பாரீஸ் தாக்குதல் எதிரொலி: பாதுகாப்பை பலப்படுத்திய 'அந்த' டென்மார்க் நாளிதழ்
கோபன்ஹேகன்: சார்லி ஹெப்டோ பத்திரிக்கை அலுவலக தாக்குதலை அடுத்து நபிகள் நாயகத்தை கிண்டல் செய்து கார்டூன் வெளியிட்ட டென்மார்க் நாளிதழ் பாதுகாப்பை பலப்படுத்தியுள்ளது.
பிரான்ஸ் தலைநகர் பாரீஸில் உள்ள சார்லி ஹெப்டோ வாரப் பத்திரிக்கை அலுவலகத்திற்குள் புதன்கிழமை புகுந்த 2 முகமூடி அணிந்த நபர்கள் கண்மூடித்தனமாக துப்பாக்கிச்சூடு நடத்தினர். இதில் பத்திரிக்கை ஆசிரியர் ஸ்டெபனீ சார்போனியர் உள்பட 12 பேர் பலியாகினர். இந்த தாக்குதலை அடுத்து டென்மார்க்கில் உள்ள ஜில்லேணட்ஸ்-போஸ்டன் நாளிதழ் அலுவலகத்தில் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது.

போஸ்டன் நாளிதழ் கடந்த 2005ம் ஆண்டு செப்டம்பர் மாதம் 30ம் தேதி நபிகள் நாயகத்தை கிண்டல் செய்து கார்டூன் வெளியிட்டது. அந்த கார்டூனை தான் சார்லி ஹெப்டோ 2006ம் ஆண்டு தங்கள் பத்திரிக்கையில் வெளியிட்டு சர்ச்சையில் சிக்கியது.
ஸ்பெயின்:
ஸ்பெயின் நாட்டில் அதிகம் விற்பனையாகும் எல் பைஸ் நாளிதழை வெளியிடும் ஊடக குழுமமான ப்ரிஸாவின் தலைமை அலுவலகம் மாட்ரிட்டில் உள்ளது. சார்லி ஹெப்டோ தாக்கப்பட்ட 2 மணிநேரம் கழித்து பிரிஸா அலுவலகத்திற்கு சந்தேகத்திற்கு இடமான பார்சல் ஒன்று வந்தது. கேபிள் வயர்கள் இருந்த பார்சலால் பதட்டம் ஏற்பட்டது. இதையடுத்து பிரிஸா அலுவலகத்தில் இருந்த அனைவரும் உடனே வெளியேற்றப்பட்டனர்.












Click it and Unblock the Notifications