தேவ்யானி மீதான விசா மோசடி குற்றச்சாட்டை ரத்து செய்து அமெரிக்க கோர்ட் உத்தரவு
நியூயார்க்: முன்னாள் இந்தியத் துணைத் தூதர் தேவ்யானி மீதான விசா மோசடி குற்றச்சாட்டை ரத்து செய்து அமெரிக்க நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
அமெரிக்காவிற்கான இந்தியத் துணைத் தூதராக பணியாற்றி வந்தவர் தேவயானி கோப்ரகடே (வயது 39). இவர் இந்தியாவில் இருந்து அழைத்து வந்த தனது பணிப்பெண்ணின் விசா விண்ணப்பத்தில் தவறான தகவல்கள், வாக்குமூலம் அளித்து மோசடியில் ஈடுபட்டதாக குற்றச்சாட்டு எழுந்தது.

அதனைத் தொடர்ந்து கடந்தாண்டு தனது பிள்ளைகளைப் பள்ளியில் விட ச் சென்ற போது, பொது இடத்தில் வைத்து கைது செய்யப் பட்டார் தேவ்யானி. கை விலங்கிட்டு, ஆடை அவிழ்த்து சோதனை செய்து அவர் அவமதிக்கப்பட்டார். இந்தியத் துணைத் தூதரை அமெரிக்கா இவ்வாறு நடத்தியதற்கு இந்தியா தனது கடும் கண்டனத்தைத் தெரிவித்தது. இதனால் அமெரிக்க-இந்திய உறவில் விரிசல் விழும் நிலை ஏற்பட்டது.
ஆனபோதும் அமெரிக்கா தன் நிலையிலிருந்து மாறவில்லை. இந்நிலையில் தேவ்யானிக்கு முழுமையான சட்ட விலக்கு பாதுகாப்பு கிடைக்கத்தக்க விதத்தில் அவர் ஐ.நா.வில் இந்திய நிரந்தர தூதுக்குழுவின் ஆலோசகராக நியமிக்கப்பட்டார்.
இதையடுத்து அவருக்கு ஐ.நா. மற்றும் அமெரிக்கா இடையேயான தலைமையக உடன்படிக்கை பிரிவு 15-ன்படி சிறப்பு சலுகைகளும், விலக்கு உரிமைகளும் கடந்த 8-ந்தேதி வழங்கப்பட்டன.
இதற்கிடையே விசா மோசடி தொடர்பாக தேவ்யானி மீது நியூயார்க் நீதிமன்றத்தில் குற்றச்சாட்டுப் பதிவு செய்யப்பட்டது. அதன் தொடர்ச்சியாக தேவ்யானி, இந்தியா திரும்பவும் உத்தரவிடப்பட்டது. இதனால் தேவ்யானி தனது கணவர் மற்றும் குழந்தைகளைப் பிரிந்து தாயகம் திரும்பினார். அவர் நாடு திரும்பினாலும், அவர் மீதான குற்றச்சாட்டுக்கள் அப்படியே நிலுவையில் இருக்கும் என அமெரிக்க அரசு வக்கீல் பிரீத் பராரா தெரிவித்திருந்தார்.
இந்நிலையில் தற்போது அதிரடியாக அமெரிக்க நீதிமன்றம் தேவ்யானி கோப்ரகடே மீதான குற்றச்சட்டை ரத்து செய்து உத்தரவிட்டுள்ளது.
தேவ்யானி இந்தக் குற்றச்சாட்டிலிருந்து தப்பித்துக் கொண்ட போதும், தொடர்ந்து அவர் மேலும் பல புதிய குற்றச்சாட்டுக்களை சட்டப்படி சந்திக்க வேண்டி வரலாம் என அமெரிக்க வக்கீல் தெரிவித்துள்ளது குறிப்பிடத்தக்கது.
-
ஈரான் பந்தர் அப்பாஸில் அமெரிக்க தாக்குதல்.. வேலையை காட்டிய டிரம்ப்.. அப்போ அமைதி எல்லாம் கனவுதான் -
"AI தயாரித்த ரிப்போர்ட் போல உள்ளது.." கீழடி அறிக்கையை திருத்த சொன்ன மத்திய அரசுக்கு அமர்நாத் பதிலடி -
தமிழ்த்தாய் வாழ்த்து விவகாரத்தை கையில் எடுத்த விஜய்.. உள்துறை அமைச்சகத்திடம் சொல்லுங்க.. விஜய் வைத்த கோரிக்கை! -
வெறும் 10 நிமிடங்கள்தான்.. உடனே வெளியே வந்த விஜய்! மோடி உடனான சந்திப்பில் இப்படி நடந்ததே இல்லை! -
“காங்கிரஸ், கம்யூனிஸ்ட்களை விமர்சிக்க அவர்களுக்கு துணிச்சல் இல்லை”.. திருமாவளவன் அட்டாக்! -
டோட்டலாக தனிமைப்படுத்தப்பட்ட திமுக! உச்சக்கட்ட ஹேப்பியில் பாஜக.. தவெக விஜய் அரசுக்கு சிக்கலா? -
மோடி, நிர்மலா சீதாராமன் சந்திப்பின்போது.. கூடவே போன ஜோசியர்! சலசலப்பை கிளப்பிய விஜய்! -
97 ரன்களில் அவுட்.. ஒட்டுமொத்த மைதானமும் சோகம்.. உலக சாதனையை தவறவிட்ட வைபவ் சூர்யவன்ஷி! -
முதல்வர் விஜய்யை சந்திக்க நேரம் ஒதுக்காத அமித் ஷா.. என்ன நடந்தது? -
பிரதமர் மோடிக்கு நன்றி சொன்ன முதல்வர் விஜய்.. அதைவிட முக்கியம் 4 மேஜர் கோரிக்கைகள் -
"ஆர்.எஸ்.எஸ் பேரப்பிள்ளையாக மாறிய விசிக".. திருமா மீது பொன்.ராதாகிருஷ்ணன் கடும் தாக்கு! -
நிர்மலா சீதாராமனும் விஜய் கிட்ட அதையே சொல்வாரோ? 118 மேஜிக் நம்பர்.. தவெகவை அசைக்க முடியாத பின்னணி?












Click it and Unblock the Notifications