சாவு பயத்தில் பாக்... எங்க இருந்து அடிக்கிறாங்கன்னே தெரியல! ராவல்பிண்டி மைதானத்தில் ட்ரோன் அட்டாக்
இஸ்லாமாபாத்: நம் நாட்டில் ஐபிஎல் கிரிக்கெட் போட்டி நடைபெறுவது போல் பாகிஸ்தானில், பாகிஸ்தான் சூப்பர் லீக் கிரிக்கெட் போட்டிகள் நடைபெற உள்ளது. இன்று பெஷாவர் ஜல்மி - கராச்சி கிங்ஸ் அணிகளின் போட்டி நடைபெற இருந்த ராவல்பிண்டி கிரிக்கெட் மைதானத்தில் ட்ரோன் தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது. இதில் அந்த மைதானம் சேதமடைந்துள்ள நிலையில் பாகிஸ்தான் சாவு பயத்தில் பதறிப்போய் உள்ளது.
இந்தியா - பாகிஸ்தான் இடையேயான பதற்றம் என்பது தொடர்ந்து அதிகரித்து வருகிறது. பஹல்காம் தாக்குதலுக்கு பதிலடியாக நம் நாடு ஏவுகணைகள் மூலம் பாகிஸ்தானின் 9 பயங்கரவாத மையங்களை குறிவைத்து தாக்கியது. இதில் 70க்கும் அதிகமான பயங்கரவாதிகள் கொல்லப்பட்டனர்.

இதையடுத்து பாகிஸ்தான் நம் நாட்டை தாக்குவதாக அறிவித்து மீண்டும் அடாவடியில் ஈடுபட்டு வருகிறது. இந்நிலையில் தான் பாகிஸ்தான் நம் நாட்டின் 15 முக்கிய நகரங்களை குறிவைத்து ஏவுகணை தாக்குதல் நடத்த திட்டமிட்டது. இந்த ஏவுகணை தாக்குதல்களை நம் நாடு வெற்றிகரமாக முறியடித்துள்ளது.
இதையடுத்து மீண்டும் நம் நாடு பாகிஸ்தானுக்கு பதிலடி கொடுக்க தொடங்கி உள்ளது. அதன்படி சீனா தயாரிப்பான எச்க்யூ 9 ஏவுகணை தடுப்பு சிஸ்டம் பாகிஸ்தானின் லாகூரில் நிறுவப்பட்டு இருந்தது. இதனை இஸ்ரேல் நாட்டின் தயாரிக்கப்பட்ட HAROP ட்ரோன்கள் மூலம் தாக்கி அழிக்கப்பட்டுள்ளது. இந்த எச்க்யூ 9 ஏவுகணை தடுப்பு சிஸ்டம் என்பது ட்ரோன், ஏவுகணை, போர் விமானங்களை அடையாளம் கண்டு அழிக்கும் அமைப்பாக செயல்பட்டு வந்த நிலையில் அதனை சோலியை முடித்துள்ளது நம் நாடு. மேலும் இந்த தாக்குதலில் 4 ராணுவ வீரர்கள் காயமடைந்தனர்.
அதுமட்டுமின்றி நம் நாட்டின் பல்வேறு நகரங்களில் ஐபிஎல் கிரிக்கெட் போட்டிகள் நடந்து வருகின்றன. அதேபோல் பாகிஸ்தானில் , பாகிஸ்தான் சூப்பர் லீக் என்ற பெயரில் போட்டிகள் நடந்து வருகின்றன. இன்று இரவு 8 மணிக்கு ராவல்பிண்டியில் உள்ள கிரிக்கெட் மைதானத்தில் பெஷாவர்
ஜால்மி மற்றும் கராச்சி கிங்ஸ் அணிகள் இடையேயான போட்டி நடைபெற இருந்தது.
