மீண்டும் சிலியை உலுக்கிய பயங்கர நிலநடுக்கம்... ரிக்டரில் 6.8ஆக பதிவு
Subscribe to Oneindia Tamil
சான்டியாகோ: சிலி நாட்டில் மீண்டும் பயங்கர நிலநடுக்கம் இன்று ஏற்பட்டது. ரிக்டரில் இது 6.8 அலகுகளாக பதிவாகி இருந்தது.
சிலி நாட்டில் கடந்த செப்டம்பர் மாதம் அதிக சக்திவாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டது. ரிக்டரில் 8.8ஆக அது பதிவானது. இந்த நிலநடுக்கம் 16 அடி சுனாமி அலைகளை ஏற்படுத்தியது. இதில் 11 பேர் பலியாகி இருந்தனர்.

இந்நிலையில் சிலியில் மீண்டும் பயங்கர நிலநடுக்கம் உணரப்பட்டது. இது துறைமுக நகரான காக்கிம்போவிற்கு தெற்கில் 100 கி.மீட்டர் தொலைவில் மையம் கொண்டிருந்தது.
இந்த நிலநடுக்கத்தைத் தொடர்ந்து சுனாமி எச்சரிக்கை எதுவும் வெளியிடப்படவில்லை. சேத விவரங்கள் இன்னமும் வெளியாகவில்லை.












Click it and Unblock the Notifications