எல்லை தாண்டி சென்ற கர்ப்பிணி பசுவுக்கு மரண தண்டனை.. விலக்கு அளிக்க சமூக வலைதளங்களில் கோரிக்கை!
ஐரோப்பாவில் எல்லை தாண்டி சென்ற கர்ப்பிணி பசுவுக்கு மரண தண்டனை விதிக்கப்பட்டுள்ள சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
Recommended Video

பல்கேரியா: ஐரோப்பாவில் எல்லை தாண்டி சென்ற கர்ப்பிணி பசுவுக்கு மரண தண்டனை விதிக்கப்பட்டுள்ள சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
ஐரோப்பாவில் ஐரோப்பிய ஆணைய வழிகாட்டுதலின் படி உரிய ஆவணம் இல்லாமல் எல்லைத் தாண்டினால் மரண தண்டனை விதிக்கப்படும் சட்டம் பின்பற்றப்பட்டு வருகிறது.
ஐரோப்பிய ஒன்றியத்தில் அங்கம் வகிக்கும் நாடுகளில் ஒன்று பல்கேரியா. பல்கேரிய எல்லைப் பகுதியில் அமைந்துள்ள கொபிலோவ்ட்சி கிராமத்தைச் சேர்ந்தவர் இவான் ஹரலம்பியேவ்.
|
பென்கா கர்ப்பிணி பசு
இவர் ஏராளமான பசுக்களையும், மாடுகளையும் வளர்த்து வருகிறார். இவரது மந்தையில் பென்கா என்ற கர்ப்பிணி பசுவும் உள்ளது.
|
எல்லை தாண்டிய பென்கா
இந்நிலையில் மேய்ச்சலுக்கு சென்ற பென்கா, பல்கேரிய எல்லையைத் தாண்டி செர்பியாவிற்குள் நுழைந்தது. செர்பியா ஐரோப்பிய ஒன்றியத்தில் இல்லாத நாடு ஆகும்.
|
மரண தண்டனை விதிப்பு
இதையடுத்து ஐரோப்பிய அதிகாரிகள் எல்லைத் தாண்டிய கர்ப்பிணி பசுவான பென்காவிற்கு மரண தண்டனை விதித்துள்ளனர். இந்நிலையில் எல்லை தாண்டிய காரணத்துக்காக பசுவுக்கு மரணதண்டனை விதிக்கப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
|
பிரசவத்திற்கு 3 வாரங்கள்
பென்காவிற்கு பிரசவத்திற்கு இன்னும் 3 வாரங்களே உள்ளது. இதனால் அந்த பசு தற்போது உரிமையாளரான இவான் ஹரலம்பியேவிடம் உள்ளது.

விலக்கு அளிக்க கோரிக்கை
பென்காவிற்கு மரண தண்டனை விதிக்கப்பட்டிருப்பதற்கு பல்வேறு தரப்பினரும் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர். மேலும் கர்ப்பிணியான பென்காவின் நிலையை கருத்தில் கொண்டு ஐரோப்பிய பாராளுமன்றம் மரண தண்டனையில் இருந்து விலக்கு அளிக்க வேண்டும் என சமூக வலைதளங்களில் ஆதரவு திரட்டப்பட்டு வருகிறது.












Click it and Unblock the Notifications