அமெரிக்காவின் மத்தியமேற்கு பகுதியை புரட்டி எடுத்த சூறாவளிகள்: 5 பேர் பலி
சிகாகோ: அமெரிக்காவின் மத்தியமேற்கு பகுதியை சக்திவாய்ந்த சூறாவளிகள் தாக்கியதில் 5 பேர் பலியாகினர், நூற்றுக்கணக்கானோர் காயம் அடைந்தனர்.
அமெரிக்காவின் மத்தியமேற்கு பகுதியை பல சக்திவாய்ந்த சூறாவளிகள் மற்றும் புயல் தாக்கின. புயல் மணிக்கு 111 கிமீ வேகத்தில் வீசியது. இதில் இன்டியானா, இலினாய்ஸ், கென்டுகி, வாஷிங்டன் ஆகியவை பாதிக்கப்பட்டுள்ளன. சூறாவளிகள் தாக்கியதில் நியூ மென்டனில் 2 பேர், வாஷிங்டனில் ஒருவர் உள்பட 5 பேர் பலியாகினர்.
சூறாவளி தாக்கியபோது பண்ணை வீட்டில் இருந்த ஜோசப் ஹாய்(80) பலியாகினார். காயம் அடைந்த அவரது தங்கை பிரான்செஸ்(78) மருத்துவமனையில் மரணம் அடைந்தார்.

சூறாவளியின் சீற்றித்தில் சிக்கி நூற்றுக்கணக்கானோர் காயம் அடைந்தனர். இந்நிலையில் பலி எண்ணிக்கை அதிகரிக்கும் என்று அஞ்சப்படுகிறது.
சூறாவளிகள் தாக்கியதில் இலினாய்ஸ், இன்டியானா மற்றும் கென்டுக்கியில் கட்டிடங்கள் சேதமடைந்தன. மேலும் விமான சேவை பெரிதும் பாதிக்கப்பட்டது. வாஷிங்டனில் வீட்டின் மேற்கூரைகள் அடித்துச் செல்லப்பட்டன, கார்கள் பலத்த சேதமடைந்தன.
முன்னதாக பல மாநிலங்களை புயல், சூறாவளிகள் தாக்கக்கூடும் என்று எச்சரிக்கை விடுக்கப்பட்டிருந்தது என்பது குறிப்பிடத்தக்கது.












Click it and Unblock the Notifications