உணர்ச்சிகளைப் புரிந்து கொள்ளும் ரோபோக்கள் அடுத்த வருடம் விற்பனைக்கு வரும் – ஜப்பானில் அறிமுகம்
டோக்கியோ: மனித உணர்ச்சிகளை அறிந்துகொள்ளும் புதிய ரோபோ ஜப்பானில் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. உலகில் உள்ள மிகப்பெரிய ரோபோ சந்தைகளில் ஜப்பானும் ஒன்றாகும்.
கடந்த வருட கணக்கீட்டின்படி இந்நாட்டின் மொத்த வணிக சந்தை மதிப்பீடு 860 பில்லியன் யென்னாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

பிறப்பு விகிதம் குறைந்தும், வயதனவர்களின் மக்கள் தொகை அதிகரித்தும் காணப்படும் காலகட்டத்தில் ரோபோக்களின் தேவை இன்னமும் அதிகரித்து வருவதாகக் கூறப்படுகின்றது.
வயதானவர்களை கவனிக்க:
தொழிலாளர்களின் எண்ணிக்கை குறைந்து சம்பளவிகிதம் அதிகரித்து வருவதுமட்டுமின்றி, வீடுகளில் வயதானவர்களைக் கவனித்துக் கொள்ள வேண்டியும் இந்த ரோபோக்கள் அங்கு பயன்படுத்தப்படுகின்றன.
பெப்பர் ரோபோ:
இதுபோன்ற பயன்பாடுகளில் மனித உணர்ச்சிகளை அறிந்துகொள்ளும் பெப்பர் என்ற புதிய ரோபோவை ஜப்பானின் சாப்ட்பேங்க் நிறுவனம் அறிமுகப்படுத்தியுள்ளது.
உணர்வுகள் அறியும் ரோபோ:
செயற்கை நுண்ணறிவு அமைப்பும், உணர்ச்சிகளை அறியும் ஒரு புதிய தொழில்நுட்பமும் இதில் பயன்படுத்தப்படுவதால் இந்த ரோபோவினால் ஒருவரின் சைகைகள், உணர்ச்சி வெளிப்பாடுகள், குரல் தொனிகள் போன்றவற்றை அறிந்துகொள்ள இயலும் என்று அந்நிறுவனம் தெரிவித்துள்ளது.
திறமை வாய்ந்த ரோபோ:
இதனால் குடும்பத்தினரிடமும், நண்பர்களிடமும் தொடர்பு கொள்வதுபோல் இந்த ரோபோக்களிடமும் உணர்ச்சிகளை வெளிப்படுத்த முடியும் என்றும், அது பல்வேறு பணிகளையும் செய்யும் திறமை கொண்டது என்றும் சாப்ட்பேங்க் குறிப்பிட்டுள்ளது.1,98,000 யென் விலை கொண்ட இந்த ரோபோ அடுத்த வருடம் பொதுமக்களுக்கு விற்பனைக்கு வர உள்ளது.
இதயமும் உள்ள ரோபோ:
எந்த உணர்வுகளையும் வெளிப்படுத்தாமல் இருப்பவர்களை இதயமற்ற ரோபோக்கள் என்று மக்கள் குறிப்பிடுவதுண்டு. ஆனால் முதன்முறையாக உணர்ச்சிகளையும், இதயத்தையும் கொண்ட ரோபோ தங்களால் அறிமுகப்படுத்தப்படுகின்றது என்று இந்நிறுவனத்தின் தலைமை நிர்வாகியான மசயோஷி சோன் செய்தியாளர்களிடம் தெரிவித்தார்.
மாதிரி மக்கள் பார்வைக்கு:
இன்று முதல் தங்களுடைய விற்பனை நிலையங்களில் இந்த வகையான ரோபோக்களின் மாதிரிகளை காட்சிக்கு வைத்து வாடிக்கையாளர்களை அவற்றுடன் தொடர்புகொள்ள வைக்கும் திட்டத்தையும் இவர்கள் செயல்படுத்த உள்ளனர்.
-
மகளிருக்கு டபுள் ஜாக்பாட்.. மகளிர் உரிமை தொகை + ரூ.8000.. மொத்தம் ரூ.10,000! திமுக மெகா ப்ளான்! -
சென்னை எல்லையில் புது பேருந்து நிலையம்! பிரம்மாண்ட கிரீன்ஃபீல்ட் பஸ் ஸ்டாண்ட்! எங்க இருக்கு தெரியுமா -
2030-க்கு பிறகும் இந்திய IT துறை காணாமல் போய்விடும்.. டிசிஎஸ் சிஇஓ கிருதிவாசன் சொன்ன முக்கிய விஷயம்! -
"நீங்களே 4 முறை ஆர்எஸ்எஸ் நிகழ்ச்சிக்கு போனீங்கள்!" நீதிபதியை பார்த்து கெஜ்ரிவால் சொன்ன வார்த்தை! -
படுபாவி எதுக்கு வந்தீங்க? லெஃப்ட் ரைட் வாங்கிய ராமதாஸின் செல்ல மகள்! ஸ்டன்னாகி நின்ற ஜிகே மணி? -
அஜிதாவை திமுகவில் சேர்ப்பதற்கு முன்.. ஸ்டாலின் டீமிடம் இருந்து சென்ற வார்னிங்.. என்ன நடந்தது? -
நீலாங்கரை வீட்டில் ஏணி போட்டு காம்பவுண்ட் சுவரில் ஏறிய விஜய்! மரக்கிளையை பிடித்து கொண்டு செய்த செயல் -
சிறகடிக்க ஆசை: ரோகிணி சொன்ன ஒரே ஒரு உண்மை! விஜயா வசமா சிக்கியாச்சு.. அண்ணாமலை எடுத்த முடிவு -
திடீர் அதிமுக சப்போர்ட்.. என்னாச்சு திருமாவளவனுக்கு.. குழப்பி எடுக்கும் விசிக.. அறிவாலயம் குழப்பம்! -
தங்கம் விலையில் நடக்க போகும் சுனாமி.. எச்சரித்த பிரபல வங்கி.. கிராமிற்கு ரூ.2500க்கும் மேல் குறையும்.! -
தமிழ் புத்தாண்டு பலன் 2026: மேஷம் முதல் மீனம் வரை.. 12 ராசிகளுக்கான பலன்கள்.. யாருக்கு அதிர்ஷ்டம்? -
நல்ல பாம்பு கடித்த சிறுவனை கங்கையில் 12 மணி நேரம் மிதக்க விட்ட பெற்றோர்.. உடனே அதிசயம் நடந்ததா












Click it and Unblock the Notifications