மனைவி கண் முன்பாக கணவரை கடித்துத் தின்ற "மைக்கேல் ஜாக்சன்" சுட்டுக் கொலை!
சிட்னி: ஆஸ்திரேலியாவில் மனைவி கண் எதிரேயே கணவரைக் கடித்துத் தின்ற ‘மைக்கேல் ஜாக்சன்' என்ற முதலையை வனத்துறையினர் சுட்டுக் கொன்றனர்.
ஆஸ்திரேலியாவிலுள்ள டார்வின் நகரிலிருந்து 60 கிமீ தொலைவில் உள்ளது அடிலேட் ஆறு. சம்பவத்தன்று இந்த ஆற்றின் கரையோரம் வயதான தம்பதி ஒன்று மீன் பிடித்துக் கொண்டிருந்துள்ளனர்.
கணவர் தூண்டிலை வீசிக் கொண்டிருந்த போது எதிர்பாராமல் முதலை ஒன்றிடம் அகப்பட்டுக் கொண்டார்.

முதியவர் பலி...
கணவரை முதலைத் தாக்குவதைக் கண்டு பதறிய மனைவி உதவி கேட்டு கத்தியுள்ளார். ஆனால், வனத்துறையினர் மற்றும் போலீசார் வருவதற்கு முன்னதாக அந்த முதலை முதியவரை கொன்று இழுத்துச் சென்று விட்டது.

சுட்டுக் கொலை...
பின்னர், நீண்ட தேடுதலுக்குப் பின்னர் வனத்துறையினர் அந்த முதலையை துப்பாக்கியால் சுட்டுக் கொன்றனர்.

மைக்கேல் ஜாக்சன்...
அதனைத் தொடர்ந்து போலீசார் நடத்திய விசாரணையில், அம்முதலையின் பெயர் மைக்கேல் ஜாக்சன் என தெரிய வந்தது. இப்படி பெயர் வந்ததற்குக் காரணம் அது அரைகுறை அல்பினோ ரக முதலையாகும். ஜாக்சனும் கூட தனது கருப்பு நிறத்தை மாற்ற ஊசி போட்டு பல சிகிச்சைகளை எடுத்துக் கொண்டதால் பாதி வெள்ளையாகவும், பாதி கருப்பாகவும் மாறிப் போனதால் இப்படிப் பெயர் வைத்துள்ளனர்.

கோழிக்கு ஆசைப்பட்டு...
மேலும், ஆற்றில் படகில் செல்வோர் வீசும் கோழித் துண்டுகளுக்கு ஆசைப்பட்டு அவ்வப்போது இவ்வாறு முதலைகள் கரையருகே வருவதுண்டு எனக் கூறப்படுகிறது.












Click it and Unblock the Notifications