கத்தாரில் பலாத்கார புகார் அளித்த நெதர்லாந்து பெண்ணுக்கு ரூ. 54,000 அபராதம்
தோஹா: பாலியல் பலாத்கார புகார் அளித்த பெண் கள்ளத்தனமாக உறவு வைத்துக் கொண்டதாகக் கூறி அவருக்கு தோஹா நீதிமன்றம் ரூ. 54 ஆயிரம் அபராதம் விதித்துள்ளது.
நெதர்லாந்தை சேர்ந்தவர் லாரா(22). அவர் விடுமுறையை கழிக்க கத்தாருக்கு சென்றார். கடந்த மார்ச் மாதம் தோஹா நகரில் உள்ள ஹோட்டல் ஒன்றுக்கு சென்றார். அங்கே அவர் அருந்திய மதுவில் மயக்க மருந்து கலந்ததாக கூறப்படுகிறது.

மறுநாள் காலையில் கண்விழித்தபோது லாரா சிரியாவை சேர்ந்த உமர் அப்துல்லா அல் ஹஸன் என்பவரின் வீட்டில் இருந்தார். அவர் பலாத்காரம் செய்யப்பட்டிருந்தார். இது குறித்து அவர் போலீசில் புகார் அளிக்க போலீசாரோ கள்ளத்தனமான செக்ஸ் வைத்துக் கொண்டதாகக் கூறி லாராவை கைது செய்தனர்.
இந்த வழக்கு தோஹா நீதிமன்றத்தில் நடைபெற்று வந்தது. இந்நிலையில் நேற்று தீர்ப்பு அளிக்கப்பட்டது. கள்ளத்தனமாக செக்ஸ் வைத்துக் கொண்ட லாராவுக்கு ரூ.54 ஆயிரம் அபராதம் விதிக்கப்பட்டுள்ளதுடன் அவர் அந்த தொகையை செலுத்தியவுடன் நாடு கடத்தப்பட உள்ளார்.
மேலும் அப்துல்லாவுக்கு 100 கசையடி கொடுக்க நீதிமன்றம் உத்தரவிட்டது. இது தவிர மது அருந்தியதற்காக அப்துல்லாவுக்கு மேலும் 40 கசையடி வழங்கவும் உத்தரவிடப்பட்டுள்ளது. தண்டனை நிறைவேற்றப்பட்ட பிறகு அப்துல்லாவும் நாடு கடத்தப்பட உள்ளார்.
இந்நிலையில் தனது மகள் விடுதலையாகி நாடு திரும்ப உள்ளதை நினைத்து மகிழ்ச்சி அடைந்துள்ளார் லாராவின் தாய்.
-
ஆபாசம்.. ஆபாசம்.. யூடியூபர்கள் கிருஷ் ஐஷ்வர்யா மீது கோவை சைபர் க்ரைம் போலீஸில் புகார் -
சென்னையில் நாளை மாலை ‘GenZ DMK’ பிரம்மாண்ட நிகழ்ச்சி.. களமிறங்கும் திமுக உணர்வுள்ள இளைஞர்கள்! -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக -
விசில் அடித்து முன்னேறும் கர்நாடகா, ஆந்திரா.. இனி தமிழ்நாடு வேடிக்கை பார்க்கணும்! விஜய் போட்ட பிரேக் -
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
சிவகுமார் போட்ட மாஸ்டர் ஸ்கெட்ச்.. ராகுலுக்கு நேரமில்லை? டெல்லியில் மிஸ்டர் விஜய்னு கூப்பிட்டது யாரு -
GH-ல் கடைநிலை ஊழியர்கள் மீது நடவடிக்கை எடுத்த ரமேஷுக்கு அர்ச்சகர்கள் மீது ஆக்ஷன் எடுக்க தாமதம் ஏன்? -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பூந்தமல்லி டூ வடபழனி இனி 20 நிமிடங்களில்.. ஆளில்லா மெட்ரோ ரயில் சேவைக்கு கிடைத்த பச்சை சிக்னல் -
மாடுகளை பலியிட தடை.. நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு! விஜய்க்கு சிபிஎம் வைத்த முக்கிய கோரிக்கை!












Click it and Unblock the Notifications