இங்கிலாந்தில் தாவூத் இப்ராஹிக்கு சொந்தமான ரூ.1,000 கோடி சொத்துக்களை முடக்கும் இந்தியா

Subscribe to Oneindia Tamil

துபாய்: நிழல் உலக தாதா தாவூத் இப்ராஹிமுக்கு இங்கிலாந்தில் உள்ள ரூ.1,000 கோடி மதிப்புள்ள சொத்துக்களை முடக்க உள்ளது இந்தியா.

நிழல் உலக தாதா தாவூத் இப்ராஹிமுக்கு அமீரகத்தில் உள்ள சொத்துக்களை அங்குள்ள அதிகாரிகளின் உதவியோடு இந்திய அதிகாரிகள் கண்டுபிடித்துள்ளனர். இந்நிலையில் இங்கிலாந்தில் தாவூதுக்கு சொந்தமான ரூ.1,000 கோடி மதிப்புள்ள சொத்துக்களின் பட்டியலை இந்திய அதிகாரிகள் பெற்றுள்ளனர். தாவூதின் சொத்துக்கள் குறித்து இந்திய அதிகாரிகள் இங்கிலாந்து அதிகாரிகளுடன் தொடர்ந்து பேச்சுவார்த்தை நடத்தி வருகிறார்கள்.

Dawood Ibrahim's UK assets worth Rs 1000 cr to be seized

தாவூதுக்கு மிகவும் நெருக்கமான உதவியாளர் இக்பால் மிர்ச்சி மூலம் தான் அவர் இங்கிலாந்தில் சொத்துக்களை வாங்கிக் குவித்தார். உலகின் பல்வேறு நாடுகளில் தாவூதுக்கு சொந்தமான 50 சொத்துக்களை அமலாக்கத்துறை அதிகாரிகள் கண்டுபிடித்துள்ளனர். அதில் இங்கிலாந்தில் உள்ள ரூ.1,000 கோடி மதிப்புள்ள 10 சொத்துக்களும் அடக்கம்.

இங்கிலாந்தில் தாவூத் கும்பலின் பெயரில் உள்ள சொத்துக்கள் அனைத்தையும் முடக்க திட்டமிட்டுள்ளது அமலாக்கத்துறை. பிரதமர் நரேந்திர மோடி இங்கிலாந்து செல்லும்போது இது குறித்து அந்நாட்டு அதிகாரிகளுடன் பேச உள்ளார். அவர் வரும் நவம்பர் மாதம் இங்கிலாந்தில் சுற்றுப்பயணம் மேற்கொள்கிறார்.

தாவூதுக்கு மொராக்கோ, ஸ்பெயின், அமீரகம், சிங்கப்பூர், தாய்லாந்து, சைப்ரஸ், துருக்கி, இந்தியா, பாகிஸ்தான் மற்றும் இங்கிலாந்தில் ரூ.3 ஆயிரம் கோடி மதிப்புள்ள சொத்துக்கள் உள்ளது. அனைத்து சொத்துகளும் பினாமிகளின் பெயர்களில் உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+