Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

சாவு பயத்தில் பாக்... எங்க இருந்து அடிக்கிறாங்கன்னே தெரியல! ராவல்பிண்டி மைதானத்தில் ட்ரோன் அட்டாக்

Subscribe to Oneindia Tamil

இஸ்லாமாபாத்: நம் நாட்டில் ஐபிஎல் கிரிக்கெட் போட்டி நடைபெறுவது போல் பாகிஸ்தானில், பாகிஸ்தான் சூப்பர் லீக் கிரிக்கெட் போட்டிகள் நடைபெற உள்ளது. இன்று பெஷாவர் ஜல்மி - கராச்சி கிங்ஸ் அணிகளின் போட்டி நடைபெற இருந்த ராவல்பிண்டி கிரிக்கெட் மைதானத்தில் ட்ரோன் தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது. இதில் அந்த மைதானம் சேதமடைந்துள்ள நிலையில் பாகிஸ்தான் சாவு பயத்தில் பதறிப்போய் உள்ளது.

இந்தியா - பாகிஸ்தான் இடையேயான பதற்றம் என்பது தொடர்ந்து அதிகரித்து வருகிறது. பஹல்காம் தாக்குதலுக்கு பதிலடியாக நம் நாடு ஏவுகணைகள் மூலம் பாகிஸ்தானின் 9 பயங்கரவாத மையங்களை குறிவைத்து தாக்கியது. இதில் 70க்கும் அதிகமான பயங்கரவாதிகள் கொல்லப்பட்டனர்.

drone-hits-rawalpindi-stadium-hours-before-pakistan-super-league-match-between-peshawar-zalmi-and-k

இதையடுத்து பாகிஸ்தான் நம் நாட்டை தாக்குவதாக அறிவித்து மீண்டும் அடாவடியில் ஈடுபட்டு வருகிறது. இந்நிலையில் தான் பாகிஸ்தான் நம் நாட்டின் 15 முக்கிய நகரங்களை குறிவைத்து ஏவுகணை தாக்குதல் நடத்த திட்டமிட்டது. இந்த ஏவுகணை தாக்குதல்களை நம் நாடு வெற்றிகரமாக முறியடித்துள்ளது.

இதையடுத்து மீண்டும் நம் நாடு பாகிஸ்தானுக்கு பதிலடி கொடுக்க தொடங்கி உள்ளது. அதன்படி சீனா தயாரிப்பான எச்க்யூ 9 ஏவுகணை தடுப்பு சிஸ்டம் பாகிஸ்தானின் லாகூரில் நிறுவப்பட்டு இருந்தது. இதனை இஸ்ரேல் நாட்டின் தயாரிக்கப்பட்ட HAROP ட்ரோன்கள் மூலம் தாக்கி அழிக்கப்பட்டுள்ளது. இந்த எச்க்யூ 9 ஏவுகணை தடுப்பு சிஸ்டம் என்பது ட்ரோன், ஏவுகணை, போர் விமானங்களை அடையாளம் கண்டு அழிக்கும் அமைப்பாக செயல்பட்டு வந்த நிலையில் அதனை சோலியை முடித்துள்ளது நம் நாடு. மேலும் இந்த தாக்குதலில் 4 ராணுவ வீரர்கள் காயமடைந்தனர்.

அதுமட்டுமின்றி நம் நாட்டின் பல்வேறு நகரங்களில் ஐபிஎல் கிரிக்கெட் போட்டிகள் நடந்து வருகின்றன. அதேபோல் பாகிஸ்தானில் , பாகிஸ்தான் சூப்பர் லீக் என்ற பெயரில் போட்டிகள் நடந்து வருகின்றன. இன்று இரவு 8 மணிக்கு ராவல்பிண்டியில் உள்ள கிரிக்கெட் மைதானத்தில் பெஷாவர்
ஜால்மி மற்றும் கராச்சி கிங்ஸ் அணிகள் இடையேயான போட்டி நடைபெற இருந்தது.

இந்த போட்டிக்கு நடுவே தான் இன்று ராவல்பிண்டி கிரிக்கெட் மைதானத்தில் ட்ரோன் தாக்குதல் என்பது நடத்தப்பட்டுள்ளது. வானில் பறந்து வந்த ட்ரோன் மைதானத்தின் ஒருபகுதியாக இருந்த ரெஸ்டாரண்ட்டின் மீது தாக்குதல் நடத்தி உள்ளது. இந்த தாக்குதலில் கிரிக்கெட் மைதானத்தின் ஒரு பகுதி முற்றிலுமாக சேதமடைந்துள்ளது. இதனால் ராவல்பிண்டி மைதானத்தில் பெரும் பதற்றம் ஏற்பட்டுள்ளது. அங்கு போட்டி நடைபெறுவதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது.

இருப்பினும் இந்த ட்ரோன் தாக்குதலை இன்னும் இந்தியா உறுதி செய்யவில்லை. அதேபோல் பாகிஸ்தான் தரப்பிலும் இந்த ட்ரோன் தாக்குதல் குறித்து எந்த அப்டேட்டுகளும் தரப்படவில்லை. முன்னதாக பாகிஸ்தான் ராணுவத்தின் செய்தி தொடர்பாளர் லெப்டினன்ட் ஜெனரல் அகமது ஷரீப் சவுத்ரி கூறுகையில், ‛‛லாகூர், குஜ்ரன்வாலா, சக்வாலா, பஹவல்பூர், மியானா, கராச்சி, சோர், ராவல்பிண்டி, மற்றும் அடோக் உள்ளிட்ட இடங்களில் பறந்து வந்த ட்ரோன்கள் அழிக்கப்பட்டுள்ளன'' என்று கூறியிருந்தார்.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+