அமெரிக்க கார் நிறுவனத்தின் தலைமை நிதி அதிகாரியாகும் சென்னை பெண் திவ்யா சூர்யதேவரா.. யார் இவர்?
சென்னையை சேர்ந்த திவ்யா சூர்யதேவரா என்ற பெண் அமெரிக்க கார் நிறுவனத்தில் தலைமை நிதி அதிகாரியாக பொறுப்பேற்கவுள்ளார்.
வாஷிங்டன்: சென்னையை சேர்ந்த திவ்யா சூர்யதேவரா என்ற பெண் அமெரிக்க கார் நிறுவனத்தில் தலைமை நிதி அதிகாரியாக பொறுப்பேற்கவுள்ளார்.
இந்தியாவின் மற்றொரு பெருமைமிகு தருணமாக இது உள்ளது. மிகப்பெரிய கார் நிறுவனமான ஜெனரல் மோட்டார்ஸின் முதல் பெண் தலைமை நிதி அதிகாரியாக திவ்யா சூர்யதேவரா பதவியேற்கவுள்ளார்.

நிதி மந்திரவாதி என அறியப்படும் திவ்யா சூர்யதேவரா, தலைமை நிதி அதிகாரி பொறுப்பில் உள்ள சக் ஸ்டீவன்ஸ் செப்டம்பர் 1 ம் தேதி ஓய்வு பெறுவதை தொடர்ந்து அந்த பொறுப்பை வகிக்கவுள்ளார்.
திவ்யா சூர்யதேவரா மேரி பார்ராவின் வழியை பின்பற்றுவார். அவர் நிறுவனத்தின் முதல் தலைமை நிர்வாக அதிகாரியாக உள்ளார்.
திவ்யா இந்தியாவில் பிறந்து வளர்ந்தவர் ஆவார். சென்னை பல்கலை கழகத்தில் வர்த்தக படிப்பில் இளநிலை மற்றும் முதுநிலை பட்ட படிப்புகளை முடித்து உள்ளார்.
அவர் தனது 22வது வயதில் ஹார்வர்டு பல்கலை கழகத்தில் எம்.பி.ஏ. படிப்பதற்காக அமெரிக்காவுக்கு சென்றார். அங்கு எம்பிஏ படித்து முடித்தார்.
முதலில் முதலீட்டு வங்கியான யுபிஎஸ் வங்கியில் முதலில் பணியாற்றிய அவர், பின்னர் ஓராண்டு கழித்து தனது 25வது வயதில் ஜெனரல் மோட்டார்ஸ் நிறுவனத்தில் இணைந்தார்.
அதற்கு பின் திவ்யாவின் வாழ்வில் ஒரே ஏற்றம்தான். 2016ஆம் ஆண்டின் கிரெய்ன்ஸ் டெட்ராய்ட் பிஸ்னஸின் 40 வயதுக்கு உட்பட்ட 40 வெற்றியாளர் பட்டியலில் இடம்பிடித்தார் திவ்யா.
திவ்யாவின் அனுபவம் மற்றும் அவரது தலைமையின் பல முக்கிய பாத்திரங்கள் தங்களின் நிதி செயல்பாடுகள் முழுவதும் கடந்த பல வருடங்களாக வலுவான வர்த்தக முடிவுகளை எடுப்பதற்கு மிக நன்றாக அமைந்துள்ளது "என்று ஜெனரல் மோட்டார்ஸ் நிறுவனத்தின் தலைமை நிர்வாக அதிகாரி மேரி பார்ரா தெரிவித்தார்.
இந்த நிறுவனத்தின் தலைமை செயல் அதிகாரியாக இருப்பவரும் மேரி பார்ரா என்ற பெண் ஆவார். கடந்த 2014ம் ஆண்டில் இருந்து அவர் இந்த பதவியில் இருந்து வருகிறார்.
இதேபோன்று தலைமை நிதி அதிகாரியாகவும் ஒரு பெண் இருந்ததில்லை. 39 வயதான கடந்த 2017ம் ஆண்டில் இருந்து இந்நிறுவனத்தின் கார்ப்பரேட் நிதி பிரிவின் துணை தலைவராக திவ்யா இருந்து வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.
-
சிங்கப்பூரில் இந்தியாவை பாராட்டிய அமெரிக்க பாதுகாப்பு துறை அமைச்சர்.. வியந்து போய் சொன்ன விஷயம் -
ஈரானுடன் போர் நிறுத்தம்.. 14 பாயிண்ட்களை அடுக்கிய அமெரிக்கா! கையெழுத்து போடுவாரா டிரம்ப்? -
கத்திரி முடிந்தும்.. குறையாத வெப்பத்தின் தாக்கம்! 14 மாவட்டங்களில் செஞ்சுரி போட்ட வெயில்! -
வெயிலுக்கு இன்று ‘பிரேக்’.. சென்னை உட்பட பல மாவட்டங்களில் மழை பெய்ய வாய்ப்பு.. வானிலை மையம் அப்டேட்! -
பகலை விற்று வாங்கிய நள்ளிரவுப் பணம்! அமெரிக்க ஷிஃப்ட் வேலையின் உண்மையை உடைத்த புனே இளைஞர் -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக












Click it and Unblock the Notifications