துபாயில் நடந்த கண்கவர் நாட்டிய நாடக நிகழ்ச்சி
துபாய்: துபாயில் "BHAWA" வின் மூன்றாம் ஆண்டு கம்போசெர்ஸ் டே நேற்று முன்தினம் சிறப்பாக நடைபெற்றது. விழாவில் திருமதி சந்திரா சுப்பிரமணியம் அவர்கள் துவக்க உரை ஆற்றினார். இதில் முக்கிய விருந்தினராக இந்திய தூதரகத்தின் திரு.பாலகிருஷ்ணன் அவர்களும் மற்றும் திருமதி ஷாலினி பாலகிருஷ்ணன் அவர்களும் பங்கேற்றனர். நாட்டிய நாடகம் துபாய் "இந்தியன் கான்சுலேட் ஆடிட்டோரியத்தில்" இனிதே நடைபெற்றது.

இந்த வருடம் திரு .கோபாலகிருஷ்ண பாரதியின் "நந்தனார் சரித்திரத்தை" மையமாக வைத்து நாட்டிய நாடகம் நடைபெற்றது. இதில் கோபாலகிருஷ்ண பாரதியைப் பற்றி திருமதி அபர்ணா அஸ்வத் விரிவுரை ஆற்றினார்.

இந்த நடனத்தில் திருமதி சந்திரா சுப்பிரமணியம், திரு சசி கோட்டக்கல், திருமதி புவனேஸ்வரி ரத்தினம், திருமதி பத்ம பிரியா பிரகாஷ், திருமதி அனுபமா பிரவீன், திரு ஜதின் சுப்ரமணியன், திருமதி வைஷ்ணவி ஸ்ரீகுமார் ஆகியோரின் மாணவர்கள் பங்கேற்றனர். நந்தனாராக திரு சசி கோட்டக்கல், வேதியராக திருமதி புவனேஸ்வரி ரத்தினம் அவர்களும், சிவனாக திரு ஜதின் சுப்ரமணியமும் முக்கிய பங்கு வகித்தனர். இதில் மொத்தம் 54 மாணவர்களும், 3 ஆசிரியர்களும் பங்கேற்று மிக அருமையாக நந்தனார் சரித்திரத்தை தத்ரூபமாக வழங்கியது காண்போர் கண்ணுக்கு விருந்தாக அமைந்தது.

இந்த விழாவை திருமதி சித்ரா ரவி மிக சிறப்பாக தொகுத்து வழங்கினார். இதனை திருமதி ராஜி முரளி அவர்கள் ஒருங்கிணைத்து நடத்தி வைத்தார். விழாவின் முடிவில் திருமதி சுமிதா ரவிச்சந்திரன் அவர்கள் நன்றியுரை ஆற்றினார்.













Click it and Unblock the Notifications