ஈரானில் சக்திவாய்ந்த நிலநடுக்கம்- ரிக்டரில் 5.1 ஆக பதிவு 2 பேர் பலி; 22 பேர் படுகாயம்
டெஹ்ரான்: ஈரானில் இன்று சக்திவாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டதில் 2 பேர் பலியாகி உள்ளனர். 22 பேர் படுகாயமடைந்துள்ளனர்.
வடக்கு ஈரான் பகுதியில் இன்று அதிகாலை 1 மணி அளவில் சக்தி வாய்ந்த நிலநடுக்கம் உணரப்பட்டது. இதனால் அச்சமடைந்த மக்கள் வீடுகளை விட்டு வெளியேறி பாதுகாப்பான இடங்களுக்கு சென்றனர்.

ரிக்டரில் 5.1 ஆக இந்த நிலநடுக்கம் பதிவாகி இருந்தது. நிலநடுக்கத்தின் போது அச்சத்தால் 21 வயது இளம் பெண் ஒருவரும் 60 வயது முதியவர் ஒருவரும் மாரடைப்பு ஏற்பட்டு உயிரிழந்துள்ளனர். மேலும் 22 பேர் படுகாயமடைந்துள்ளனர்.
டெஹ்ரானின் வடகிழக்குப் பக்தியான டமாவாந்த்தை மையமாக கொண்டு இந்த நிலநடுக்கம் ஏற்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. தங்களது வீடுகளின் அடித்தளம் மிகவும் பயங்கரமாக குலுங்கியதாக டெஹ்ரான்வாசிகள் ஊடகங்களிடம் கருத்து தெரிவித்திருக்கின்றனர்.
மேலும் நிலநடுக்கம் தொடர்பான வீடியோ, படங்களை சமூக வலைதளங்களில் பதிவிட்டும் வருகின்றனர். நிலநடுக்கத்துக்குப் பின்னரும் அதிர்வுகள் உணரப்பட்டன.
வீடுகளை விட்டு வீதிகளில் தஞ்சம் அடைந்திருக்கும் பொதுமக்கள் அங்கும் உரிய தனிநபர் இடைவெளியை பின்பற்ற வேண்டும் என்று அரசு அதிகாரிகள் வேண்டுகோள் விடுத்துள்ளனர். ஈரானில் கொரோனா பாதிப்பால் 6,500 பேர் உயிரிழந்துள்ளனர். சுமார் 1 லட்சம் பேர் பாதிக்கப்பட்டுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.
-
மீண்டும் வெடிக்கும் போர்.. இரவோடு இரவாக பாய்ந்த ஏவுகணைகள்! அமெரிக்க தளங்களை குறிவைத்து தூக்கிய ஈரான் -
ஸ்டாலின் மீதிருந்த கோபம்.. தவெகவிற்கு தாவுகிறார் திமுகவின் இளம் நம்பிக்கை? பெரிய டீமும் போகுது -
கூட்டுறவு வங்கி நகைக்கடன் வாங்கியோருக்கு குட் நியூஸ்! பணம் கட்டலயா? ஏலத்திலிருந்து நகை மீட்க ஈஸி வழி -
மாமூல் தொல்லையில் இருந்து முதல்வர் விஜய் எங்களை காப்பாற்றிவிட்டார்.. டாஸ்மாக் பணியாளர் சங்கம் -
ரூட்டை மாற்றிய இந்திய ஐடி நிறுவனங்கள்.. இனியும் சும்மா இருந்தா வேலைக்கு ஆகாது! -
"முதலமைச்சருக்கு நன்றி.. ஆனால்! எதிரியின் எதிரி நண்பனா? விஜய் ரசிகர்கள் குறித்து பேசிய அஜித் சகோதரர் -
வீரமணி ஒரே போடு.. திருச்சியில் முதலமைச்சர் விஜய் பேசிய அந்த பேச்சால் மொத்த பேருக்கும் முகச்சுளிப்பு? -
இன்பதுரை வெற்றி செல்லாது என்ற தீர்ப்பால் அடுத்து என்ன நடக்கும்? முன்னாள் சபாநாயகர் அப்பாவு விளக்கம் -
விஜய்யின் ஆலோசகர் + 2 அமைச்சர்களால் நேர்ந்த அவமானம்.. சட்டசபை செயலாளர் சீனிவாசன் பதவி விலகியது ஏன்? -
கோவையில் அருவியாக மாறிய மேம்பாலம் .. மேட்டுப்பாளையம் ஊட்டி செல்லும் வழியில் மாறிய காட்சி -
திடீரென டெல்லியில் டிஜிபி சந்தீப் ராய் ரத்தோர்.. அமித்ஷா – உள்துறை செயலாளருடன் சந்திப்பு.. பின்னணி -
75 பவுன்ஸ் ஆன செக்குகள்.. நடிகர் கரண் வாழ்க்கையை கெடுத்தது அந்த பெண்ணா? உண்மையை உடைத்த பிரபலம்












Click it and Unblock the Notifications