For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

ராஜபக்சே பேச எதிர்ப்பு: நியூயார்க்கில் ஐ.நா. முன்பாக தமிழர்கள் போராட்டம்!

By Mathi
Google Oneindia Tamil News

நியூயார்க்: ஐக்கிய நாடுகள் சபையில் இலங்கை அதிபர் மகிந்த ராஜபக்சே பேச எதிர்ப்பு தெரிவித்து நியூயார்க்கில் ஐ.நா. சபை முன்பாக தமிழர்கள் போராட்டம் நடத்தினர்.

ஐ.நா சபை பொதுக்கூட்டத்தில் இலங்கை அதிபர் மகிந்தா ராஜபக்சே பேசுவதற்கு எதிர்ப்பு தெரிவித்து, நியூயார்க்கில் உள்ள ஐ.நா. தலைமை அலுவலகம் முன் ஈழத் தமிழர்கள் பெருமளவில் திரண்டு வந்து போராட்டம் நடத்தி வருகின்றனர்.

Eelam Tamils in New York Protest against Rajapaksa

நாடு கடந்த தமிழீழ அரசாங்கத்தின் அழைப்பை ஏற்று அமெரி்க்காவின் பல்வேறு பகுதிகளில் இருந்தும், கனடாவில் இருந்து பேருந்துகள் மூலமும் தமிழர்கள் இந்த போராட்டத்தில் பங்கேற்றனர்.

ராஜபக்சே பேசுவதற்கு எதிர்ப்பு தெரிவிக்கும் வகையிலான வாசகங்கள் அடங்கிய பதாகைகளை கைகளில் ஏந்தியபடி தமிழர்கள் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனார். இப் போராட்டம் காரணமாக ஐ.நா. தலைமை அலுவலகம் அமைந்துள்ள பகுதியில் பலத்த பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.

English summary
Sri Lankan Tamils in New York Protest against Rajapaksa's Participation in UN Meet.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X