகவில் இணையும் அதிமுக தலைவர்கள்! -
திருவண்ணாமலை செய்யாறு வீடுகளில் மின்சார மீட்டர்கள் பழுதுக்கு அணில் காரணம்.. மின்சார வாரியம் பதில் -
கேட்கும்போதே நெஞ்சம் உறைகிறது.. சஹாரா பாலைவன மணலில் பழுதான லாரி. தாகத்துடன் அநியாயமாய் மாண்ட 49 பேர் -
விழுப்புரத்தில் திருமாவளவன் திறக்க இருந்த அம்பேத்கர் சிலை.. இரவோடு இரவாக அகற்றப்பட்டது ஏன்? -
சென்னை ரோட்டை கண்ணில் ஒத்திக்கலாம்.. பெங்களூர் நிலைமை படுமோசம்.. டிகே சிவகுமார் என்ன செய்வார்? -
"திமுக இல்லாதது கவலையளிக்கிறது.." ரொம்பவே வருத்தப்பட்டு பேசிய திருமாவளவன்.. என்ன மேட்டர்? -
வாண்டடா வண்டில ஏறிய செ.பா! ஹார்ட் டிஸ்க் திருட்டு என்றதும் பதற்றம் ஏன்? சிடிஆர் நிர்மல்குமார் கேள்வி -
விலகிய 113 ஒன்றிய செயலாளர்கள்.. தவெகவின் ஆபரேஷனால் மிரண்ட அறிவாலயம்! ஸ்டாலின் எடுத்த முக்கிய முடிவு -
"16 ஆண்டுகளுக்கு பின் தாய் வீட்டிற்கு.." வேல்முருகன் எமோஷ்னலாக சொல்ல.. சட்டென குறுக்கிட்ட அன்புமணி -
அதிமுக + திமுகவிற்கு ஷாக்.. 4 மாஜி அமைச்சர்கள் - 8 எம்எல்ஏக்கள் உள்பட 60 பேர் தவெகவில் ஐக்கியம்












Click it and Unblock the Notifications