துபாயில் நடந்த கார்ஸ் பிரிமியர் லீக் 2014: கோப்பையை வென்ற தேரா வொர்க்ஷாப் வாரியர்ஸ்
துபாய்: துபாய் ஈடிஏ கார்ஸ் நிறுவனம் நடத்திய கார்ஸ் பிரிமியர் லீக் 2014 கிரிக்கெட் போட்டியின் இறுதி ஆட்டம் கடந்த 28ம் தேதி அஜ்மான் அஸ்கான் ஃபார்ம் வொர்க் டிவிஷன் கிரவுண்டில் நடைபெற்றது.
ஊழியர்களை உற்சாகப்பட்டுத்தும் விதமாக நான்காவது ஆண்டாக இந்த கிரிக்கெட் போட்டிகள் நடத்தப்பட்டு வருகிறது.

ஷார்ஜா சிட்டி சேலஞ்சர்ஸ், வெஸ்டர்ன் ரிபெல்ஸ், தேரா வொர்க்ஷாப் வாரியர்ஸ், ஃபுஜைரா சூப்பர் கிங்ஸ் உள்ளிட்ட பல்வேறு அணிகள் பங்கேற்ற கிரிக்கெட் போட்டியில் தேரா வொர்க்ஷாப் வாரியர்ஸ் இறுதிப் போட்டியில் வெஸ்டர்ன் ரிபெல்ஸ் அணியினை 25 ரன்கள் வித்தியாசத்தில் வென்று கார்ஸ் பிரிமியர் லீக் 2014க்கான கோப்பையினை வென்றது.

கார்ஸ் குழும பொது மேலாளர் வலித் அல் அமீன் தத்தை, பொது மேலாளர் நிதீன் கந்வலே, துணைப் பொது மேலாளர் ஹபிபுல்லா, மனிதவள மேம்பாட்டுத்துறை துணைப் பொது மேலாளர் காதர் மொஹிதீன், துணைப் பொது மேலாளர் முஹம்மது ஹுசைன், மேலாளர் டாம்னிக் உள்ளிட்டோர் முன்னிலையில் பரிசுகள் வழங்கப்பட்டன.
தேரா வொர்க்ஷாப் வாரியர்ஸுக்கு வெற்றிக் கோப்பையினை கார்ஸ் குழும பொது மேலாளர் வலித் அல் அமீன் தத்தை வழங்கினார்.

அஸ்கான் மேலாளர் டொனால்டுக்கு நினைவுப் பரிசு வழங்கப்பட்டது. கார்ஸ் குழும பொது மேலாளர் வலித் அல் அமீன் தத்தை தனது தலைமையுரையில் அனைத்து ஆட்டக்காரர்களையும் ஏற்பாட்டாளர்களையும் பாராட்டினார்.
நலத்துறை அலுவலர் அப்துல் கனி நன்றி கூறினார்.












Click it and Unblock the Notifications