இங்கிலாந்தில் தாவூத் இப்ராஹிக்கு சொந்தமான ரூ.1,000 கோடி சொத்துக்களை முடக்கும் இந்தியா
துபாய்: நிழல் உலக தாதா தாவூத் இப்ராஹிமுக்கு இங்கிலாந்தில் உள்ள ரூ.1,000 கோடி மதிப்புள்ள சொத்துக்களை முடக்க உள்ளது இந்தியா.
நிழல் உலக தாதா தாவூத் இப்ராஹிமுக்கு அமீரகத்தில் உள்ள சொத்துக்களை அங்குள்ள அதிகாரிகளின் உதவியோடு இந்திய அதிகாரிகள் கண்டுபிடித்துள்ளனர். இந்நிலையில் இங்கிலாந்தில் தாவூதுக்கு சொந்தமான ரூ.1,000 கோடி மதிப்புள்ள சொத்துக்களின் பட்டியலை இந்திய அதிகாரிகள் பெற்றுள்ளனர். தாவூதின் சொத்துக்கள் குறித்து இந்திய அதிகாரிகள் இங்கிலாந்து அதிகாரிகளுடன் தொடர்ந்து பேச்சுவார்த்தை நடத்தி வருகிறார்கள்.

தாவூதுக்கு மிகவும் நெருக்கமான உதவியாளர் இக்பால் மிர்ச்சி மூலம் தான் அவர் இங்கிலாந்தில் சொத்துக்களை வாங்கிக் குவித்தார். உலகின் பல்வேறு நாடுகளில் தாவூதுக்கு சொந்தமான 50 சொத்துக்களை அமலாக்கத்துறை அதிகாரிகள் கண்டுபிடித்துள்ளனர். அதில் இங்கிலாந்தில் உள்ள ரூ.1,000 கோடி மதிப்புள்ள 10 சொத்துக்களும் அடக்கம்.
இங்கிலாந்தில் தாவூத் கும்பலின் பெயரில் உள்ள சொத்துக்கள் அனைத்தையும் முடக்க திட்டமிட்டுள்ளது அமலாக்கத்துறை. பிரதமர் நரேந்திர மோடி இங்கிலாந்து செல்லும்போது இது குறித்து அந்நாட்டு அதிகாரிகளுடன் பேச உள்ளார். அவர் வரும் நவம்பர் மாதம் இங்கிலாந்தில் சுற்றுப்பயணம் மேற்கொள்கிறார்.
தாவூதுக்கு மொராக்கோ, ஸ்பெயின், அமீரகம், சிங்கப்பூர், தாய்லாந்து, சைப்ரஸ், துருக்கி, இந்தியா, பாகிஸ்தான் மற்றும் இங்கிலாந்தில் ரூ.3 ஆயிரம் கோடி மதிப்புள்ள சொத்துக்கள் உள்ளது. அனைத்து சொத்துகளும் பினாமிகளின் பெயர்களில் உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
-
நள்ளிரவில் அமெரிக்கா எடுத்த முக்கியமான முடிவு.. மொத்தமாக சரிந்த தங்கம்.. இனிமேல் இப்படி தான்? -
சிலிண்டர் முன்பதிவு செய்பவர்களுக்கு ஷாக் நியூஸ்! இனி இது இல்லைனா கேஸ் வராது.. மத்திய அரசின் தடை? -
பாகிஸ்தானை விட மோசமான நிலையில் இந்தியா.. உலகின் மகிழ்ச்சியான நாடுகள் ரிப்போர்ட்டில் செம பெரிய ஷாக்! -
170ல் அதிமுக.. பாஜக, பாமக, அமமுக உட்பட கூட்டணி கட்சிக்கு 64 தொகுதிகள்.. எடப்பாடி போட்டுள்ள கணக்கு! -
ஒரு தொகுதிக்குள் சுருங்கிய ஓட்டக்கார தேவர் மகன்.. தனி மரமான ஓ.பன்னீர்செல்வம்! டெபாசிட்டாவது தேறுமா? -
இரட்டை இலைக்கு ‘குட்பை’.. அதிமுகவை அடக்கிய பாஜக? திமுக கூட்டணிக்கு அடிக்கப்போகும் அதிர்ஷ்டம் -
ப்ளீஸ் சார்.. என் ஹனிமூனை விட்ருவீங்களா? கலெக்டருக்கு வித்தியாசமான மனு தந்த கேரளா அரசு பள்ளி ஆசிரியை -
சிறகடிக்க ஆசை: விஜயாவை அசிங்கப்படுத்திய வக்கீல்.. மீனா அருமை இப்போதாவது புரிந்ததே..! முத்து போட்ட அடி -
மத்திய அரசு ஊழியர்களுக்கு அகவிலைப்படி 50% தாண்டினால் என்ன நடக்கும்? வீட்டு வாடகைப்படியிலும் மாற்றம்? -
திமுக சொன்ன அந்த வார்த்தை.. தொகுதி பங்கீட்டில் அதிருப்தியான மநீம.. நாளை கமல்ஹாசன் ஆலோசனை -
குடிப்பழக்கத்தை நிறுத்திவிட்டேன்.. பாட்டிலை தொட்டு 6 மாதமாகிவிட்டது.. ஜாலியாக சொன்ன சாஹல்! -
அதிமுக முன்னாள் அமைச்சர்களின் உருவபொம்மைகளுக்கு செருப்பு மாலை! பொள்ளாச்சியில் பரபரப்பு












Click it and Unblock the Notifications