தற்கொலை முயற்சி... குடித்து விட்டு 29வது மாடிச் சுவற்றின் விளிம்பில் படுத்து தூங்கிய நபர் மீட்பு!
சீனாவில் போதையில் 29வது மாடி சுவற்றின் விளிம்பில் படுத்துத் தூங்கிய நபர் பத்திரமாக மீட்கப்பட்டுள்ளார்.
பெய்ஜிங்: சீனாவில் மதுபோதையில் 29வது மாடி சுவற்றின் விளிம்பில் படுத்துத் தூங்கிய நபரை, போலீசார் பத்திரமாக மீட்டுள்ளனர்.
கடந்த சில நாட்களுக்கு முன்னர் சீனாவின் ஷாங்காய் மாகாணத்தில் உள்ள சியான் போலீசாருக்கு அவசர தொலைபேசி அழைப்பு ஒன்று வந்தது. அதில் பேசிய நபர், 'அருகில் உள்ள 29 மாடிக் கட்டிடத்தின் மொட்டை மாடி சுவற்றின் விளிம்பில் ஒரு நபர் படுத்துத் தூங்குவதாக’ தெரிவித்துள்ளார்.

தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்து சென்ற போலீசார், தீயணைப்புத் துறை வீரர்கள் உதவியுடன் அந்நபரை பத்திரமாக மீட்டனர். போலீசாரின் விசாரணையில் அந்நபர் அப்போது அதிக மது போதையில் இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது.
போதையில் எங்கே படுத்திருக்கிறோம் என்பதைத் தெரியாமல் அந்நபர் அங்கு தூங்கினாரா அல்லது தற்கொலை செய்து கொள்வதற்காக அங்கு அவர் சென்றாரா என்பது தெரியவில்லை.
'தற்கொலை செய்து கொள்ளும் எண்ணத்துடன் குடித்து விட்டு, தூக்கத்திலேயே மாடியில் இருந்து விழுந்துவிட வேண்டும் என அந்நபர் நினைத்திருக்கக்கூடும், ஆனால் அவரது குட்டித் தூக்கமே அவரைக் காப்பாற்றி விட்டது’ என இச்சம்பவம் குறித்து அப்பகுதி மக்கள் கருத்துத் தெரிவித்துள்ளனர்.

ஆனால், தூக்கத்தில் சிறிது லேசாக அசைந்திருந்தால்கூட அவர் மாடியில் இருந்து விழுந்திருப்பார். அதிர்ஷ்டவசமாக குடி போதையால் அவர் அசந்து தூங்கி விட்டார். அவரை போலீசார் பத்திரமாக மீட்டு விட்டனர்’ என அந்நாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
சமீபகாலமாக சீனாவில் மாடியில் இருந்து குதித்து தற்கொலைக்கு முயற்சிப்பவர்களை மீட்புக் குழுவினர் பத்திரமாக மீட்கும் வீடியோக்கள் அதிகளவில் இணையத்தில் உலா வருகின்றன என்பது குறிப்பிடத்தக்கது.
-
சீனாவில் ஆடு மேய்க்கும் வேலைக்கு மாதம் 1 லட்சம் சம்பளம்! பண்ணையில் திரளும் பட்டதாரிகள்! பின்னணி என்ன -
யூ-டர்ன் அடிக்கும் விஜய்.. டெல்லி-க்கு மீண்டும் பயணம்.. சொன்னது யார் தெரியுமா? -
பாஜகவில் இருந்து விலகி அண்ணாமலை தனிக்கட்சி தொடங்குகிறார்? ரஜினி ஆதரவுடன் திருச்சி கிழக்கில் போட்டி? -
ஆபாசம்.. ஆபாசம்.. யூடியூபர்கள் கிருஷ் ஐஷ்வர்யா மீது கோவை சைபர் க்ரைம் போலீஸில் புகார் -
சென்னையில் நாளை மாலை ‘GenZ DMK’ பிரம்மாண்ட நிகழ்ச்சி.. களமிறங்கும் திமுக உணர்வுள்ள இளைஞர்கள்! -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக -
விசில் அடித்து முன்னேறும் கர்நாடகா, ஆந்திரா.. இனி தமிழ்நாடு வேடிக்கை பார்க்கணும்! விஜய் போட்ட பிரேக் -
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
சிவகுமார் போட்ட மாஸ்டர் ஸ்கெட்ச்.. ராகுலுக்கு நேரமில்லை? டெல்லியில் மிஸ்டர் விஜய்னு கூப்பிட்டது யாரு -
GH-ல் கடைநிலை ஊழியர்கள் மீது நடவடிக்கை எடுத்த ரமேஷுக்கு அர்ச்சகர்கள் மீது ஆக்ஷன் எடுக்க தாமதம் ஏன்?












Click it and Unblock the Notifications