இந்த போட்டிக்கு நடுவே தான் இன்று ராவல்பிண்டி கிரிக்கெட் மைதானத்தில் ட்ரோன் தாக்குதல் என்பது நடத்தப்பட்டுள்ளது. வானில் பறந்து வந்த ட்ரோன் மைதானத்தின் ஒருபகுதியாக இருந்த ரெஸ்டாரண்ட்டின் மீது தாக்குதல் நடத்தி உள்ளது. இந்த தாக்குதலில் கிரிக்கெட் மைதானத்தின் ஒரு பகுதி முற்றிலுமாக சேதமடைந்துள்ளது. இதனால் ராவல்பிண்டி மைதானத்தில் பெரும் பதற்றம் ஏற்பட்டுள்ளது. அங்கு போட்டி நடைபெறுவதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது.
இருப்பினும் இந்த ட்ரோன் தாக்குதலை இன்னும் இந்தியா உறுதி செய்யவில்லை. அதேபோல் பாகிஸ்தான் தரப்பிலும் இந்த ட்ரோன் தாக்குதல் குறித்து எந்த அப்டேட்டுகளும் தரப்படவில்லை. முன்னதாக பாகிஸ்தான் ராணுவத்தின் செய்தி தொடர்பாளர் லெப்டினன்ட் ஜெனரல் அகமது ஷரீப் சவுத்ரி கூறுகையில், ‛‛லாகூர், குஜ்ரன்வாலா, சக்வாலா, பஹவல்பூர், மியானா, கராச்சி, சோர், ராவல்பிண்டி, மற்றும் அடோக் உள்ளிட்ட இடங்களில் பறந்து வந்த ட்ரோன்கள் அழிக்கப்பட்டுள்ளன'' என்று கூறியிருந்தார்.
-
தடுமாறுதே தங்க சந்தை.. மாறி மாறி சரிந்து எகிறும் தங்கத்தின் விலை! இப்போ வாங்கலாமா? வேண்டாமா? -
இலங்கைக்கு இந்தியா வழங்கிய 38,000 டன் பெட்ரோல், டீசல்.. நெகிழ்ந்து போன இலங்கை அதிபர் -
கச்சா எண்ணெயிலிருந்து எல்பிஜி தயாரிக்க முடியாதா? மீண்டும் மண்ணெண்ணெய் விற்பனை! இந்தியாவுக்கு சிக்கல் -
இந்தியாவில் அந்த பாம்பு இங்கே தான் ஒளிஞ்சிருக்கா? நாட்டின் மிகப்பெரிய சாதனை.. கீல்பேக் வெல்கம் பேக் -
வயிறு எரியுது..1 டீ 25 ரூபாயா? ரூ.40க்கு விற்கப்படும் இட்லி வடை! 6,000ஐ தாண்டிய வணிக கேஸ் சிலிண்டர்! -
பெட்ரோல் விலை பிச்சுகிட்டு போக போகுது..வேலையைக் காட்டிய ரஷ்யா! இந்தியாவுக்கு காத்திருக்கும் சிக்கல்! -
ஈரான் காட்டிய பச்சைக்கொடி.. ஹார்முஸ் ஜலசந்தியை கடந்த 2 எல்பிஜி கப்பல்கள்.. கெத்து காட்டும் இந்தியா! -
வங்கி கணக்கில் வந்து விழுந்த ரூ.10 கோடி.. "வேண்டாம்" என திருப்பி கொடுத்த பெண்! என்ன காரணம் தெரியுமா -
பெட்ரோல், டீசலுக்கு தட்டுப்பாடு என வட மாநிலங்களில் பரவும் வதந்தி..பங்குகளை நோக்கி படையெடுத்த மக்கள்! -
சென்னை மாணவி தடா அருவிக்கு நண்பர்களுடன் ஜாலியாக சுற்றுலா.. கற்பனையில் நினைக்காத சம்பவம் -
கூட்டுறவு வங்கி நகைக்கடன் தள்ளுபடி உற்சாகம்.. LIC பாலிசிதாரர்களுக்கு காத்திருக்கும் அந்த ஒரு ரகசியம் -
தமிழ் புத்தாண்டில் ஜாக்பாட் அடிக்கப்போகும் 3 லக்கி ராசிகள்.. லிஸ்ட்ல உங்க ராசி இருக்கா பாருங்க










Click it and Unblock the Notifications