தாவூத் இப்ராஹிம் மகன் பாகிஸ்தானில் என்ன செய்கிறார் தெரியுமா?
Recommended Video

கராச்சி: நிழலுக தாதா தாவூத் இப்ராஹிமின் மகன் மொயின், கராச்சி நகரிலுள்ள மசூதியில் மவுலானாவாக செயல்பட்டுவருகிறார்.
மும்பை குண்டு வெடிப்பு வழக்கு தொடர்பாக, இந்தியாவால் நிழலுலக தாதா தாவூத் இப்ராஹிம் தற்போது பாகிஸ்தானில் பதுங்கியுள்ளதாக கூறப்படுகிறது. இந்த நிலையில் அவரது மகன் மொயின், கராச்சியிலுள்ள மசூதியொன்றில் மவுலானாவாக பணியாற்றுகிறார்.
தாவூத்தின் சகோதரர் இக்பால் கஸ்கர் இத் தகவலை தெரிவித்துள்ளார்.

புதிய தகவல்கள்
மிரட்டல் வழக்கில் பிடிபட்ட இக்பால் விசாரணையின்போது காவல்துறையினரிடம் இந்த புதிய தகவல்களை தெரிவித்துள்ளார். தாவூத் இப்ராஹிம் போல அவரது மகன் இல்லை என அவர் கூறியுள்ளார்.

ஆன்மீகவாதி
தனது தந்தையை போல நிழலுலக தொழில்களில் ஈடுபடாமல், மொயின் ஆன்மீகத்தில் நம்பிக்கை கொண்டு, மவுலாவாக பணியாற்றுவதாகவும், குர்ஆனை முழுமையாக மனப்பாடம் போல ஓதியுள்ளதாகவும், இக்பால் தெரிவித்துள்ளார்.

தாவூத் இப்ராஹிம் குடும்பம்
தாவூத் இப்ராஹிமுக்கு மெஜாபீன் என்ற மனைவியும், 2 மகள்கள் மற்றும் ஒரு மகன் உள்ளனர். 7 வருடங்கள் முன்பு தாவூத்தின் 3வது மகள் மரியா பாகிஸ்தானில் மலேரியா தாக்கி இறந்தார்.

மகள்கள், மகன்
பாகிஸ்தானின் முன்னாள் கிரிக்கெட் வீரர் ஜாவித் மியாண்டட் மகன் ஜுனைட், தாவூத்தின் முதல் மகள் மெஹ்ருக்கை மணம் செய்துள்ளார். 2வது மகள் மெஹ்ரீன் அமெரிக்காவில் வசிக்கும் பாகிஸ்தானியரான ஆயுப்பை மணம் முடித்துள்ளார்.












Click it and Unblock the Notifications