600 பேர் பலியான ஈக்வடார் பூகம்பம்... 2 வாரத்திற்குப்பின் 72 வயது முதியவர் உயிருடன் மீட்பு
குயட்டா: ஈக்வடார் பூகம்பத்தில் இடிபாடுகளுக்கு இடையே சிக்கிய 72 வயது முதியவரை, இரண்டு வாரத்திற்குப் பின் மீட்பு படையினர் உயிருடன் மீட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
மத்திய அமெரிக்க நாடான ஈக்வடாரின் கடந்த மாதம் 16ம் தேதி பயங்கர நிலநடுக்கம் ஏற்பட்டது. இதில் ஏராளமான கட்டிடங்கள் இழுந்து விழுந்தன. இந்த நிலநடுக்கத்தில் 600க்கும் மேற்பட்டோர் உயிரிழந்தனர். ஆயிரக்கணக்கானோர் காயம் அடைந்தனர். தொடர்ந்து நிலநடுக்கம் ஏற்பட்ட பகுதியில் மீட்புப் பணிகள் நடந்து வருகிறது.

ஈக்வடார் நாட்டினர் மட்டுமல்லாமல் வெளிநாடுகளில் இருந்தும் மீட்பு படைகள் அங்கு வந்துள்ளன. அதன்படி, அண்டை நாடான வெனிசுலாவில் இருந்து வந்த மீட்பு படையினர் மனாபி நகரில் மீட்பு பணிகளை செய்து வருகின்றனர்.
அப்போது, சுமார் 2 வாரங்களுக்குப் பின்னர் இடிபாடுகளுக்கு இடையே சிக்கியிருந்த 72 வயது முதியவர் ஒருவரை மீட்புப் படையினர் காப்பாற்றியுள்ளதாக அந்நாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
தற்போது அவர் சிகிச்சைக்காக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருப்பதாகவும், அவருக்கு சர்க்கரை நோய் மற்றும் சிறுநீரகப் பிரச்சினை இருப்பதாகவும் அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஆனால், இத்தகவலை சம்பந்தப்பட்ட முதியவரின் உறவினர்கள் மற்றும் அக்கம்பக்கத்தார் மறுத்துள்ளதாக மற்றொரு பத்திரிகை செய்தி வெளியிட்டுள்ளது.
பாதி இடிந்த நிலையில் இருந்த வீட்டில் அவர் தங்கியிருந்ததாகவும், தினமும் அவரை சந்தித்து, உணவு அளித்து வந்ததாகவும் அவர்கள் தெரிவித்துள்ளது.
-
எடப்பாடி அனுப்பிய மெசேஜ்.. சி.வி. சண்முகம் வீட்டில் உறுதிபடுத்திய கே.சி வீரமணி.. இணைகிறது அதிமுக -
நாளுக்கு நாள் மோசமாகும் இந்தியா.. குட்டி குட்டி நாடெல்லாம் நம்மை முந்திக்கொண்டு செல்கிறது! -
விஜய் நியமித்த 2 நாளில்.. IPS அருணை கோர்ட்டிலேயே காத்திருக்க சொன்ன நீதிபதி சுவாமிநாதன்.. ஏன்? -
420 யூனிட் ஓடியிருக்கிறது.. ஆனால் 200 யூனிட் கழிக்காமல் 100 யூனிட் கழித்தது ஏன்? விளக்கம் -
'நீங்க உம் மட்டும் கொட்டுங்க தெய்வமே.. மற்றதை நான் பார்த்துக்கிறேன்' தெறிக்கும் ஆதவ் அர்ஜுனா மீம்ஸ்! -
அவரை முதல்ல தூக்கணும்.. பிளான் போட்டு வேலை பார்த்த மூவர் அணி.. விஜய்க்கு எகிறிய பிரஷர்.. என்னாச்சு? -
கடைகளை மூடிய பணியாளர்கள்.. ஸ்தம்பித்த டாஸ்மாக்.. இரவோடு இரவாக அமைச்சர் விக்னேஷ் வெளியிட்ட அறிவிப்பு -
கோவை மக்களே 5 ஆண்டுகளுக்கு பின் வந்த குட்நியூஸ்.. விஜய் கொடுத்த கிரீன் சிக்னல் - டூயல் கான்செப்ட் பஸ் ஸ்டாண்ட்! -
அப்பறம் வச்சிக்கிறேன்.. கடுப்பான விஜய்.. கோபத்தின் உச்சிக்கே போயிட்டாராமே.. அப்படி என்ன நடந்தது? -
இடைத்தேர்தலில் பொது வேட்பாளர்களை நிறுத்தி வெற்றி பெறச் செய்வோம்.. விஜய்க்கு அன்புமணி எச்சரிக்கை -
தமிழ்த்தாய் வாழ்த்து விவகாரத்தை கையில் எடுத்த விஜய்.. உள்துறை அமைச்சகத்திடம் சொல்லுங்க.. விஜய் வைத்த கோரிக்கை! -
எடப்பாடி வீட்டிற்கு வந்த எஸ்பி வேலுமணி.. சிவி சண்முகம் மட்டும் மிஸ்ஸிங்.. தனித்துவிடப்படுகிறாரா?












Click it and Unblock the Notifications